சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அக்​டோபர் 2-ம் தேதி காந்தி … Read more

வங்கி முதல் போஸ்ட் ஆபீஸ் வரை! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இன்று அக்டோபர் 1 முதல் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது. என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியா-பூடான் இடையே ரயில் இணைப்பு திட்டம்: வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா மற்றும் பூடான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. … Read more

வழக்கறிஞர்கள், சாட்சிகள் ஆஜராகாததால் நீதிமன்றங்களில் 5.3 கோடி வழக்குகள் தேக்கம்

புதுடெல்லி: நாடு முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் தேங்​கிக் கிடக்​கும் வழக்​கு​களை தீர்ப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில், நீதிப​தி​கள் பர்​தி​வாலா மற்​றும் விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தெரிய​வந்த விவரம் வரு​மாறு: நாடு முழு​வதும் உள்ள பல்​வேறு நீதி​மன்​றங்​களில் 5.34 கோடி வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதில் உயர் நீதி​மன்​றங்​களில் 63.8 லட்​சம் வழக்​கு​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் 88,251 வழக்​கு​களும் நிலு​வை​யில் உள்​ளன. இவ்​வாறு வழக்​கு​கள் … Read more

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 1990 முதல் 26 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து ‘தி லான்​செட்’ இதழில் வெளி​யான ஆய்வு முடிவு​களின்​படி, இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது. 1990-ல் 1 லட்​சம் மக்​கள்​தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்​று​நோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்​துள்​ளது. இது​போல் புற்​று​நோய் காரண​மாக ஏற்​படும் உயி​ரிழப்பு 21% அதி​கரித்​துள்​ளது. அதேவேளை​யில் அமெரிக்கா மற்​றும் சீனா​வில் 33 ஆண்​டு​களில் புற்​று​நோய் பாதிப்பு மற்​றும் உயி​ரிழப்பு ஆகிய … Read more

மெலோனி நூலுக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி

புதுடெல்லி: இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிட உள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின் அர்ப்​பணிப்பு பற்​றியது. பிரதமர் மெலோனி​யின் … Read more

பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 பேர் உயிரிழப்பு

முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்​குழு அமைப்​பின்​(ஏஏசி) சார்​பாக இந்​தப் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் போராட்​டத்​தை தொடர்ந்து கால​வரையற்ற போராட்​டத்​துக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து இந்​தப் போராட்​டத்தை நீர்த்​துப் போகச் செய்ய பாகிஸ்​தான் அரசு முயன்று வரு​கிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்​புப் பகு​தி​களில் பாது​காப்​புப் படை​யினரை … Read more

வாட்ஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து: கணவன், குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், பசேரா கிராமத்தைச் சேர்ந்த ஹசன் என்பவருக்கும் அஸ்மா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அஸ்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் ஆனது முதல் கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தனர். இதையடுத்து நான் என்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். கடந்த மார்ச் 31-ம் தேதி, என் கணவர் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை ‘தலாக்’ என பதிவிட்டு … Read more

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்​துக்கு எதி​ராக கேரள சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பின​ராயி விஜயன் நேற்று தீர்​மானம் கொண்டு வந்​தார். இதற்கு காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎப் கூட்​ட​ணி​யும் ஆதரவு தெரி​வித்​தது. தீர்​மானத்தை தாக்​கல் செய்​து, முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: கேரள மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை வெளிப்​படை​யான முறை​யில் செய்ய வேண்​டும். ஆனால், தலைமை தேர்​தல் ஆணை​யம் மேற்​கொள்ள நினைக்​கும் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், உள்​நோக்​கம் கொண்​ட​தாக இருப்​ப​தாக சந்​தேகம் எழுகிறது. தேசிய குடிமக்​கள் … Read more

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 68.5 லட்சம் பெயர்களை நீக்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு … Read more