சீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 3-வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில், … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் உயிரிழப்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்டில் மலையேற்றத் தில் ஈடுபட்ட 22 பேரில் 13 பேர் உயிரிடனும் 4 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சஹஸ்த்ரா தல் மலைப்பகுதி உள்ளது. சுமார் 4,400 மீட்டர் உயரம் கொண்ட இதில் மலையேற்ற வீரர்கள் அவ்வப்போது ஏறுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் என மொத்தம் 22 பேர் அடங்கிய குழுவினர் … Read more

INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!

INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.  

“அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்” – காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: “அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித் ஷா, கடைசியில் தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டார். ஒவ்வொரு அடியிலும் பொதுமக்களை முட்டாளாக்கி, மிகப்பெரிய முதலாளிகளுக்கு சவால் விடும் ராஜாக்களின் ராஜா, இன்று கிண்ணத்துடன் கையேந்தி பல கதவுகளைத் தட்டி, … Read more

மக்களவைத் தேர்தலில் வென்ற 4 இளம் வேட்பாளர்களும் பின்புலமும்

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 25 வயதுக்குட்பட்ட 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சனா ஜாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் சாம்பவி சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரிய சரோஜ் ஆகியோர் எம்.பிக்கள் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக … Read more

தேசிய அளவில் காங்கிரஸ் வாக்கு வங்கி உயர்வு; பாஜகவுக்கு சற்றே சரிவு!

புதுடெல்லி: 2019 தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-ல் 19.49% என்ற அளவில் இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 21.19% ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2% சதவீதம் காங்கிரஸின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், பாஜகவை பொறுத்தவரை ஒரு சதவீதம் சரிவை கண்டுள்ளது. தேர்தல் ஆணைய தரவுப்படி, பாஜக மொத்தமாக 36.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதுவே கடந்த 2019 தேர்தலில் … Read more

“நாம் வெட்கப்பட எதுவும் இல்லை” – பிஜேடி கட்சியினர் முன் நவீன் பட்நாயக் உருக்கம்

புவனேஸ்வர்: 24 ஆண்டுகால ஆட்சி குறித்து நாம் வெட்கப்பட எதுவும் இல்லை என பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன் நவீன் பட்நாயக் உருக்கமாக தெரிவித்தார். மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் … Read more

“பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக…” – இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கார்கே விவரிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று (ஜூன் 5) மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே … Read more

எல்.முருகன் முதல் ஸ்மிருதி இரானி வரை: தேர்தலில் தோல்வியுற்ற மத்திய அமைச்சர்கள்!

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்தத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள், ஸ்டார் வேட்பாளர்கள் என்று அறியப்பட்ட ஸ்மிருதி இரானி, எல்.முருகன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளனர். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அறைகூவலுடன் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் … Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு: பாஜக

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் … Read more