‘‘இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும்” – ஷேக் ஹசீனா அழைப்பு

புதுடெல்லி: இந்தியா – வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து இரு நாடுகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடி … Read more

‘‘வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதி’’ – ஷேக் ஹசீனா முன்னிலையில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை தொடங்கவும், அந்நாட்டின் ரங்பூரில் புதிய தூதரகத்தை திறக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு … Read more

அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு சட்டம் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: அரசு தேர்வு வினாத்தாளை கசியவிடுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024-ன் பிரிவு 1ன் துணைப் பிரிவு (2)-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு … Read more

பிரதமர் மோடி – வங்கதேச பிரதமர் சந்திப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ஷேக் ஹசீனாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஷ்வால், “சிறப்பு விருந்தினருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் புதிய … Read more

நடைபாதைகளில் நிறுத்தப்படும் கார்களை 6 மாதம் பறிமுதல் செய்யுங்கள்: புனே காவல் துறை ஆணையர் உத்தரவு

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஹடாஸ்பர், ராம்டெக்டி, வனோவீர், பைரோபா நலா, ரஸ்தா பீட், பிப்வெவாடி, பாரதிவித்யா பீடம், பத்மாவதி உள்ளிட்டபகுதிகளில் காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கடந்த புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும்ஏராளமான 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். அவை விற்பனைக்கு என்றும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பாதசாரிகள் நடைபாதைகளைப் பயன்படுத்த முடியவில்லை. அதற்கு பதில் அவர்கள் சாலைகளில் நடந்து செல்கின்றனர். இதனால் … Read more

உலக நன்மைக்கான சக்தியாக யோகா கலையை உலகம் பார்க்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்: உலக நன்மைக்கான சக்தியாக யோகா கலையை உலகம் பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மக்களுடன் இணைந்து பல்வேறு யோகாசனங்களை பிரதமர் மோடி செய்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதேச யோகா தினத்தில் யோகா மற்றும் தியானத்தின் பூமியான … Read more

அலுவலகத்துக்கு தாமதமாக வந்ததால் ரூ.1,000 அபராதம் செலுத்திய நிறுவன தலைவர்

மும்பை: மும்பையைச் சேர்ந்த எவர் பியூட்டி நிறுவனத்தின் நிறுவனர் கவுஷல் ஷா. இவர் தன் நிறுவனத்துக்கு ஊழியர்கள் தாமதமாக வருவதைத்தடுக்க புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார். அதன்படி, ஊழியர்கள் சரியாக காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிறுவனர் கவுஷல் ஷாவே அலுவலகத்துக்கு 5 முறை தாமதமாக வந்துள்ளார். இதையடுத்து அவர் ரூ.1,000 அபராதம் செலுத்தினார். இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் … Read more

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை: பிஹார் மாணவர் வாக்குமூலம்

பாட்னா: நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பிஹார் மாணவர் அனுராக் யாதவ்போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதற்கு ஒருநாள் முன்னதாக மே 4-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். … Read more

கேஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அது முடிந்த நிலையில் … Read more

குமாரசாமி ராஜினாமா செய்ததால் சென்னப்பட்ணாவை குறி வைக்கும் டி.கே.சிவகுமார்!

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னப்பட்ணா இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் சென்னப்பட்ணா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக முன்னாள் முதல்வர் குமாரசாமி இருந்தார். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், சென்னப்பட்ணா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று சென்னப்பட்ணாவுக்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”எனது … Read more