“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் … Read more

பூத்வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம்

புதுடெல்லி: பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. … Read more

சொகுசு கார் விபத்து: புனே சிறுவனின் ஜாமீன் ரத்து

புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி வரையில் அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க புதன்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புனேவின் கல்யாணி நகர் பகுதியில் ‘Porsche Taycan’ சொகுசு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தினார் அந்த சிறுவன். விபத்தை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 … Read more

இண்டியா கூட்டணியில் பிரதமராகும் தலைவர் இல்லை: அமித் ஷா பிரச்சாரம்

மேற்கு வங்கத்தின் கட்டல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இண்டியா கூட்டணி தலைவர்கள் தங்கள் வம்சம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் எவரும் அதில் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கான எந்த எண்ணமும் அவர்களிடம் இல்லை. இண்டியா கூட்டணியில் தலைவர்கள் எவரும் இல்லை. 5 ஆண்டுகளில் 5 பேர் பிரதமராக பதவி வகிக்க இக்கூட்டணி விரும்புகிறது. இண்டியா கூட்டணியில் பிரதமராக வரக்கூடிய … Read more

‘தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி செய்தவை…’ – பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: “கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்தார். முன்னதாக, “கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்” என்று பிரதமர் மோடி பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் … Read more

“பாஜகவுக்கு 300+ இடங்கள் உறுதி!”- பிரசாந்த் கிஷோர் விவரித்த ‘கணக்கு’

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024-ல் பாஜக 300+ இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ‘தி வயர்’ ஊடகத்துக்காக கரண் தாப்பருக்கு பிரசாந்த் கிஷோர் நேர்காணல் அளித்திருந்தார். அதில், “இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2019 தேர்தலின்போது பதிவான வாக்கு சதவீதத்தைவிட குறைந்திருப்பதால் பாஜக ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் … Read more

“இந்தியா திரும்பி வந்து சட்ட நடவடிக்கையை எதிர்கொள்…” – பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக திரும்ப வேண்டும் என்றும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவரது தாத்தாவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடந்த 18-ம் தேதி ஊடகங்களில் நான் பேசினேன். அப்போது நான் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தேன். அதிர்ச்சி மற்றும் வலியில் இருந்து நான் சற்று விடுபட எனக்கு நேரம் தேவைப்பட்டது. எனக்கு மட்டுமல்ல, எனது ஒட்டுமொத்த குடும்பம், கட்சியினர், … Read more

தானே ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் ஆம்பர் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை பகல் நேரத்தில், தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாது. இதனால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறியது. தொழிற்சாலையில் மூன்று முறை … Read more

“நான் தாக்கப்பட்டபோது கேஜ்ரிவால் வீட்டில்தான் இருந்தார்” – ஸ்வாதி மாலிவால் விவரிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் மே 13-ம் தேதி தான் தாக்கப்பட்டபோது, அவர் வீட்டில் இருந்தார் என்று தாக்குதலுக்கு உள்ளான ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரான பிபவ் குமாரால் கடந்த 13-ம் தேதி தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: மே 13 அன்று … Read more

பிரதமர் அவர்களே.. எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் -கெஜ்ரிவால்

Arvind Kejriwal Video: பிரதமரே, உங்கள் சண்டை என்னுடன் இருக்கட்டும்.. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை தயவு செய்து சித்திரவதை செய்யாதீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.