மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9-ம் தேதி பதவியேற்றது. இதனையடுத்து, யார் யாருக்கு எந்தெந்த இலாகா என்ற விவரம் நேற்று (ஜூன் 10) அறிவிக்கப்பட்டது. இதன்படி, மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. அதேபோல், கூட்டுறவுத் துறையும் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை … Read more

Kerala Lottery: இன்று 3 மணிக்கு Sthree Sakthi SS-419 குலுக்கல்.. லட்சாதிபதி யார்?

Kerala Sthree Sakthi SS-419 Lottery Result: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-419 குலுக்கல் இன்று மலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கார்கி பவனில் நடைபெறுகிறது.

“நீட் கவுன்சிலிங் தொடங்க தடை இல்லை” – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக சுமார் 10 பேர் கடந்த ஜூன் 1-ம் தேதி வழக்கு தொடுத்தனர். தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர். கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான … Read more

சீன, பாக்., சவால்கள் என்ன? – மீண்டும் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: வெளியுறவு அமைச்சராக எஸ்.ஜெய்சங்கர் இன்று (ஜூன் 11) பொறுப்பேற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் ஜெய்சங்கருடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முந்தைய ஆட்சியில் தாங்கள் வகித்த அதே இலாகாவை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் முறைப்படி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய ஜெய்சங்கர், “மீண்டும் ஒரு முறை வெளியுறவு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். … Read more

ஜூன் 18-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்வதாக தகவல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 18 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரணாசி தான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி தொகுதி. அங்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் மோடி வாரணாசி செல்வது இது முதல் முறையாகும். பிரதமர் வருகையை … Read more

ஜெகன் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் தற்கொலை

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய்க்கு பந்தயம் நடந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் ரெட்டி (52). இவர் 7-வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினர். இவரது மனைவி விஜயலட்சுமி பஞ்சாயத்து தலைவராக … Read more

ஜேபி நட்டாவிற்கு பிறகு… பாஜக தலைவராக பதவி ஏற்க போவது யார்..!!

பாஜக தலைவர் ஜேபி நட்டா கேபினட் அமைச்சராக பதவியேற்றதன் மூலம் பிரதமர் மோடி அரசில் அங்கம் வகிக்கிறார். பிரதமர் மோடி அரசின் புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டதன் மூலம் பாஜக அமைப்பிலும் மாற்றத்திற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது. 

ஒரே பக்கமாக சாய்ந்த ஆந்திர மக்களின் தராசு முள்: ஜெகனின் அரசியல் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசும் ஆந்திர மக்கள்

அமராவதி: 2019 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்காலம் முடிவுக்கு வந்து விட்டதாக பலர் பேசினர். சந்திரபாபு நாயுடு மீண்டெழுவது முடியாத காரியம் என நினைத்தனர். ஆனால், அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்த அரசியல் அனுபவத்தால் அவர் தற்போது மீண்டெழுந்துள்ளார். ஆந்திராவின் முதல்வராக மட்டுமல்ல, மத்தியில் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அளவுக்கு மீண்டுள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எவ்வளவு தரக்குறைவாக இவரை விமர்சித்தாலும் இவர் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. எதிர்க்கட்சி … Read more

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு: துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே … Read more

விவசாயிகளுக்கு நிதி: 3-வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து

புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டுள்ளார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். … Read more