“குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது” – அமித் ஷா

மும்பை: குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாஜகவுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.27) நடைபெற்றது. இதில், அடிக்கல் நாட்டிப் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “1950-ல் இருந்தவர்கள் முதல் 2025-ல் இருப்பவர்கள் வரை, மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை பாஜகவினர் அனைவருக்கும் கட்சி அலுவகம் என்பது ஒரு கோயிலைப் … Read more

SIR | தமிழக வாக்காளர்களிடம் நவ.4 முதல் டிச.4 வரை வீடு வீடாக ஆய்வு – தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நாளை முதல் தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிஹாரைத் தொடர்ந்து அடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், … Read more

AI போட்டோ மார்பிங்கால் உயிரிழந்த 19 வயது இளைஞர்! நடந்தது என்ன?

AI Morphing 19 Year Old Dies : AI புகைப்படத்தால், 19வயது நபரின் உயிர் பறிபோய் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.  

டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்

போபால்: டிஜிட்டல் மாயம் காரணமாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக திகழ்ந்தார். மத்தியப் பிரதேசம் தர் மாவட்டம் தாம்நாத் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் டாங்ளே. தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தொடங்கிய டி-மேட் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு ‘ஹர்சில் அக்ரோ லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் 1,312 பங்குகள் வரவு வைக்கப்பட்டன. டிஜிட்டல் மாயம் காரணமாக தவறாக கணக்கிடப்பட்டு வந்த இந்த பங்குகளின் மொத்த … Read more

உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்தை நியமிக்க கவாய் பரிந்துரை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்தியாவின் தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடைமுறையின்படி, புதிய தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி மத்திய சட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதும். இதன்மூலம், புதிய தலைமை நீதிபதி நியமனத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கும். மத்திய சட்ட அமைச்சக கடிதத்தின் அடிப்படையில், தனக்கு … Read more

லின் இன் உறவில் சம்பவம்.. படுகொலை செய்யப்பட்ட இளைஞர்.. ஸ்கெட்ச் போட்ட காதலி

Delhi Crime News : தலைநகர் டெல்லியில் லிவ் இன் உறவில் இளைஞரை, அவரது காதலி  தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடய அறிவியல் படித்த அந்த பெண், விபத்து போல காதலனின் கொலையை காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

தெருநாய் விவகாரம்: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த … Read more

அக்.28 காலை ‘மோந்தா’ தீவிரப் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

புதுடெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளைக் கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘மோந்தா’ என்ற பெயரை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. ‘மோந்தா’ என்றால் அழகிய, நறுமணம் … Read more

நெடுஞ்சாலையில் தீப்பற்றி சாம்பலான பேருந்து: ஆக்ரா அருகே 70 பயணிகள் உயிர்த் தப்பினர்

லக்னோ: டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பேருந்​தில் 70 பயணி​கள் இருந்​தனர். ஆக்ரா – லக்னோ தேசிய எக்​ஸ்​பிரஸ் நெடுஞ்​சாலை​யில் ரேவ்ரி பகு​தி​யில் உள்ள சுங்கச் ​சாவடி அருகே நேற்று அதி​காலை பேருந்து சென்றபோது திடீரென தீப்​பிடித்​தது. உடனடி​யாக பேருந்தை நிறுத்​திய ஓட்​டுநர், பயணி​கள் … Read more

21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியை பாது​காப்பு படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக பல மாவோ​யிஸ்ட்​கள் என்​க​வுன்ட்ட​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் 3-வது வாரத்​தில் மட்​டும் 238 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​தனர். இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோ​யிஸ்ட்​கள் போலீ​ஸார் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு நேற்று சரண் அடைந்​தனர். இதுகுறித்து பஸ்​தார் ஐ.ஜி சுந்​தர்​ராஜ் கூறும்​போது, ‘‘மாவோ​யிஸ்ட்​கள் வன்​முறையை கைவிட்​டு, இயல்பு வாழ்க்​கைக்கு திரும்​பி​யுள்​ளனர். … Read more