கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி பல தலைமுறைகளாக அற்புதமான பேட்ஸ்மேன்களைக் கண்டுள்ளது. 1970- 1980-களில் சுனில் கவாஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அதன்பின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் தெண்டுல்கர் வந்தார். தெண்டுல்கர் ஓய்வு பெற்றவுடன், விராட் கோலி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒரு முக்கிய வீரரானார். மூன்று பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், யார் சிறந்தவர்? என்று அடிக்கடி கேள்வி எழுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான ஆலன் லாம்பிடம் சுனில் கவாஸ்கர், விராட் … Read more

வருன் சக்கரவர்த்தியின் முதல் சம்பளம் இவ்வளவுதானா? ஆனா இப்போ? அவரே சொன்ன மேட்டர்!

தற்போது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வருண் சக்கரவர்த்தி. இவர் டிஎன்பிஎல், ஐபிஎல் மூலம் அடையாளம் காணப்பட்டார். கிரிக்கெட்தான் தனது வாழ்க்கை என முடிவு செய்வதற்கு முன்பு வரை வருன் சக்கரவர்த்தி பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.  ஐபிஎல் தொடரில் தனது பந்து வீச்சு தறனை வெளிப்படுத்தி தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய சுழற் பந்து வீச்சாளராக மாறி உள்ளார் வருண் சக்கரவர்த்தி. சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய … Read more

டி20 கிரிக்கெட்: பாப் டு பிளெஸ்சிஸ் உலக சாதனை

ஜார்ஜியா, அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் (இந்திய நேரப்படி இன்று) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் – எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற எம்.ஐ.நியூயார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் 103 ரன்களுடன் … Read more

இங்கிலாந்து தொடரில் தோற்றாலும் கம்பீர் மாற்றப்பட மாட்டார்! காரணம் இதுதான்!

Gautam Gambhir head coach: கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட கௌதம் கம்பீர் பொறுப்பேற்று ஓராண்டுகள் முடிவடைய உள்ளது, அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றதை விட அதிகமான தோல்விகளை தான் சந்தித்து உள்ளது. ஐபிஎல்லில் … Read more

சச்சின் முதல் டெஸ்ட் சதம் அடிக்க நான்தான் காரணம் – இங்கிலாந்து முன்னாள் வீரர் நகைச்சுவை

லண்டன், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை அதிக சதங்கள் (100) அடித்த வீரராக உள்ளார். இந்திய அணிக்காக 1989-2013-ம் ஆண்டு வரை விளையாடிய அவர் டெஸ்ட் போட்டியில் மட்டும் 51 சதங்கள் அடித்துள்ளார். அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை 1990-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பதிவு செய்தார். இந்நிலையில் முதல் முறையாக இங்கிலாந்தில் சச்சின் முதல் முறையாக சதம் அடித்ததற்கு காரணம் தான் தவற … Read more

கடைசி நேரத்தில் இணைந்த 2 பவுலர்கள்? இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

India tour of England, 2025: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட … Read more

"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரிஷப் பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது.இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், சுமார் 635 நாட்களுக்கு … Read more

இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! இங்கிலாந்து அணிக்காக விளையாடும் கலீல் அகமது!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்த கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி இருந்தார். பவர் பிளேயரில் அதிக விக்கெட் வீழ்த்திய பலர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் 18 பேர் கொண்ட இந்திய அணியில் அவரது … Read more

வரும் ஆசிய கோப்பையில் ரோகித், கோலி இல்லை.. என்ன காரணம்?

ஆசிய கோப்பை கடைசியாக 2023ஆம் ஆண்டு ஓடிஐ தொடராக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என பரவலாக பேசப்பட்டு வந்தது.  தற்போது பதற்றம் தணிந்த நிலையில், நடக்க இருக்கும் ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் … Read more

அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்.. சிஎஸ்கே தொடர் தோல்விக்கு பின் நடவடிக்கை!

இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு முக்கியமானதாகும். இங்கு பல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டும் வருகிறது. இந்த மைதானத்தைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரன்வுடாக பயன்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானம், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டது.  குறிப்பாக பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. … Read more