யோகி அமைச்சரவை மார்ச் 25 அன்று பதவியேற்க உள்ள நிலையில் நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மார்ச் 25 அன்று பதவியேற்க உள்ள நிலையில், நாளை லக்னோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திங்கள் காலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். கூட்டத்துக்குப் பின் அமித் ஷாவும், யோகி ஆதித்யநாத்தும் கூடிப் பேசிப் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை இறுதிசெய்வர் … Read more

கேரளாவில் அடுத்த 5 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே புயலாக வலுவடையும் என்று தெரிவித்தது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று முறைப்படி இணைக்கிறார் சரத் யாதவ்..!

டெல்லி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை தொடங்கிய சரத் யாதவ் தனது கட்சியை லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்க உள்ளார். டெல்லியில் உள்ள சரத் யாதவ் இல்லத்தில் வைத்து ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பின் லாலு பிரசாத், மற்றும் சரத்யாதவ் … Read more

அழிந்து வரும் பறவை இனங்களை காக்கும் நரிக்குறவர்கள்.. சிலிர்க்க வைத்த இளைஞர்களின் முயற்சி!

பறவைகளை வேட்டையாடி வாழ்க்கை ஆதாரத்தை மேற்கொண்டு வந்த நரிக்குறவர் சமூக மக்ககளுக்கு, பறவைகளை பாதுகாக்கும் பணியை கொடுத்து அவர்களது வாழ்வியல் முறையை மாற்றி அமைததிருக்கிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க புதுச்சேரி முழுவதும் ஆயிரக்கணக்கான கூடுகளை தயாரித்து அமைத்து வரும் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நரிக்குறவர்களை அணுகி பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து கூடு தயாரிக்கும் வேலையை தருகிறார்கள். அழியும் நிலையில் உள்ள … Read more

பிரதமர் மோடி, அமைச்சர்கள், சாதுக்கள் முன்னிலையில் முதல்வராக 25-ல் ஆதித்யநாத் மீண்டும் பதவியேற்பு: உ.பி. தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடு

உ.பி. சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 275 இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து பாஜக வரலாறு படைத்துள்ளது. அதேபோல் பாஜக சார்பில்2-வது முறையாக பதவி ஏற்கும்முதல்வராக யோகி ஆதித்யநாத் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரங்கில் வரும் 25-ம் தேதி மாலை 4.00 மணிக்கு … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்?

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து இறுதி முடிவெடுக்க நாளை பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் கூடுகிறது. புதிதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக மேலிடப் பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் இன்று உத்தரகாண்ட் செல்கின்றனர். நாளை முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷதாப் … Read more

இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு

புதுடெல்லி: சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் புதிய பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாகவும், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.41 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 7 ஆயிரத்து 841 … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேருக்கு தொற்று உறுதி; 127 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,075 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,07,841-ஆக உயர்ந்தது.* புதிதாக 127 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த மாணவர் உடல் சொந்த ஊரை அடைகிறது: உடலை தானம் செய்ய பெற்றோர் முடிவு

உக்ரைன் போரில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் நவீனின் உடல் திங்கட்கிழமை கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த ஊரை அடைய இருப்பதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியதாக்குதலில் கர்நாடக மாநிலம்தாவணகெரேவை சேர்ந்த‌ மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன்கடந்த 1-ம் தேதி கொல்லப்பட்டார். ரஷ்ய தாக்குதலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது அவர் உணவு பொருட்கள்வாங்க சென்றார். அப்போதுதாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அவரது மறைவு குடும்பத் தின‌ரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. … Read more

உக்ரைனில் உயிரிழந்த மாணவர்: சோகத்திலும் தந்தை எடுத்த செம முடிவு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த‌ மருத்துவக் கல்லூரி மாணவர் நவீன் கடந்த 1ஆம் தேதி கொல்லப்பட்டார். ரஷ்ய தாக்குதலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, அவர் உணவு பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் … Read more