நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.69 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: 2025-26 ஆம் ஆண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவத்திற்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 3% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, … Read more

ஜூன் மாதம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: திரிணமூல் கோரிக்கை

புதுடெல்லி: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக நின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பப்பட்டிருக்கும் … Read more

“இந்தியா அமைதியாக இருக்க பாகிஸ்தான் விடுவதில்லை” – பனாமா இந்தியர்கள் மத்தியில் சசி தரூர் பேச்சு

பனாமா சிட்டி: இந்தியா அமைதியை விரும்பினாலும், பாகிஸ்தான் அதற்கு தயாராக இல்லை என்று பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடான பனாமாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடியது. … Read more

வாராணசி, அயோத்தி வரிசையில் தாமேஷ்வர்நாத் கோயில்: முதல்வர் யோகி அடிக்கல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் தாமேஷ்வர்நாத் கோயிலும் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான அடிக்கல்லை முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டினார். இந்தியாவில் அதிகமான முக்கியப் புனிதத் தலங்கள் கொண்ட மாநிலம் உபி. இம்மாநிலத்தில் உள்ள முக்கியக் கோயில்கள் பாஜக ஆட்சியில் படிப்படியாகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்படுகின்றன.இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பாஜக அரசு செலவிட்டு வருகிறது. முதலாவதாக காசி எனும் வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் புனரமைக்கப்பட்டது. பிறகு, உச்ச நீதிமன்ற வழக்கு முடிந்த நிலையில் அயோத்தியின் … Read more

5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை சீனா விரைவுபடுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் ராஜ்நாத் சிங் இதற்கான ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக ரபேல் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல், நான்காம் தலைமுறை போர் விமானம் ஆகும். உலகில் அமெரிக்கா, … Read more

தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்தார். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக பாரம்பரியத்திலிருந்து விலகி பஹல்காமில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தலைமை தாங்கினார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றதிலிருந்து கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் அல்லது குளிர்கால தலைநகர் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இதுகுறித்து … Read more

கொல்லப்பட்ட நக்சல் தலைவர் பசவராஜுவின் கூட்டாளி சரண் அடைந்தது எப்படி? – புதிய தகவல்கள்

சுக்மா: போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்துக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. … Read more

ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு

சண்டிகர்: ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின் 27-வது செக்டாரில் உள்ள … Read more

500 ரூபாய் நோட்டுகளும் விரைவில் நிறுத்தப்படுமா? மத்திய அரசு சொல்வது என்ன?

ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழலை ஒழிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

‘1947-லேயே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ – பிரதமர் மோடி

காந்திநகர்: பிரிவினைக்கு பின்பு, முதல் தாக்குதல் நடத்தப்பட்ட போதே, கடந்த 1947-ல் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தியா சந்திப்பது, பல தசாப்தங்களாக நாட்டைப் பாதித்து வரும் பயங்கரவாதத்தின் சிதைந்த வடிவமாகும் என்றும் தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 1947-ம் ஆண்டு இந்தியத் தாய்நாடு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அன்று இரவு காஷ்மீர் மண்ணில் முதல் தாக்குதல் … Read more