மணிப்பூரில் நடந்த கலவரம் மத ரீதியிலானது அல்ல: கேரள கத்தோலிக்க திருச்சபை கருத்து

திருவனந்தபுரம்: மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த திருச்சபை உறுதியாக நம்புகிறது. … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் 2 துணை முதல்வர்கள் பதவியும் கட்சியின் உத்தியும்!

புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பளிப்பது உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது. ஒடிசா முதல்வராக மோஹன் சரம் மஜி பதவி ஏற்றுள்ளார். இவருக்கு துணை முதல்வராக பார்வதி பரிதா மற்றும் கே.வி.சிங் ஆகிய இருவர் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோல், பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவது புதிதல்ல. இதற்குமுன், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் இரண்டு … Read more

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: காங். அடுக்கும் குற்றச்சாட்டுகளும், மத்திய அரசின் பதிலும்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை மோடி அரசு மூடி மறைக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட் தேர்வர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை, கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலம் மூடி மறைக்க மோடி … Read more

வயநாடு தொகுதியில் பிரியங்கா களமிறங்க வாய்ப்பு – ராகுல் காந்தியின் விருப்பம் என்ன?

புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பியாக தொடரவும், கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் தெரிகிறது. நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் அங்கு மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், உத்தரப் பிரதேசத்தின் … Read more

பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு | ஜி7 உச்சி மாநாடு

அபுலியா (இத்தாலி): ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, … Read more

விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14) ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய கடற்படையின் செயல்பாட்டு தயார்நிலையை ஆய்வு செய்ததுடன், ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில் பயணித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் அலுவல் ரீதியான புதுடெல்லிக்கு வெளியேயான முதல் … Read more

நாட்டின் வளர்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்கு வகிக்கிறது: ஜக்தீப் தன்கர்

ஜெய்சல்மார் (ராஜஸ்தான்): நாட்டின் வளர்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையை எண்ணி நாடு பெருமை கொள்கிறது என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ஜெய்சால்மரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப்படை மாநாட்டில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் தமது கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். மாநாட்டில் பங்கேற்ற எல்லை … Read more

மக்களவை சபாநாயகர் பதவி- பாஜக பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு; ஜேடியு அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆதரிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேச கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக யாரை பரிந்துரைக்கிறதோ அவரை நாங்கள் ஆதரிப்போம்” எனத் தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த … Read more

“ஆணவம் கொண்டவர்கள் 241-ல் நிறுத்தப்பட்டுள்ளனர்” – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

புதுடெல்லி: “ஆணவம் கொண்டவர்கள் இந்த மக்களவைத் தேர்தலில் 241-ல் நிறுத்தப்பட்டுள்ளனர்” என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பாஜக கூட்டணியை சாடியுள்ளது கவனம் பெற்றுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, 2024 தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்திருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பாஜக கூறிவந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் அக்கட்சி 240 தொகுதிகளில் மட்டுமே … Read more

மேற்கு வங்க ஹிஜாப் சர்ச்சை | கல்லூரியில் மீண்டும் சேர விருப்பமில்லை: ஆசிரியர் சஞ்சிதா காதர்

கொல்கத்தா: ஹிஜாப் அணிவதற்குப் பதிலாக, துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ள கல்லூரி நிர்வாகம் அனுமதித்த நிலையில், பணியில் மீண்டும் சேர வேண்டாம் என்ற முடிவை தான் எடுத்துள்ளதாக ஆசிரியை சஞ்சிதா காதர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எல்ஜேடி சட்டக் கல்லூரியில் ஆசிரியையாக சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்தவர் சஞ்சிதா காதர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் ஹிஜாப் அணிந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மே 31-ம் தேதிக்கு பிறகு பணியிடத்துக்கு ஹிஜாப் … Read more