ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை: முன்னாள் முதல்வர் ஜெகன் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முந்தைய ஜெகன் அரசால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள தெலுங்கு தேசம் அரசு குற்றம் சாட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கடலை பார்த்தவாறு கட்டப்பட்ட இந்த ரகசிய மாளிகை ஜெகனின் முகாம் அலுவலமாக மாற்றுவதற்காக தயாராகி வந்துள்ளது என தெலுங்கு தேசம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாளிகையில் நிறுவப்பட்டுள்ள பாத் டப்பின் விலை மட்டும் ரூ.26 லட்சம் என்று தெலுங்கு தேசம் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்த அலுவலகமும், இடமும் … Read more

மூளை ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி-க்கு ரூ.41 கோடி நன்கொடை அளித்த முன்னாள் மாணவர்

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரான பிரேம் வத்சாவை நிறுவனராகக் கொண்ட ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கனடா நாட்டு நிதிநிறுவனம், சென்னை ஐஐடி -ன் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 கோடி) ஆராய்ச்சி மானியமாக வழங்க உள்ளது. 1971-ல் சென்னை ஐஐடி-ன் ரசாயனப் பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற பிரேம் வத்சாவுக்கு 1999-ம் … Read more

மகாராஷ்டிராவில் சோகத்தில் முடிந்த கார் சாகசம்: மலை உச்சியிலிருந்து விழுந்து பெண் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது 23 வயது இளம்பெண் ஒருவர் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திய காரணத்தால் மலையின் உச்சியில் இருந்து கார் பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதில் அந்தப் பெண் உயரிழந்துள்ளார். காரை அவர் ஓட்டிப் பார்த்து பழகியபோது இந்த சோகம் நேர்ந்துள்ளது. திங்கட்கிழமை அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியின் சுலிபஞ்சன் மலை பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. ஸ்வேதா எனும் அந்தப் பெண்ணுக்கு கார் ஓட்டி பழக வேண்டுமென்ற … Read more

வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியா? – ஆனி ராஜா விளக்கம்

புதுடெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியை கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை கைவிட … Read more

ஏர் இந்தியா விமான பயணத்தின்போது பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது. வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில் மறைந் திருந்த அந்த … Read more

“காங்கிரஸ் இந்துக்களை நம்பவில்லை” – பிரியங்கா போட்டி குறித்து ஆச்சார்யா பிரமோத் கருத்து

காசியாபாத்: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருமான ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் … Read more

நொய்டா பெண் வாங்கிய அமுல் ஐஸ்கிரீம் டப்பாவில் பூரான்: விசாரணை நடத்தப்படும் என அமுல் நிறுவனம் விளக்கம்

நொய்டா: ஐஸ்கிரீம் டப்பாவில் பூரான் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த தீபா தேவி, தனது 5 வயது குழந்தைக்கு மாம்பழஜூஸ் செய்து தர நினைத்தார். இதற்காக பிளிங்கிட் இணையதளத்தில் அமுல் நிறுவனத்தின் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்ததாகவும், அந்த ஐஸ்கிரீம் டப்பாவை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பூரான் உறைந்து கிடந்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவலை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை வீடியோவாக பதிவு … Read more

போப் – பிரதமர் மோடி பட சர்ச்சை: மன்னிப்பு கோரியது கேரள காங்கிரஸ்

புதுடெல்லி: ஜி7 மாநாட்டில் போப் பிரான்சிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இறுதியாக போப்புக்கு கடவுளைசந்திக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்ற வாசகத்தை காங்கிரஸ் கட்சி எழுதியிருந்தது. இதற்கு கேரள பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து, பாஜக கேரள மாநில பிரிவின் தலைவர் கே.சுரேந்திரன் எக்ஸ் பதிவில் கூறுகையில்,“பிரதமர் மோடியை ஆண்டவர் இயேசுவோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் இழைத்துள்ளது. இயேசுவை உயர்வாக கருதும் கிறிஸ்தவர்கள் காங்கிரஸ் … Read more

ராணுவத்துக்கான கவச வாகனங்களை இணைந்து தயாரிக்க திட்டம்: இந்தியா – அமெரிக்கா பேச்சில் முன்னேற்றம்

புதுடெல்லி: கவச வாகனங்களை இரு நாடுகள் இணைந்து தயாரிப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தளவாடங்கள் சிலவற்றை இந்தியாவே தயாரித்து வருகிறது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளிடமிருந்து இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதேபோல் கவச வாகனங்கள், போர் வாகனங்கள் சிலவற்றையும் இந்தியாவே உள்நாட்டில் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் காலாட்படை கவச வாகனங்களை (ஐசிவி) இந்தியா, அமெரிக்கா கூட்டு சேர்ந்துதயாரிக்கவுள்ளன. இதுதொடர்பாக இரு … Read more

டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்: குடிநீர் வாரிய அலுவலகம் மீது தாக்குதல்

புதுடெல்லி: டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது குடிநீர் வாரிய அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தண்ணீர்பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சில இடங்களில் லாரிகள் மூலம் விநியோக்கப்படும் தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் முண்டியடிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. சதார்பூரில் உள்ள டெல்லி குடிநீர் வாரிய கட்டிடத்தின் மீது … Read more