குஜராத்தில் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது: ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகள் பறிமுதல்

அகமதாபாத்: குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மருத்துவ படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் … Read more

எடியூரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் சதியா? – குமாரசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா மறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த மார்ச் 14-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவரும் எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திரா கூறுகையில், ‘‘இந்த வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. எடியூரப்பாவுக்கு … Read more

எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

பெங்களூரு: கர்நாடகாவில் தனது 17 வயது மகளுக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாயார் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் ச‌தாசிவ நகர் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புகார்தாரர் கடந்த மே 25-ம் தேதி உயிரிழந்தார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் (சிஐடி) ஜூன் 12-ம் தேதி எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக … Read more

கனமழை, நிலச்சரிவால் சிக்கிமில் 6 பேர் உயிரிழப்பு

குவாஹாட்டி: சிக்கிமில் கனமழை, நிலச்சரிவின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிக்கிமுக்கு வந்த 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கனமழையின் காரணமாக சிக்கித் தவிக்கின்றனர். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவால் இதுவரை சிக்கிமில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிக்கிம் … Read more

ஆந்திர அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஆனார் பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 164 தொகுதிகளை கைப்பற்றி தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு அமைச்சர்கள் அனைவருக்கும் நேற்று துறைகளை ஒதுக்கினார். இதில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பொது நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு பஞ்சாயத்து ராஜ், கிராமிய … Read more

“மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை மக்கள் சிறுபான்மை அரசாக ஆக்கி இருக்கிறார்கள். கூட்டணி அரசு குறித்து மோடியே பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார். கூட்டணி அரசு … Read more

அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிய வலுக்கும் எதிர்ப்பு: பின்னணி என்ன?

புதுடெல்லி: எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா – UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்ய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளன. கடந்த 2010, அக்டோபர் 21-ம் தேதி டெல்லியில் உள்ள எல்டிஜி ஆடிட்டோரியத்தில் ‘விடுதலை – ஒரே வழி’ என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் … Read more

“என்டிஏ மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே ஆந்திராவின் வெற்றி” – சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: “மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி அதிர்ஷ்டவசமானது அல்ல. அது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. அதன் பிரதிபலிப்பே ஆந்திர மாநில வெற்றி” என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. மத்தியில் தற்போது அமைந்துள்ள … Read more

உத்தராகண்ட்டில் டெம்போ ட்ராவலர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; 14 பேர் படுகாயம்

ருத்ரபிரயாக் (உத்தராகண்ட்): ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லியில் இருந்து 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (ஜூன் 14) இரவு 11 மணி அளவில் சோப்தா நோக்கி புறப்பட்ட டெம்போ ட்ராவலர், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். … Read more

“மோடிக்கு நன்றி; அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் நாங்கள் வென்றோம்” – சரத் பவார்

மும்பை: “மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் நரேந்திர மோடி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே பிரதமர் மோடிக்கு நன்றி” என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அணிக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே) அடங்கிய மகா விகாஸ் அகாதி களம் கண்டது. இந்த தேர்தலில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 31 … Read more