அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை… நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!

2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

“ஆட்சி அமைக்கும் முன்பாகவே வன்முறை” – தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன்மோகன் புகார்

அமராவதி: “ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியின் கும்பல்கள் வெறித்தனமாக செயல்படுகிறார்கள். கிராம நிர்வாக அலுவலகங்கள் … Read more

பிரதமர் மோடி பதவியேற்பது எப்போது? ஜூன் 8இல் இல்லை… வந்தது புதிய தகவல்…!

Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

“தமிழ்நாட்டின் விஷயங்களையும் கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்” – சுரேஷ் கோபி

திருச்சூர்: “ஒட்டுமொத்த கேரளத்துக்கும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்” என்று நடிகரும், திருச்சூர் எம்.பி.,யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் பாஜக-வை காலூன்ற வைத்துள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் … Read more

பாஜகவின் அடிமடியிலேயே கைவைக்கும் சந்திரபாபு நாயுடு… என்னென்ன கேட்குறாரு பாருங்க?

Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

25 வயதில் சாதனை: நாட்டிலேயே இளம் எம்.பி.க்களான சஞ்சனா ஜாதவ், சம்பவி சவுத்ரி!

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் சஞ்சனா ஜாதவ். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ராம்ஸ்வரூப் கோலி போட்டியிட்டார். தேர்தலில் 51,983 வாக்குகள் அதிகம் பெற்று சஞ்சனா ஜாதவ் வெற்றி பெற்றார். அவருக்கு வயது 25. நாட்டிலேயே இளம் பெண் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த சஞ்சனா, கடந்த 2019-ம் ஆண்டு மகாராஜ் சுராஜ்மால் பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன்பிறகு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் கப்தான் சிங் என்பவரை … Read more

முதல்வர் பதவியில் இருந்து விலகினார் நவீன் பட்நாயக்: ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து நவீன் பட்நாயக் விலகினார். இதையடுத்து, அவர் தலைமையிலான 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 … Read more

கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு: டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த்கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, மக்களவைத் தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்வதற்காக 21 நாள்கள் இடைக்காலஜாமீனில் வெளியே வந்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில்கடந்த 2-ம் தேதி மீண்டும் அவர் திஹார் சிறையில் சரணடைந்தார். இதனிடையே, உடல்நலக்குறைவு, மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை … Read more

சீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 3-வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில், … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் உயிரிழப்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்டில் மலையேற்றத் தில் ஈடுபட்ட 22 பேரில் 13 பேர் உயிரிடனும் 4 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சஹஸ்த்ரா தல் மலைப்பகுதி உள்ளது. சுமார் 4,400 மீட்டர் உயரம் கொண்ட இதில் மலையேற்ற வீரர்கள் அவ்வப்போது ஏறுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் என மொத்தம் 22 பேர் அடங்கிய குழுவினர் … Read more