தெலங்கானாவில் மரக் குடோனில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பரிதாப பலி
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத்தில் மரக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்படுள்ளார். செகுந்தராபாத்தின் பொய்குடா பகுதியில் ஒரு பழைய மரக்கடையில் அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 11 பேர் உடல் கருகி இறந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என்று காந்திநகர் சிறப்பு காவல் அதிகாரி மோகன் ராவ் தெரிவித்துள்ளார். … Read more