நான் "வெளியாள்" என்றால்.. வாரணாசியில் போட்டியிட்ட மோடி யார்?.. சத்ருகன் கேள்வி

மேற்கு வங்காள நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் என்னை வெளியாள் , வந்தேறி என்று பாஜகவினர் விமர்சிக்கின்றனர். அப்படியானால் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி யார் என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் நடிகர் சத்ருகன் சின்ஹா . ஆரம்பத்தில் பாஜக அனுதாபியாக இருந்தவர் சத்ருகன் சின்ஹா. பின்னர் காங்கிரஸ் பக்கம் போனார். இப்போது திரினமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவரை கட்சியில் இணைக்க பிரஷாந்த் கிஷோரின் முயற்சிகளே முக்கியக் காரணம். மமதா … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்திய மாணவர்களை ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் வான் எல்லை மூடப்பட்டதால் பக்கத்து நாடுகளான போலந்து, ஹங்கேரி, சுலோ வாக்கியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் விமானம், விமானப்படை மூலம் மீட்கப்பட்டனர். 2-வது கட்டமாக உக்ரைனில் இருந்து ரஷிய நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுகிறார்கள். உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுக்கள் … Read more

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ஹர்பஜன் சிங்… ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்!!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் காலியாக உள்ள 1 இடத்திற்கான தேர்தல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். இந்த நிலையில் ஆம் … Read more

வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல்: பெயர் காரணம்?

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று அந்தமான் நிகோபார் தீவுகளை கடக்கும் என தெரிகிறது. இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் சூறாவளிக்கு இந்தியா உட்பட 13 நாடுகள் பெயர் வைப்பது வழக்கம். இந்த பெயர்கள் முன்கூட்டியே பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் அசானி என்ற பெயரை இலங்கை பரிந்துரைத்துள்ளது.  அசானி: பெயர் … Read more

பெற்றோர் உயிருடன் இருக்கும் போது சொத்தில் மகன் உரிமை கோர முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருபெண், மறதி உட்பட பல்வேறு நோய் காரணமாக படுத்த படுக்கையாக உள்ள தனது கணவரின் சொத்துக்கு சட்ட பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை கவனித்து வருகிறேன். அவருக்கான மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளேன். எங்களுக்கு ஒரு மகன் இருந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எனது பெயரில் ஒரு வீடும், என் கணவர் … Read more

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜாக்பாட் – ராஜ்யசபா எம்பி ஆகிறார்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மன், கடந்த 16 ஆம் … Read more

ஆஸ்திரேலிய அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பழங்கால பொக்கிஷங்களை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெவ்வேறு காலக்கட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுவாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆஸ்திரேலிய அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அவற்றை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவ பெருமான், சக்தி, விஷ்ணு மற்றும் ஜெயின் மத பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை பிரதமர் ஆய்வு செய்தார். இவை அனைத்தும் தமிழகம், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   … Read more

டெல்லி- தோகா கத்தார் ஏர்வேஸ் விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து இன்று தோகோவிற்கு இன்று காலை புற்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. கத்தார் ஏர்வைஸ் நிறுவனத்தின் QR579 விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தோகா புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கார்கோ அறையில் இருந்து புகை வந்ததால் உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதனால் விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பான வகையில் தரையிறக்கப்பட்டது. … Read more

பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு

டெல்லி: பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தினார். அண்மைக்காலமாக ஏராளமான ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றது.  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகும் போக்கும் அதிகரித்து வருகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.   

சொந்த ஊருக்கு வந்தது உக்ரைனில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடல்; முதல்வர் மரியாதை

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. உக்ரைனில் கடந்த ஒன்றாம் தேதி, கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா என்பவர் உயிரிழந்தார். போர் சூழலால் நவீனின் உடலை உடனே இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல், விமானம் மூலம் வரும் இன்று அதிகாலை பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் மாணவர் நவீன் … Read more