அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் 10 நாட்களுக்குள் பொருத்தமான வீடு ஒதுக்கப்படும். இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார். இந்தப் பிரச்சினை விரைவில் சுமூகமாக … Read more