குளுகுளு நீலகிரியில் தங்கும் விடுதிகள் இலவசம் – மாணவ, மாணவிகள் உடனே விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu Govt Offers Free Hostel : நீலகிரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 18 தங்கும் விடுதிகளில் இலவசமாக தங்கிக் கொள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நாளையும் (9-ம் தேதி), வரும் 12-ம் தேதிகளில் காலை 10.30, 11.35 மணி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் … Read more

திமுகவினரே ரகசியமாக வருவார்கள்… தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி!

மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், அமித்ஷா  வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.

“மதவாத சக்திகள் வரக்கூடாது என நினைக்கும் சக்திகளோடு சேர்ந்து விஜய் பயணிக்க வேண்டும்!” – துரை வைகோ நேர்காணல்

மதிமுக-வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை தராவிட்டாலும் திமுக கூட்டணியில் தொடர்வோம் எனச் சொன்னார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்போது, “வைகோவுக்கு ராஜ்யசபா சீட் தராதது வருத்தமே” என்று பளிச்சென தனது கருத்தைச் சொல்லி இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மதிமுக நிர்வாகிகளுக்கும் இந்த வருத்தம் இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக மவுனம் காக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு சட்டமன்றத் தேர்தலிலாவது மதிமுக-வுக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமா என்பதாகவே இருக்கிறது. இந்த நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக … Read more

பொறியியல் கலந்தாய்வு, துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கயத்தாறு அருகே துணை மின் நிலைய மின்மாற்றியில் தீ விபத்து – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. பல இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான துணை மின் நிலையம் உள்ளது. இந்நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள … Read more

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் பேசி முடிவு செய்யப்படும்: திடீர் பயணமாக சென்னை வந்த ராமதாஸ் தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், உட்கட்சி பிரச்சினையை … Read more

தொகுதி மறுவரையறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் கட்சிகளை கலந்து பேசாமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாநிலத்துக்கு மாநிலம் பாஜக மதவாத அரசியல் வடிவத்தை மாற்றி கையிலெடுக்கும். வட இந்தியாவில் விநாயகர், ராமர் அரசியலையும், மேற்கு வங்கத்தில் துர்கா, காளி அரசியலையும் முன்னெடுக்கிறார்கள். தமிழகத்தில் முருகனை கையில் … Read more

மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

பொதுமக்கள், வாக்காளர்கள் குறைகளை கேட்டு பொறுமையாக பதிலளிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலை திமுக, பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, … Read more

தங்க நகை கடன் தொடர்பான எனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது ரிசர்வ் வங்கி: சு.வெங்கடேசன் எம்.பி பெருமிதம்

சென்னை: தங்க நகை கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக நான் எழுப்பிய கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக … Read more