மத்திய அரசு வழங்கும் மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தெருவோர வியாபாரிகள், வீட்டு பணியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாய கூலிகள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க மத்திய அரசு திட்டங்களை வைத்துள்ளது.

வேளாண் சட்​டங்களை எதிர்த்ததால் அருண் ஜெட்லி மிரட்டினாரா? – ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். காங்​கிரஸ் சார்​பில் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: புதிய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது நடந்த … Read more

கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: ​பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி … Read more

2024 மக்களவை தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரம் உள்ளது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் சட்ட மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தலிலும் மோசடி நடந்துள்ளது. இதை நிரூபிக்க தரவுகளும் ஆவணங்களும் இப்போது உள்ளன. இதை நாங்கள் நிரூபிக்கப் போகிறோம். ஒரு மக்களவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது, மொத்தமுள்ள 6.5 லட்சம் … Read more

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடா பேரன் பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை – வழக்கின் முழு விவரம்

பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் எழுந்தது. பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் 3 … Read more

​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம்

வாராணசி: சிவபக்தி மற்றும் சைவ மரபின் மூலம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் ராஜேந்திர சோழன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினேன். மாமன்னர் ராஜேந்திர … Read more

'பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்' – குஜராத் போலீஸ் போஸ்டரால் சர்ச்சை

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு அகமதாபாத் போக்குவரத்துப் போலீஸ் நிதி உதவி அளித்துள்ள நிலையில், தங்கள் அனுமதியின்றி இவை ஒட்டப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்’, ‘நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள் – அங்கு நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கோ உள்ளாகலாம்’, ‘ஆண்கள் … Read more

டெல்லியில் 10-வது சர்வதேச போலீஸ் கண்காட்சி தொடக்கம்

புதுடெல்லி: டெல்லியின் பிரகதி மைதானத்தில் 10-வது சர்வதேச போலீஸ் கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன், மையமாக ‘மேக் இன் இந்தியா’ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கண்காட்சி, சட்ட அமலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் காட்சிப் பொருட்களாக உள்ளன. இக்கண்காட்சியில் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த இரண்டு நாள் நிகழ்வை, நெக்ஸ்ஜென் எக்ஸிபிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது. … Read more

பாகிஸ்தான் பயங்கராத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி

வாரணாசி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸ் கட்சியாலும், அதன் ஆதரவாளர்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி நிதி உதவியை விடுவிக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியது, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் … Read more

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு – கேரள அரசியல் கட்சிகள் வரவேற்பு

திருவனந்தபுரம்: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்கு, கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன. கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் உட்பட 3 பேர், ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜூலை 25-ம் தேதி சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். சத்தீஸ்கரின் நாராயண்பூரைச் சேர்ந்த 3 சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்து கடத்தியதாக உள்ளூர் பஜ்ரங் தள நிர்வாகி அளித்த புகாரின் … Read more