ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர் பொது இடங்​களில் பயிற்சி மேற்​கொள்ள தடை விதிக்க வேண்​டும், அதன் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அரசு ஊழியர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு மாநில அமைச்​சர் பிரி​யங்க் கார்கே கடந்த வாரம் கடிதம் எழு​தி​னார். இந்​நிலை​யில் கர்​நாட​கா​வின் ரெய்ச்​சூர் மாவட்​டம், லிங்​சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்ற சிர்​வார் வட்​டார மேம்​பாட்டு அதி​காரி பிர​வீன் குமார் நேற்று பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். பசவ கல்​யாண் … Read more

புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே மாவட்​டம், புரந்​தர் பகு​தி​யில் வெங்​கா​யம் பயி​ரிட்டு வருபவர் சுதம் இங்​லே. இவர் இந்த பரு​வத்​தில் தனது வெங்​காயப் பயிருக்கு சுமார் ரூ.66,000 செல​விட்​டிருந்​தார். ஆனால் இடை​வி​டாத மழை​யால் இப்​பயி​ரின் பெரும் பகுதி சேதம் அடைந்​தது. ஒரு பகு​தியை மட்​டுமே அவரால் காப்​பாற்ற முடிந்​தது. எஞ்​சிய வெங்​கா​யத்தை சுதம் இங்லே கடந்த வெள்​ளிக்​கிழமை விற்​பனைக்​காக புரந்​தர் சந்​தைக்கு கொண்டு வந்​தார். அங்கு 7.5 குவிண்​டால் வெங்​கா​யத்​துக்கு அவருக்கு ரூ.1,729 மட்​டுமே கிடைத்​தது. இதில் போக்​கு​வரத்​து, … Read more

தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

புதுடெல்லி: தீ​பாவளி பண்​டிகை வாழ்த்​துகளை தெரி​வித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு பிரதமர் நரேந்​திர மோடி நன்றி தெரி​வித்​தார். தீபாவளி பண்​டிகை​யையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசி​யில் தீபாவளி வாழ்த்​துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: அதிபர் ட்ரம்ப், உங்​கள் தொலைபேசி அழைப்பு மற்​றும் அன்​பான தீபாவளி வாழ்த்​துகளுக்கு நன்​றி. இந்த தீபத் திரு​நாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடு​களும் நம்​பிக்​கை​யுடன் உலகை ஒளிரச் செய்வதுடன், … Read more

தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

ஆக்ரா: தீ​பாவளி போனஸ் தராத​தால் அதிருப்தி அடைந்த சுங்​கச்​சாவடி ஊழியர்​கள் வேலை நிறுத்​தம் செய்​தனர். இதனால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் பதேஹா​பாத் பகு​தி​யில் சுங்​கச் சாவடி உள்​ளது. இங்​கு பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் சுங்​கச்​சாவடியை வாக​னங்​கள் கடப்​ப​தற்கு வசதியாக அனைத்து கதவு​களை​யும் திறந்து … Read more

குருவாயூர் கோயில் பொக்கிஷங்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை: தணிக்கை அறிக்கையில் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளா​வில் உள்ள குரு​வாயூர் கோயிலுக்கு சொந்​த​மாக தங்​கம், வெள்ளி ஆபரணங்​கள், பாத்​திரங்​கள், தந்​தம், பக்​தர்​கள் காணிக்​கை​யாக அளிக்​கும் பொருட்​கள் அதி​கள​வில் உள்​ளன. ஆனால், இந்த பொக்​கிஷங்​களுக்​கான ஆவணங்​கள் சரி​யாக பராமரிக்​கப்​ப​டாத​தால், முறை​கேடு​களுக்​கான வாய்ப்பு அதி​கம் உள்​ளது என குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரிய​வந்​துள்​ளது. குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் புன்​னத்​தூர் கோட்டா சரணால​யத்​தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்​கை​யில் 522.86 கிலோ தந்​தம் மற்​றும் தந்​தப் பொருட்​கள் உள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. சட்​டப்​படி தந்​தம் … Read more

பிஹாரில் 3 ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ்: பாஜக மிரட்டுவதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹாரில் ஜன் சுராஜ் வேட்​பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜக.,​வின் அச்​சுறுத்​தல் காரணம் என ஜன் சுராஜ் கட்​சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். பிஹார் சட்​டப் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஜன் சுராஜ் கட்​சி​யின் 3 வேட்​பாளர்​கள் முதுர் ஷா, சத்ய பிர​காஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்​கள் வேட்பு … Read more

புனே பேஷ்வா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை: கோமியம் தெளித்து இந்துத்துவாவினர் போராட்டம்

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் புனே​வின் சனி​வார் வாடா​வில் வரலாற்று சிறப்​புமிக்க பேஷ்​வா​வின் கோட்டை அமைந்​துள்​ளது. இதனுள் முஸ்​லிம் பெண்​கள் தொழுகை நடத்​தும் வீடியோ கடந்த ஞாயிறு அன்று வெளி​யானது. புனே​வின் பாஜக மாநிலங்​களவை உறுப்​பினர் மேதா குல்​கர்னி தனது சமூக ஊடகப் பக்​கத்​தில் இந்த வீடியோவை பதிவேற்​றம் செய்​திருந்​தார். வரலாற்று பாரம்​பரி​யம் அவம​திக்​கப்​பட்டு விட்​ட​தாக​வும் குறிப்​பிட்​டு, போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​தார். சனி​வார் வாடா வளாகத்​தின், பிரார்த்​தனை தளத்​தில் கோமி​யம் மற்​றும் பசுஞ் சாணம் தெளித்து புனிதப்​படுத்த அவர் … Read more

பாஜக மீது பாயும் பிரசாந்த் கிஷோர் – பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியலா?

பிஹார் சட்​டப்பேரவை தேர்​தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெறுகிறது. பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்​கள் 3 பேர் தங்​கள் வேட்புமனுவை வாபஸ் பெற்​றுள்​ளனர். இதற்கு பாஜகவின் அச்​சுறுத்​தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சி​யின் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் குற்​றம் சாட்டியுள்​ளார். பிரசாந்த் கிஷோர் கூறுவதுபோல், பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியல்? தலை தூக்கியுள்ளதா? என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம். பிகே எனும் புதிய முகம்: இந்தியாவில் வடக்கிலிருந்து … Read more

சபரிமலை தரிசனத்துக்கு வந்த குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று (அக்டோபர் 22) காலை பத்தனம்திட்டா அருகே உள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்டது. அதன்பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவுக்கு நான்கு நாள் பயணமாக நேற்று புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவர் இன்று காலை … Read more

தேஜஸ்வியின் ‘ஜீவிகா தீதி’ அறிவிப்புகள் பலனளிக்காது: பாஜக – ஜேடியு விமர்சனம்!

பாட்னா: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஜீவிகா தீதிகளுக்கு (மகளிர் சுய உதவி குழுவினர்) அளித்த வாக்குறுதிகளை பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. மேலும், இந்த அறிவிப்புகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஹார் முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், ” பிஹார் மக்கள் ஆர்ஜேடி மற்றும் மகாகட்பந்தன் கூட்டணியை நம்பவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு … Read more