ஆர்சிபிக்கு தொடரும் சோகம்… இந்த வீரரும்காயத்தால் விலகல்? மாற்று வீரர்கள் யார் யார்?

IPL 2025: 18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. மே மாதம் கடைசி வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. தலா 5 கோப்பைகளை வென்றுள்ள சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீது மட்டுமின்றி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் இந்தாண்டு பலமாக காணப்படுகிறது.  ஆனால், வழக்கத்தை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Cha) அணிதான் வித்தியாசமானதாக தோற்றமளிக்கிறது. … Read more

பும்ரா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா.. பிசிசிஐ எடுத்துள்ள முடிவு என்ன? வெளியான தகவல்!

Jusprit Bumrah: இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியாவின் பல ஈக்கட்டான சூழ்நிலைகளில் அற்புதமாக பந்து வீசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்துச்சென்றவர். சமீபமாக நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணி கடுமையாக சொதப்பியது. ஆனால் எதிரணிக்கு ஓரளவுக்கு டஃப் கொடுக்க காரணமாக இருந்தவர் ஜஸ்பிரித் பும்ராதான்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது ஓய்வு … Read more

Ind vs Eng: தோல்விக்கு இதுவே காரணம்.. புலம்பும் ஜோஸ் பட்லர்!

ஏற்கனவே இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. அந்த அணி ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் நேற்று (பிப்.09) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்பு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தோல்விக்கான காரணங்களை விவரித்துள்ளார். இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் அவர், நாங்கள் நிறைய விஷயங்களை சிறப்பாக செய்தோம் … Read more

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணி எது? – அஸ்வின் கணிப்பு

புதுடெல்லி, 8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணி குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ‘துபாயில் விளையாடுவது இந்திய அணிக்கு உள்ளூர் சூழல் போன்று சாதகமான அம்சமாகும். அதே சமயம் இங்கு இந்தியாவை எதிர்த்து ஆடும் மற்ற அணிகளுக்கு கிட்டதட்ட வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் … Read more

தனது 36வது வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் யார் தெரியுமா?

இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இல்லை. ஆனால் டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை திணறடித்த காரணத்தினால் ஒருநாள் தொடர் தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பு வருண் இந்திய அணியில் இணைந்தார். முதல் … Read more

ரோகித் சர்மா அதிரடி சதம்.. இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

கட்டாக், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி

பெங்களூரு, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் இன்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி சார்பில் எட்கர் மெண்டெஸ் ஒரு கோலும்(43-வது நிமிடம்), அல்பெர்டோ 2 கோலும்(57, 82-வது நிமிடம்) அடித்தனர். அதே சமயம், ஜாம்ஷெட்பூர் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் … Read more

சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடர் நெருங்கி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி முடிந்த அடுத்த சில நாட்களில் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. இன்னும் ஐபிஎல் 2025 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகவில்லை. ஐபிஎல் நிர்வாகம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். 10 அணிகளும் போட்டிகளுக்காக தங்கள் தயாரிப்புகளை இறுதி செய்து வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றது. பல இளம் வீரர்களை ஒவ்வொரு அணிகளும் … Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்: நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்

லாகூர், 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற … Read more

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியில் கூடுதலாக வீரர் சேர்ப்பு

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்று வருகிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த 3-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கூடுதல் பேட்ஸ்மேனாக … Read more