“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” – பிரதமர் மோடி பேச்சு @ ஜி7 மாநாடு

இத்தாலி: “இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, ஜோர்டான், கென்யா, துனிஷியா, … Read more

குஜராத்தில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு

வதோதரா: குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார். அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க … Read more

குவைத் தீ விபத்து சம்பவம்: மத்திய அரசின் முயற்சிகளுக்கு பினராயி விஜயன் பாராட்டு

கொச்சி: குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த … Read more

தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்களின் உடலை கொண்டுவர குவைத் விரைந்தது ராணுவ விமானம்

புதுடெல்லி/ குவைத் சிட்டி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் உடல்களை தாயகம்கொண்டுவர விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த குடியிருப்பில் உள்ள … Read more

காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மோடி ஆய்வு: முழு திறனையும் பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படைகளின் முழுதிறனையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரெசி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். தெற்கு கதுவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது … Read more

மணிப்பூரில் நடந்த கலவரம் மத ரீதியிலானது அல்ல: கேரள கத்தோலிக்க திருச்சபை கருத்து

திருவனந்தபுரம்: மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த திருச்சபை உறுதியாக நம்புகிறது. … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் 2 துணை முதல்வர்கள் பதவியும் கட்சியின் உத்தியும்!

புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பளிப்பது உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது. ஒடிசா முதல்வராக மோஹன் சரம் மஜி பதவி ஏற்றுள்ளார். இவருக்கு துணை முதல்வராக பார்வதி பரிதா மற்றும் கே.வி.சிங் ஆகிய இருவர் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோல், பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவது புதிதல்ல. இதற்குமுன், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் இரண்டு … Read more

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: காங். அடுக்கும் குற்றச்சாட்டுகளும், மத்திய அரசின் பதிலும்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை மோடி அரசு மூடி மறைக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட் தேர்வர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை, கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலம் மூடி மறைக்க மோடி … Read more

வயநாடு தொகுதியில் பிரியங்கா களமிறங்க வாய்ப்பு – ராகுல் காந்தியின் விருப்பம் என்ன?

புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பியாக தொடரவும், கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் தெரிகிறது. நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் அங்கு மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், உத்தரப் பிரதேசத்தின் … Read more

பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு | ஜி7 உச்சி மாநாடு

அபுலியா (இத்தாலி): ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, … Read more