மோடி பதவியேற்பு விழா | கார்கேவுக்கு அழைப்பு; தெலுங்கு தேசம், ஜேடியுவுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி?

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டுத் தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே டெல்லி வந்தடைந்தார். மொரீஷியல் பிரதமர் பிரவீன் ஜுக்நாத்தும் டெல்லி வந்தடைந்தார். கார்கேவுக்கு அழைப்பு: இதற்கிடையில், மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று அவர் விழாவில் கலந்து … Read more

மத்திய அமைச்சரவையில் இத்தனை பிரபலங்களா… எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்…?

PM Modi Cabinet: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் எந்தெந்த மாநிலங்களுக்கு யார் யார்  பிரதிநிதிகளாக வருகிறார்கள் என்ற பட்டியலை இங்கு காணலாம்.

“இடஒதுக்கீடு நிலைபாட்டில் மாற்றமில்லை” – தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., ராம்மோகன் பேச்சு

புதுடெல்லி: “தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, இடஒதுக்கீடு குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை” என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.,யும் மத்திய அமைச்சராக உள்ள ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியுடன், அவரது அமைச்சரவையில் மத்திய அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி., ராம்மோகன் நாயுடுவும் பதவி … Read more

மோடி அமைச்சரவையில் டாப் பணக்கார எம்.பி… சந்திரசேகர் பெம்மசானி சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

PM Modi 3.0 Cabinet Ministry: நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவரின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர எம்.பி., சந்திரசேகர் பெம்மசானியின் பொறுப்பேற்கிறார். யார் இவர், இவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.

3-வது முறையாக பிரதமர் பதவி: காந்தி, வாஜ்பாயி நினைவிடத்தில் மோடி மரியாதை

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி மோடி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கும் சென்றார். போர் நினைவிடத்தில் மோடியுடன் ராஜ்நாத் சிங்கும் இருந்தார். நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக … Read more

தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.  

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரலை வெட்டி காணிக்கை செலுத்திய இளைஞர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பல்ராம்பூரை சேர்ந்த பாஜக ஆதரவாளர் துர்கேஷ் பாண்டே (30). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளை டி.வி.யில் மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை கண்ட துர்கேஷ் பாண்டே மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து அருகில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று பாஜக வெற்றி பெற வேண்டிக்கொண்டார். சில மணி நேரத்துக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ முன்னிலை பெறுவதை கண்ட துர்கேஷ் பாண்டே மீண்டும் காளி கோயிலுக்குச் … Read more

முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் (50) மே 26-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், “பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு கணக்குகளில் இருந்த ரூ.187.3 கோடி மானியத்தை வெவ்வேறு கணக்குகளில் மாற்ற மூத்தஅதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர். ரூ.88 கோடியை கொள்ளையடிக்க கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தற்கொலைக்கு … Read more

இன்று பதவியேற்று கொள்ளும் 30 அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறை?

PM Narendra Modi 3.0: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவை தொடர்ந்து இன்று மோடி மற்றும் 30 எம்பிக்கள் அமைச்சராக பதவி ஏற்று கொள்ள உள்ளனர்.   

பிரஜ்வல் தாயாருக்கு நிபந்தனை ஜாமீன்

பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 ஆபாச‌ வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் அளித்த‌ புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனிக்கு தப்பியோடிய அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை … Read more