சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்

புதுடெல்லி: சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக முன்னாள் பொதுச் செயலாளரும் இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் மாதவ், “ஆழமான தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவை விட சீனா சில மாதங்களே பின்தங்கியுள்ளது. இந்தியா நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது. சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்காவுக்கு இந்தியாவால் மட்டுமே … Read more

பேருந்தில் பாலியல் அத்துமீறல்! கன்னத்தில் பளாரென அறைந்த சிங்கப்பெண்..வைரல் வீடியோ

Video Bus Sexual Assault Woman Confronts Man: கேரளாவில், ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. இதையடுத்து, அத்துமீறிய நபருக்கு அந்த பெண் கொடுத்த தண்டனை இணையத்தில பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.  

‘மாலேகான் வழக்கு தீர்ப்பு காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி’ – சாத்வி பிரக்யா சிங்

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிரக்யா சிங், “ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அதற்கு ஓர் அடிப்படை காரணம் இருக்க வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தேன். என்னை விசாரணைக்கு அழைத்தனர், பின்னர் கைது செய்து சித்ரவதை செய்தனர். இது என் முழு வாழ்க்கையையும் நாசமாக்கியது. … Read more

சர்ச்சைக்குரிய பயங்கரவாத வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

Malegaon Blast News In Tamil: 2008 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு.. தொடந்து நடைபெற்ற விசாரணை. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என குற்றம் சாட்டப்பட்ட ஏழு குற்றவாளிகழியும் நீதிமன்றம் விடுவித்தது. மாலேகான் குண்டுவெடிப்பு என்றால் என்ன? அந்த வழக்கின் பின்னணி மற்றும் முழுமையான காலவரிசை குறித்து முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி.பிரக்யா சிங் தாக்குர், லெஃப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை வழங்கிய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, “சந்தேகம் மட்டுமே வழக்கை முன்னோக்கிக் கொண்டு சென்றுவிடாது, குற்றச்சாட்டுகளைஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. சந்தேகத்தின் பலனைப் பெற்று குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்” என்றார். … Read more

1965-ம் ஆண்டு நடந்த போரில் 45, 1971-ல் 71 விமானங்களை இழந்தோம்: மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தகவல்

புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்​களை​யும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நாம் இழந்​தோம் என்று மக்களவை​யில் பாஜக எம்.பி. நிஷி​காந்த் துபே பேசி​னார். மக்​களவை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தின்​போது பாஜக எம்பி நிஷி​காந்த் துபே இந்​தி​யில் பேசிக் கொண்​டிருந்​தார். அப்​போது நாடாளு​மன்​றத்​தில் செயல்​பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்​பில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்டு பேச்சு தடைபட்​டது. அதாவது அவர் இந்​தி​யில் பேசுவதை மொழிபெயர்த்து எம்​.பி.க்​களின் ஹெட்​போன் வழியே ஒலிபரப்​பும் கருவி பழுதடைந்​தது. இதைத் … Read more

அல்காய்தா அமைப்புடன் தொடர்பு: பெங்களூருவில் பெண் கைது

பெங்களூரு: அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத் தூண்​டி​விட்டு இந்​திய அரசுக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வதாக குஜ​ராத் தீவிர​வாத ஒழிப்பு படை​க்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வினர் கடந்த வாரத்​தில் அகம​தா​பாத்தை சேர்ந்த ஃபர்​தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்​வரை கைது செய்​தனர். இந்த நால்​வரிட​மும் தனித்​தனி​யாக நடத்​தப்​பட்ட … Read more

நிதாரி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.​யின் நொய்​டா​வில் 31-வது செக்​டார் குடிசைப் பகு​தி​யில் ஏழைக் குடும்​பங்​களின் குழந்​தைகள் தொடர்ந்து காணா​மல் போயினர். அக்​டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்​பெண் காணா​மல் போய் வழக்கு பதி​வானது. பாயலின் கைப்​பேசி ஒரு ரிக் ஷா ஓட்​டுநரிடம் இருந்து போலீ​ஸாரிடம் சிக்​கியது. பிறகு இதனை அவருக்கு வழங்​கிய 31-வது செக்​டார் டி-5 பங்​களா​வின் பணி​யாளர் சுரேந்​தர் கோலி போலீ​ஸாரிடம் சிக்​கி​னார். விசா​ரணைக்கு பிறகு டி-5 பங்​களா வளாகத்​தி​லும் அதன் முன்​புள்ள கால்​வா​யிலும் டிசம்​பர் … Read more

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களை தொடர்பு​கொண்டு பேசினர். அப்​போது, நிலைமை எவ்​வளவு தீவிர​மானது, சண்டை எவ்​வளவு காலம் … Read more

தீவிரவாதிகள் 3 பேரும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகள் கிடைக்கும்போது அவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று எனக்கு நாடு முழுவதிலும் பொது மக்களிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தன. தீவிரவாதிகள் இருப்பிடம் கண்டறியப்பட்டு 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் தற்செயலாக அந்த மூவரும் தலையில் சுடப்பட்டே இறந்தனர். பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் … Read more