ஐ.பி.எல்.2025: டெல்லி அணியிலிருந்து முன்னணி வீரர் விலகல்

சிட்னி, இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் … Read more

ஆர்சிபிக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கேகேஆர் எதிரான போட்டி நடைபெறுமா?

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  இதையடுத்து போர் முடிவுக்கு வந்ததால், ஐபிஎல் தொடர் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் (மே 17) ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகள் நடைபெற … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்; அயர்லாந்து அணி அறிவிப்பு

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் மறுபடியும் அயர்லாந்து … Read more

’ஐபிஎல் விளையாட இந்தியா போகாதீங்க..’ முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பிளேயர் பகீர் கருத்து

IPL Latest News : இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, ஐபிஎல் 2025 சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது போட்டி மே 17, அதாவது நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட பிறகு, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் சென்ற நிலையில் இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், சில வீரர்கள் காயம் மற்றும் சர்வதேச போட்டிகளின் காரணமாக ஐபிஎல் விளையாட வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் … Read more

ஷான் டெய்டின் அனுபவம் எங்களுக்கு உதவும் – வங்காளதேச வீரர்

டாக்கா, வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது (நாளை) யு.ஏ.இ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தானுக்கு செல்லும் வங்காளதேச அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய … Read more

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற வங்காளதேச வீரர்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்திருந்தது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சிறந்த … Read more

ஆசை காட்டி மோசம் செய்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடரின்போது நடந்தது என்ன?

இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய 1 போட்டியில் மட்டுமே வென்றது. 1 போட்டி டிராவாகவும் மற்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இத்தொடரின் போதுதான், பிசிசிஐ விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இச்சூழலில் கடைசி மூன்று போட்டிகளுக்கும் … Read more

ஓய்வை அறிவிக்கும் முன் விராட் கோலியிடம் பேசினேன் ஆனால்… – ரவி சாஸ்திரி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக … Read more

இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்து அணியை சேர்ந்த 2 வீரர்களான ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன. “ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் … Read more

இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இத்தொடரில் இந்திய அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம்பெறுவார். அவருக்கு பிளேயிங் 11 இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். இதுவரை 9 … Read more