நாளை மோடி 3.0 பதவியேற்பு விழா: நேரலையில் எங்கு, எப்படி காண்பது? முழு விவரம் இதோ

Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. 

ட்ரோன்கள் பறக்க தடை: மோடி பதவியேற்பு விழாவுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

புதுடெல்லி: நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக நாளை (ஜூன் 8) பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி … Read more

ஜெகனுக்கு நெருக்கமான 3 அதிகாரிகள் இடமாற்றம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற நீரப் குமார் பிரசாத் பணியில் அமர்த்தப்பட்ட முதல் நாளிலேயே ஜெகனுக்கு நெருக்கமான 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த ஜவஹர் ரெட்டிக்கு புதிய அரசு விடுப்பு கொடுத்து அனுப்பியது. அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலராக ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த நீரப் குமார் … Read more

நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

புதுடெல்லி: போலி ஆதார் அட்டைகளுடன் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கடந்த ஜூன் 4-ம் தேதி ஊடுருவ முயன்ற மூன்று பேரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்துள்ளதாக நேற்று தெரிய வந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூவர்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறியதாவது: கடந்த ஜூன் 4-ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது நுழைவாயில் கதவு வழியாக உள்ளே நுழைய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த … Read more

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவிட பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகிற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேசிய அளவில் 67 மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர். இதில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, நெகட்டிவ் மதிப்பெண்கள் … Read more

ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசு தலைவர் அழைப்பு: நாளை 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியஅவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி அளவில் நடைபெறும் விழாவில், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த கூட்டணி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் பழைய … Read more

“அவர்கள் இன்று என்டிஏ-வை ஆதரிக்கலாம்… நாளை எங்களுடன் இணைவர்!” – சஞ்சய் ராவத் கணிப்பு

மும்பை: “வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், அதை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது சவாலானது” என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். “தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கலாம். ஆனால், நாளை அவர்கள் எங்களை ஆதரிப்பார்கள். அவர்கள் எங்களுடன் இணையலாம். பாஜகவின் பொது சிவில் சட்டம், அக்னி வீரர் திட்டம் போன்றவற்றை … Read more

எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து புது டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கூட்டணி எம்பிக்களின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்டிஏ-வின் இந்த முக்கிய முடிவை அடுத்து, பாஜக … Read more

“இனி சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன்” – கணிப்பு மிஸ் ஆனதை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த தனது கணிப்பு தவறாகி விட்டதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: “நான் எனது மதிப்பீட்டை உங்கள் முன் வைத்தேன். என்னுடைய கணிப்பு எண்களின் அடிப்படையில் 20 சதவீதம் தவறாகிவிட்டது என்பதை கேமராவில் நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். பாஜகவுக்கு 300-க்கு அருகில் சீட்கள் கிடைக்கும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்களுக்கு 240 தான் கிடைத்தது. … Read more

‘மேன் ஆஃப் த மேட்ச்’ ராகுல் காந்தியே எதிர்க்கட்சி தலைவர் ஆகவேண்டும்: சசி தரூர்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் (ராகுல் காந்தி) சந்தேகத்துக்கு இடமின்றி இந்த மக்களவை தேர்தல் வெற்றியின் நட்சத்திரம். அவர்தான் இந்த தேர்தலின் மேன் ஆஃப் த மேட்ச். அவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் நாடு முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், கார்கே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அங்கு அவர் … Read more