ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானில் இருந்து தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். 9/11 தாக்குதல்: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான … Read more

கர்னூல் பேருந்து விபத்து: உள்ளே இருந்த 234 ஸ்மார்ட்போன்கள்… தீ அதிகமாக இதுதான் காரணமா?

Kurnool Bus Accident: கர்னூல் நகரில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களே தீயை தீவிரப்படுத்தியிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

நிதிஷை மீண்டும் முதல்வராக்க மாட்டார்கள்; பாஜக அவரை கடத்திச் சென்றுவிட்டது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: நிதிஷ் குமாரை பாஜக கடத்திச் சென்றுவிட்டது என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவரை பிஹாரின் முதல்வராக்க மாட்டார்கள் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். சஹர்சா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே பிஹார் முதல்வரை முடிவு செய்வார்கள் என்று அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு … Read more

பாஜக அதிருப்தி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு

கோபால்கன்ச்: பிஹார் கோபால்கன்ச் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சசி சேகர் சின்ஹா திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பாஜக அழுத்தம் காரணமாக அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார் என பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் கோபால்கன்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பாஜக அதிருப்தி வேட்பாளர் அனுப் குமார் வஸ்தாவுக்கு ஜன் சுராஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என பிரசாந்த் கிஷோர் நேற்று அறிவித்தார். இது குறித்து பிரசாந்த் … Read more

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது

புதுடெல்லி: டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது: கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில் கைது செய்தோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் டெல்லியில் தீபாவளி பண்டிகை நாளில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. தெற்கு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு வணிக வளாகம், பூங்கா உள்ளிட்ட இடங்களை … Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: இளைஞர்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​கான பணி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு ஈடு​பட்டு வரு​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். இளைஞர்​களுக்கு அரசு பணி ஆணையை வழங்​கும் 17-வது ரோஜ்கர் மேளா ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் பேச்சு ஒலிபரப்​பப்​பட்​டது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் இளைஞர்​களுக்கு வழி​காட்​டும் சிறந்த அரசாக பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு செயல்​பட்டு வரு​கிறது. இளைஞர்​களுக்கு மத்​திய … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 11 தொகுதிகளில் எதிரெதிர் போட்டி

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள், 11 தொகு​தி​களில் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிடு​கின்​றனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை தேர்​தலில் 2-வது மற்​றும் கடைசி கட்ட தேர்​தலில் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் கடந்த 20-ம் தேதி​யுடன் முடிந்​தது. அப்​போது, 11 தொகு​தி​களில் இண்​டியா கூட்​டணி கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிட வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளனர். இதனால் இண்​டியா கூட்​ட​ணிக்​குள் மோதல் அதி​கரித்​துள்​ளது. அத்​துடன் … Read more

முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்​பில், முப்​படைகளுக்கு தேவை​யான ராணுவ தளவாடங்​கள் வாங்க பாது​காப்பு அமைச்​சகம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்​குப் ​பின் ராணுவ தளவாட பொருட்​கள் கொள்​முதலுக்கு உடனுக்​குடன் ஒப்​புதல் அளிக்​கப்​படு​கிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடி​யில் தள வாட​ங்கள் கொள்​முதல் செய்ய ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் நவீன தளவாடப் பொருட்​கள் தேவை என முப்​படைகள் சார்​பில் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டது. இதையடுத்து பாது​காப்பு தளவாடப் பொருட்​கள் கொள்​முதல் கவுன்​சில் கூட்​டம், பாது​காப்​புத்​துறை அமைச்​சர் … Read more

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

புதுடெல்லி: ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​கிறார். ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்​து, வியட்​நாம், சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் வரும் 26-ம் தேதி தொடங்​கு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட … Read more

கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

ருத்​ரபிர​யாக்: உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் புகழ்​பெற்ற கேதார்​நாத் சிவன் கோயில் அமைந்​துள்​ளது. சார்​தாம் யாத்​திரை​யின் ஒரு அங்​க​மான இந்த கோயில் ஆண்​டு​தோறும் கோடை காலத்​தின் தொடக்​கத்​தில் திறக்​கப்​பட்டு குளிர்​காலத்​தின் தொடக்​கத்​தில் மூடப்​படும். அந்த வகை​யில், குளிர்​காலம் தொடங்க உள்ளதால் கேதார்​நாத் கோயில் நடை நேற்று அடைக்​கப்​பட்​டது. முன்​ன​தாக, நேற்று காலை​யில் சிறப்பு பூஜை நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் மாநில முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, கோயில் நிர்​வாகக் குழு அதி​காரி​கள், அர்ச்​சகர்​கள் உட்பட நூற்​றுக்கணக்​கானோர் பங்கேற்றனர். கோயில் … Read more