குஜராத்தில் 3 மாதங்களாக டிஜிட்டல் கைது செய்து பெண் டாக்டரிடம் ரூ.19 கோடி சுருட்டிய கும்பல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர். அப்போது, என்​னுடைய செல்​போனிலிருந்து … Read more

இந்தியப் பொருளாதாரம் செயலிழந்து விட்டது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது உண்மைதான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா-இந்தியா இடையே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை யடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள். கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் … Read more

காங்கிரஸின் ‘இந்து பயங்கரவாதம்’ சதி முறியடிக்கப்பட்டுள்ளது: மாலேகான் தீர்ப்பு குறித்து பாஜக கருத்து

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியகடிக்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், “காங்கிரஸின் இந்து பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. … Read more

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க … Read more

இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது தெரியும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவும் ரஷ்யாவும் உயிரற்ற பொருளாதாரங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அவர் சொன்னது சரியானதுதான். பிரதமர், நிதி அமைச்சர் … Read more

13 வயசு சிறுமிக்கு… 40 வயசு ஆணுடன் கல்யாணம் – குழந்தை திருமணத்திற்கு வறுமை காரணமில்லையாம்!

Child Marriage: 13 வயது சிறுமிக்கும், 40 வயதான அதுவும் ஏற்கெனவே திருமணமான நபருக்கும் இடையே குழந்தை திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து

புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய பியூஷ் கோயல், “பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பித்தார். ஏப்ரல் 5 முதல் 10% அடிப்படை வரி அமலில் உள்ளது. அந்த 10% அடிப்படை வரியுடன் மொத்தம் … Read more

Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நாள்தோறும் போராட்டங்களை இண்டியா … Read more

ஆதார் கார்டு கூட வேலைக்கு ஆகாது… உங்களை இந்திய குடிமக்கள் என நிரூபிக்கும் இந்த 11 ஆவணங்கள்!

Proof Of Citizenship: இந்திய நாட்டின் குடிமக்கள் என நிரூபிக்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லாத இந்த 11 ஆவணங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவுகளின்படி, பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல்கள் நாளை அதாவது வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2025 அன்று அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பிஹாரின் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் (DEO) பிஹாரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் காகித … Read more