முதுகுதண்டில் அறுவை சிகிச்சை; அமரீந்தர் சிங்கிடம் நலம் விசாரித்த பிரதமர்

பஞ்சாப்: முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமரீந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.  பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநில முன்னாள் முதல்வருமானவர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002-2007 மற்றும் 2017-2021 உட்பட 9 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமரீந்தர் சிங்குக்கு, முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது … Read more

நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழப்பச் சூழலில் … Read more

பலத்த காற்று வீசியதால் திடீரென பறந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை..!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வீசிய சூறைக்காற்றால் அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து சென்று விழுந்தது. கண்டி தேயிலை தொழிற்சாலை வழியாக சென்ற அந்த பேருந்தின் மேற்கூரை காற்றில் பிய்த்துக்கொண்டு, தொழிற்சாலை வாசலில் அமர்ந்திருந்த தேயிலை தொழிலாளர்கள் அருகே சென்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.   Source link

மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது; பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உயிர்த்துடிப்புள்ள ஜனநாயாகம் தான் இந்தியாவின் பெருமை என்று ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசினார். ஜெர்மனியின் முனிச் நகரில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியாதான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு … Read more

டெல்லியில் ரோபோ மூலம் தீயணைக்கும் முயற்சி வெற்றி – முதல்வர் கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் முதன் முறையாக ரோபோ உதவியுடன் குடோனில் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சமய்புர் பத்லி என்ற இடத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் அதிகாலை 2.18 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், முதன் முறையாக ரோபோ உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரோபோ உதவியுடன் மிக குறைந்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் … Read more

நகைக்கடை உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளுடன் தப்பிய கொள்ளையர்கள் – பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

பீகாரில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், உரிமையாளரையும் சுட்டுக்கொன்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாஜிப்பூர் நகரின் மையப்பகுதியான மதாய் சவுக்கில் உள்ள நகைக்கடைக்குள் கைத்துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி தாக்கினர். இதையடுத்து, நகைகளை கொள்ளையடித்த அவர்கள், அதனை தடுத்த உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.  

பஞ்சாப் இடைத்தேர்தல்: ஆம் ஆத்மிக்கு பின்னடைவு! முதல்வர் வசமிருந்த எம்.பி. தொகுதி பறிபோனது!

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் வசமிருந்த நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்ற பிறகு முதல் அமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றார். அவர் ஏற்கனவே சங்ரூர் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வந்ததால் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வராக பதவியேற்றார். இதனால் சங்ரூர் தொகுதியின் … Read more

முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பிரதானமாது ரஞ்சிக் கோப்பை தொடராகும். பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை 374 ரன்கள் எடுத்த நிலையில், மூன்று வீரர்களின் சதத்தால் மத்திய பிரதேசம் 536 ரன்கள் குவித்து பதிலடி தந்தது. 2-வது இன்னிங்சில் மும்பை 269 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன நிலையில், கடைசி நாளன்று மத்திய பிரதேசம் … Read more

எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகளில் கடுமையாகச் சரிவு ஏற்பட்டதால் எல்.ஐ.சி பங்கு வெளியீடு தள்ளிப்போனது. எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு (IPO) மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் … Read more

சிவசேனா அரசுக்கு எதிராக மேலும் ஒரு அமைச்சர் போர்க்கொடி..!

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சர், சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே 7 அமைச்சர்கள் கவுகாத்தி நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ள நிலையில், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உதய் சமந்த், ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏ நரேந்திர பாண்டேகரின் பிறந்தநாளை சக எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். Source link