பிஎஸ்எப் விமானப் பிரிவில் முதல் பெண் பொறியாளர் நியமனம்

புதுடெல்லி: எல்லை பாது​காப்பு படை​யின் விமானப் பிரி​வில் முதல் முறை​யாக பெண் பொறி​யாளர் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளார். எல்லை பாது​காப்பு படை​யில் (பிஎஸ்​எப்), உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செல்​படும் விமானப் பிரிவு கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரு​கிறது. இந்த பிரி​வில் எம்ஐ 17, சீட்​டா, துருவ் ரக ஹெலி​காப்​டர்​கள், மற்​றும் விஐபிக்​.கள் பயணத்​துக்கு பயன்​படுத்​தப்​படும் எம்​பரர் ஜெட் விமான​மும் உள்​ளது. இப்​பிரி​வில் விமான பொறி​யாளர்​களுக்கு பற்​றாக்​குறை நில​வியது. இதனால் 3 பிஎஸ்ப் அதி​காரி​களுக்கு விமான பொறி​யாளர் பயிற்​சியை … Read more

பாஜகவுக்கு இணையான தொகுதிகளை நிதிஷ் பெற்ற ரகசியம்: சிராக் பாஸ்வானால் பலன் கிடைக்குமா?

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு இணையான தொகுதிகளை முதல்வர் நிதிஷ்குமார் கட்சி பெற்றது எப்படி?. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வானும் இணைந்திருப்பதன் மூலம் பலன் கிடைக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. பிஹாரின் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலில் தொடரும் … Read more

பிஹார் தேர்தலில் 18 இடங்களில் போட்டியிடுவது உறுதி: சிபிஐ(எம்எல்) கட்சி உறுதி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 18 இடங்களில் போட்டியிடுவோம் என்றும், இன்னும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சிபிஐ-எம்எல் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறினார். பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6-ம் தேதி அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 14 -ம் தேதி வெளியாக உள்ளன. பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு மற்றும் பாஜக கட்சிகள் தலா 101 … Read more

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை புகார் எதிரொலி: மற்றொரு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது!

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டகி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக மற்றொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பின் அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி முதன்முறையாக டெல்லி வந்துள்ளார். ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். இரண்டாவது நாள் நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பெண் செய்தியாளர்கள் அனுமதி … Read more

பாதிக்கப்பட்ட மாணவியை குறை சொல்வதா? – மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பெண்கள் இரவில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவ கல்​லூரி​யில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி (23) ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை தனது ஆண் … Read more

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய விருப்பம்

கண்ணூர்: கேரள மாநிலம் கண்​ணூரில் நேற்று நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தொண்​டர்​களிடம் பேசி​ய​தாவது: நான் ஒருபோதும் அமைச்​ச​ராக ஆசைப்​பட்​ட​தில்​லை. அமைச்​ச​ரான பிறகு எனது சினிமா வரு​மானம் கணிச​மான அளவில் குறைந்​துள்​ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்​சர் பதவி​யில் இருந்து விலக விருப்​பம் தெரி​வித்​துள்​ளேன். அமைச்​சர் பதவி​யில் இருந்து என்னை நீக்​கிய பிறகு … Read more

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது. இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு கோழிக்​கோடு நகரைச் சேர்ந்த ஒரு​வருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்​து, மூளைக் காய்ச்​சலால் பாதிக்​கப்​படு​வோரின் விவரங்​களை கட்​டாய​மாக பதிவு செய்​வதுடன் அதற்​கான காரணங்​களைக் கண்​டறியவும் உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து 2024 முதல் … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு! இந்த 6 பொருட்கள் கொண்டு செல்ல தடை!

பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில், இந்திய ரயில்வே நிர்வாகம் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிஹார் தேர்தலில் 20 ஆண்டாக போட்டியிடும் டெலிவரி ஊழியர்

பாட்னா: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் மகதோ. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார். எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி என எந்த தேர்தலையும் விட்டுவைப்பதில்லை. மக்களின் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்ற கனவை துரத்திக் கொண்டுள்ளார் மகதோ. வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் இவர் போட்டியிடுகிறார். இதுகுறித்த மகதோ கூறியதாவது: சிறிய வீட்டில்தான் வாழ்கிறேன். 2004 முதல் தொடர்ந்து நகராட்சி தேர்தல் உட்பட … Read more

என்னால் சம்பாதிக்க முடியவில்லை – அமைச்சர் பதவி வேண்டாம்! சுரேஷ் கோபி வேதனை!

தனக்கு பதிலாக மூத்த தலைவரான சி. சதானந்தனை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.