“ஆர்எஸ்எஸ் அங்கம் போல என்சிஇஆர்டி செயல்படுகிறது” – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்ட புத்தகத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் போல என்சிஇஆர்டி செயல்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். “நீட் 2024-ம் ஆண்டுக்கான தேர்வில் வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான மதிப்பெண்களுக்கு என்சிஇஆர்டி மீது குற்றம் சுமத்தியுள்ளது தேசிய தேர்வு முகமை (என்டிஏ). இதன் மூலம் தன் மீதான கவனத்தை என்டிஏ மடை மாற்றுகிறது. இருந்தாலும் கடந்த … Read more

ராகுல் காந்தி விலகும் வயாநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி: காங். அறிவிப்பு

புதுடெல்லி: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரயங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கார்கே கூறியது: “ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக … Read more

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து: யார் காரணம்? TA 912 ஆவணம் மூலம் வெளிவந்த புதிய தகவல்

Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

மும்பை: தனியார் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பை மீரா சாலையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் மருத்துவமனை பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்னதாக, … Read more

வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி… ராய்பரேலியை தக்கவைக்கும் ராகுல் – ஸ்வீட் சர்ப்ரைஸ்!

Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’ – மேற்கு வங்க ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் இருந்து 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் மேற்பட்டோர் … Read more

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இவிஎம் முறையை ஒழிக்க வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) செயல்படும் முறையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் … Read more

'தொடரும் ரயில் விபத்துகள்… தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?' – ரயில்வேயின் பதில்

Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மகாராஷ்டிரா உள்பட 4 மாநில தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகும் பாஜக – பொறுப்பாளர்கள் நியமனம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா உள்பட 4 மாநில தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் பாஜக, 4 மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த 4 மாநில தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 4 மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள … Read more

ஜேடியு – தெலுங்கு தேசம் இடையே கருத்து வேறுபாடு: மக்களவை தலைவர் பதவிக்கு போட்டியிட இண்டியா கூட்டணி திட்டம்

புதுடெல்லி: மக்களவையின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. மக்களவை தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவது குறித்து இண்டியா கூட்டணி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசத்தின் 16எம்.பி.க்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்கள் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய … Read more