“என்டிஏ மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே ஆந்திராவின் வெற்றி” – சந்திரபாபு நாயுடு

விஜயவாடா: “மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி அதிர்ஷ்டவசமானது அல்ல. அது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. அதன் பிரதிபலிப்பே ஆந்திர மாநில வெற்றி” என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. மத்தியில் தற்போது அமைந்துள்ள … Read more

உத்தராகண்ட்டில் டெம்போ ட்ராவலர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; 14 பேர் படுகாயம்

ருத்ரபிரயாக் (உத்தராகண்ட்): ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லியில் இருந்து 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (ஜூன் 14) இரவு 11 மணி அளவில் சோப்தா நோக்கி புறப்பட்ட டெம்போ ட்ராவலர், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். … Read more

“மோடிக்கு நன்றி; அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் நாங்கள் வென்றோம்” – சரத் பவார்

மும்பை: “மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவில் நரேந்திர மோடி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அங்கெல்லாம் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே பிரதமர் மோடிக்கு நன்றி” என தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அணிக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனா (உத்தவ் தாக்கரே) அடங்கிய மகா விகாஸ் அகாதி களம் கண்டது. இந்த தேர்தலில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 31 … Read more

எனது தந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட சதி: எடியூரப்பா மகன் விஜயேந்திரா

பெங்களூரு: எனது தந்தை எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட அரசியல் சதி என்று அவரது மகனும் கர்நாடக பாஜக தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு 100% நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் சதி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மக்களின் ஆசீர்வாதங்கள், கோடிக்கணக்கான இதயங்களின் பிரார்த்தனைகள் ஆகியவை நீதியின் கோயிலில் வெளிப்பட்டன. எடியூரப்பாவுக்கு எதிரான சதி … Read more

சத்தீஸ்கர் என்கவுன்ட்டர் | 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியும் சமமற்ற நிலப்பரப்பும் மாவோயிஸ்ட்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர்களை ஒடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இத்தகைய முயற்சி ஒன்றின்போது 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராய்ப்பூரில் காவல்துறை அதிகாரி ஒருவர் … Read more

“மோடியின் பாதங்களை நிதிஷ் வணங்கியது பிஹாருக்கு அவமானம்” – பிரசாந்த் கிஷோர் சாடல்

பாகல்பூர் (பிஹார்): நரேந்திர மோடியின் பாதங்களை தொட்டதன் மூலம் முதல்வர் நிதிஷ் குமார், பிஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று தேர்தல் வியூக வகுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் பிரசாந்த் கிஷோர், பாகல்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று (ஜூன் 14) உரையாற்றினார். அப்போது அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது கால்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொட்டு … Read more

உ.பி.யின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள்: தண்டனை வாய்ப்புகளால் பதவிக்கு ஆபத்து

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி விசாரணை நிலுவையில் உள்ளது. இதில் 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை வாய்ப்பால் அவர்கள் எம்.பி பதவி பறிபோகும் ஆபத்தும் உள்ளது. நாட்டிலேயே அதிகமாக உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதன் 12 எம்.பி.க்கள் மீது நடைபெறும் வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த தீர்ப்புகளில் அந்த எம்பிக்களுக்கு 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை அளிக்கப்பட்டால், அவர்களது பதவிகள் பறிபோகும் ஆபத்து உருவாகி … Read more

“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” – பிரதமர் மோடி பேச்சு @ ஜி7 மாநாடு

இத்தாலி: “இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, ஜோர்டான், கென்யா, துனிஷியா, … Read more

குஜராத்தில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு

வதோதரா: குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார். அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க … Read more

குவைத் தீ விபத்து சம்பவம்: மத்திய அரசின் முயற்சிகளுக்கு பினராயி விஜயன் பாராட்டு

கொச்சி: குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த … Read more