PM Modi: பிரதமர் பதவியேற்பு விழாவில் நடைபெறவுள்ள சுவாரஸ்ய அம்சங்கள்!

PM Narendra Modi: இன்று மாலை 7.15 மணிக்கு 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

3-வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி

புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது … Read more

2024 மக்களவை தேர்தலில் 73 பெண்களுக்கு வெற்றி: 2019 தேர்தலை விட எண்ணிக்கை குறைந்தது

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8%ஆகவும் இருந்தது. இது 2024-ல்9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தது. இதன் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார். மற்ற அனைத்து கட்சிகளிலும் இதற்கு அடுத்த நிலையில் 33 சதவீதம் மற்றும் அதற்கு குறைவாகவே பெண் வேட்பாளர்கள் இருந்தனர். … Read more

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸ்

புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து … Read more

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை ஏகமனதாக தேர்வு செய்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

பிரதமர் பதவியேற்பு விழா: வந்தே பாரத் லோகோ பைலட் சுரேகாவுக்கு அழைப்பு

புதுடெல்லி: நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தூய்மை பணியாளர்கள், வந்தே பாரத் பெண் டிரைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக நாளை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகள் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாள், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகள் தலைவர்களுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் என … Read more

‘தி ரைஸ் ஆஃப் நர லோகேஷ்’… – ஆந்திராவை தெலுங்கு தேசம் மீண்டும் ஆளவைத்த சம்பவக்காரர்!

அக்கட தேசமான ஆந்திராவில் மிகப் பெரிய பாரம்பரியம் கொண்டது தெலுங்கு தேசம் கட்சி. 2019 சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை சந்திக்காத சரிவாக 23 சீட் மட்டுமே அக்கட்சி வெல்ல, “இனி தெலுங்கு தேசம் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்காலம் இல்லை” என்று ஜெகன் மோகன் ரெட்டியின் எழுச்சியை மையப்படுத்தி டிடிபி-க்கு முடிவுரை எழுதினார்கள் அரசியல் வல்லுநர்கள். சரியாக ஐந்து வருடங்கள் கழித்து 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள … Read more

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி தேர்வு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார். தொடர்ந்து கௌரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோர் ஆதரவு அளிக்க, ஏகமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, … Read more

மாயாவதிக்கு மாற்றாக சந்திரசேகர் ஆசாத்? – உ.பி-யில் சுயேச்சையாக வென்ற தலித் தலைவரின் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவி மாயாவதிக்கு மாற்றாக சந்திரசேகர் ஆசாத் (37) உருவாகி வருவதாகத் தெரிகிறது. நகீனா தொகுதியில் இந்த தலித் தலைவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர், பீம் ஆர்மி எனும் அமைப்பை துவக்கி நடத்தும் ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத். 2020ல் ‘ஆசாத் சமாஜ் கட்சி(கன்ஷிராம்)’ எனும் … Read more

“குற்றம் செய்வோரை நீங்கள் ஆதரித்தால்…” – கங்கனா ரனாவத் @ அறைபட்ட சம்பவம்

மும்பை: “குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். அனுமதியின்றி, ஒருவரின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம்” என சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவானவர்களை பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும், … Read more