சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் ஏப்.25-ம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு 5 ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான விசாரணைக்கு திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் வரும் ஏப்.25-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு கட்டாயம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் … Read more

“கருத்துக்கணிப்பு வாயிலாக ஏமாற்றுகிறார் மோடி” – சித்தராமையா

கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான‌ சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ரகசிய கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறுவதே கடினம் என தெரியவந்தது. அதனை மறைத்து 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் பேசி வருகின்றனர். இத்தகைய பொய்யான கருத்துக்கணிப்பு வாயிலாக வாக்காளர்களை திசை திருப்பும் வேலையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். … Read more

உ.பி.யின் 17 தனித் தொகுதிகள் இந்த முறை யாருக்கு?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 17 தனித் தொகுதிகள் இந்தமுறை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இவற்றை ஆளும் பாஜக, எதிர்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் குறி வைத்துள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 17 தனித் தொகுதிகள் உ.பி.யில் உள்ளன. ஆனால், இங்குள்ள தலித் வாக்காளர்கள் ஆதரவுக் கட்சியாக இருந்தும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால்(பிஎஸ்பி) அந்த தொகுதிகளில் தனது வெற்றியை நிலைநாட்ட முடியவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் பாஜக இந்த … Read more

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 8 பேர் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் நக்சலைட்கள் 8 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது குறித்து ஐஜி (பஸ்தர் பகுதி) சுந்தர்ராஜ் கூறுகையில், “கங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேந்த்ரா கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் … Read more

‘திரிபுரா இளவரசி’யை களமிறக்கிய பாஜக… – யார் இந்த கிருத்தி சிங்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பாஜக திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான (எஸ்.டி) வேட்பாளராக திரிபுராவின் கடைசி மன்னரான மகாராஜா கிரித் பிக்ரம் கிஷோர் மாணிக்ய தெப்பர்மாவின் இளைய மகளும், திப்ரா மோதா கட்சியின் நிறுவனர் பிரத்யோத் கிஷோர் தெப்பர்மாவின் மூத்த சகோதரியுமான ‘இளவரசி’ கிருத்தி சிங் டெபர்மாவை பாஜக களமிறக்கியுள்ளது. இதனால் அந்தத் தொகுதியில் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விலங்குகள் நல ஆர்வலராக … Read more

குஜராத் பிஜேபியில் அரசியல் குழப்பம்.. இந்தமுறை பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம்?

Gujarat Bharatiya Janata Party: குஜராத் பிஜேபியில் உட்கட்சி பூசல்.. வேட்பாளர்களை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், குஜராத் பாஜகவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் பிஜேடி முக்கியத் தலைவர் பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றம் – பின்னணி என்ன?

புதுடெல்லி: ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் முக்கியத் தலைவர் வி.கே.பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இது, அக்கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி உருவாகாமல் போனது காரணமாகக் கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தை கடந்த 2000 ஆண்டு முதல் ஆட்சி செய்யும் பிராந்தியக் கட்சி பிஜேடி. இதன் தலைவரான நவீன் பட்நாயக்(77) அதன் மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக தொடர்கிறார். தன் கூட்டணிக் கட்சியாக கடந்த 1998 முதல் இருந்த பாஜகவிடமிருந்து பிஜேடி 2009-ல் விலகி விட்டது. எனினும், தொடர்ந்து … Read more

“பாஜக வென்றால் நாடு பற்றி எரியும் என மக்களை மிரட்டுகிறது காங்கிரஸ்” – பிரதமர் மோடி ஆவேசம்

ஜெய்ப்பூர்: ‘இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு பற்றி எரியும்’ என்று மக்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டி வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “தன்னிறைவான பாரதம் என்ற கனவை நனைவாக்கவே இந்தத் தேர்தல். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் நாட்டுக்காக இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. அவர்களின் சுய லாபத்துக்காகவே நிற்கிறார்கள். அவர்கள் ஊழலை … Read more

உச்ச நீதிமன்றத்தில் “நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்ட யோகா குரு பாபா ராம்தேவ்

Ramdev Apology in Supreme Court of India: ஆங்கில மருத்துவம் பற்றி தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் ஏற்க உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

“சிறையில் 3 சகோதரர்கள் இருப்பதால் முழு மகிழ்ச்சி இல்லை” – ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மனைவி

புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், “எனது மூன்று சகோதரர்கள் இன்னும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதால், இது முழுமையான மகிழ்ச்சியில்லை” என்று அவரது மனைவி அனிதா சிங் கூறியுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் … Read more