இந்த முக்கிய வீரரை கழட்டிவிடும் சன்ரைசஸ்? தட்டி தூக்கும் சிஎஸ்கே?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று கோப்பையை வெல்ல தவறியது. ஒவ்வொரு சீசனிலும் தோல்வியை சந்தித்து வந்த SRH, மற்ற அணிகளுக்கு பயம் காட்டும் ஒரு அணியாக மாறியதற்கு காரணம் அவர்களின் டாப் ஆர்டர் தான். டிராவிட் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா கூட்டணி யார் பந்து வீசினாலும் பயம் இல்லாமல் அதனை சிக்ஸர்களுக்கு பறக்க விடும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு பந்து வீச அனைவருக்கும் ஒரு அச்சம் இருந்தது. … Read more

பிரப்சிம்ரன் சிங் அரைசதம்…. லக்னோவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

தர்மசாலா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தர்மசாலாவில் இன்று நடைபெற்று வரும் 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாப்பின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் … Read more

ஒரே ஓவரில் 5 சிக்சர்… சாதனை பட்டியலில் இணைந்த ரியான் பராக்

கொல்கத்தா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை … Read more

PBKS-க்கு பெரிய வெற்றி… LSG-க்கு இனி பிளே ஆப் வாய்ப்பே இல்லை?

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரின் 54வது போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இன்றைய போட்டியில், கொல்கத்தாவிடம் ராஜஸ்தான் 1 ரன்னில் தோற்றது.  போட்டியின் டாஸை வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், பஞ்சாப் சுதாரித்துக்கொண்டு நம்பர் 3இல் ஜோஷ் இங்கிலிஸை இறங்கியது. அவரும் … Read more

தோனி உடனே ஓய்வு பெற… 3 முக்கிய காரணங்கள் – சிஎஸ்கேவுக்கு பெரிய நல்லது!

MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டது. கடந்த 15 சீசன்களாக சிஎஸ்கே தக்கவைத்திருந்த அனைத்து சாதனைகளும், பெருமைகளும் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக தவிடுபொடியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்திருக்கிறது. சிஎஸ்கேவின் நிலை எந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது என இதை வைத்தே நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும்.  இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு (CSK) மறைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், … Read more

சிஎஸ்கே ரசிகரை சூழ்ந்து ஆர்சிபி ரசிகர்கள் கலாட்டா – பெங்களூருவில் நடந்த களேபரம்..!!

CSK vs RCB Fans Fight : சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சனிக்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது. டாஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தான் வெற்றி பெற்றார். பெங்களூரு மைதானம் சிறியது என்பதால் சேஸிங் செய்யலாம் என … Read more

ஐபிஎல்: கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா , கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதலில் கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது மூன்று ஆட்டங்களிலாவது வென்றால் வாய்ப்பில் நீடிக்கலாம். ரகுவன்ஷி, கேப்டன் ரஹானே, சுனில் நரின் பேட்டிங்கில் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி … Read more

அஸ்வின் உட்பட இந்த ஐந்து வீரர்களுக்கு சென்னை அணியில் இனி இடமில்லை!

ஐபிஎல் 2025 தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மறைக்க வேண்டிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.  இந்த சீசனில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்றுள்ளனர். மேலும் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறி உள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு தொடருக்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய வேண்டி சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு … Read more

ஐ.பி.எல்.: இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர்களின் வரிசையில் ஆயுஷ் மாத்ரே

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதன்பின்பு சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே குறைந்த பந்துகளில் … Read more

ஐபில்2025 : ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரபாடா – குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சொந்த ஊர் திரும்பிய மர்மம் விலகியது

Kagiso Rabada : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பிளேயரான ககிசோ ரபாடா ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில் இருந்து அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால், மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடமுடியாது என்பது உறுதியாகியுள்ளது. ரபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரபாடா குறித்த இந்த செய்தி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரபாடா திடீர் பயணம் ஐபிஎல் 2025 … Read more