வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த‌ கர்நாடக அதிகாரிகளிடம் ரொக்கம், நகைகள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக 13 அரசு அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் 13 அதிகாரிகளின் வீடு, அலுவலகம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என 63 இடங்களில் சோதனை நடத்தினர். கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவர் விஜயேந்திராவின் மைத்துனரும் யாதகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியுமான பிரபுலிங்மங்கருக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலிருந்து ரூ. … Read more

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை மிரட்டிய ‘மிக்ஜாம்’ தீவிர புயல், தெற்கு ஆந்திராவின் பாபட்லா அருகே நேற்று மாலை கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்த நிலையில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் கடந்த 4-ம் தேதி நிலவிய ‘மிக்ஜாம்’ தீவிர புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 4-ம் … Read more

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 12-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் … Read more

சென்னை வெள்ளம் | வேளச்சேரி முதல் சைதாப்பேட்டை வரை – அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்!

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் வெள்ளம், புயல் அபாயத்தின்போது சென்னை நீருக்குள் மூழ்கி மீண்டும் மீண்டும் மீள்கிறது. முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாதிப்பு என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. `மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது வரலாறு காணாத அதிகனமழை. … Read more

“ரூ.4,000 கோடி திட்டம் என்ன ஆனது?” – இபிஎஸ் கேள்வி @ சென்னை வெள்ளம்

சென்னை: “முதல்வரும், திமுக அமைச்சரும், சுமார் ரூ.4,000 கோடியில் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்திருக்கிறோம். மழை பெய்தால் சொட்டு தண்ணீரும் தேங்காது என வீர வசனம் பேசினார்கள். ஆனால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆக, ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் தண்ணீர் வடியவில்லை?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொடர் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் … Read more

“எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை” – கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின், மிக்ஜாம் புயல் காரணமாக தனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை என எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார். “எனது பகுதியில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இல்லை. பல்வேறு இடங்களில் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என உறுதியாக தெரியவில்லை” என அஸ்வின் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் 30+ … Read more

சென்னை வெள்ளம் | பேரிடர் பாதிப்புகளை விரைந்து களைய திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு மீட்பு பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி உதவிகள் செய்து கொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் … Read more

“மழைநீர் தேக்கத்தால் சென்னையில் மின் விநியோகம் தாமதம்” – அமைச்சர் தகவல் 

சென்னை: “துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது, பொது மக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “நேற்று (04.12.2023) காலை 12 மணி நிலவரப்படி 112 மெகாவாட் ஆக இருந்த சென்னை நகரின் தேவை … Read more

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: பாதிப்புகளும் மீட்புப் பணிகளும் – ஒரு பார்வை

சென்னை வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு: மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகரில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் மின்சாரம் தாக்கி இருவர், மரம் முறிந்த விபத்தில் இருவர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இருவர், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை பெருநகரில் 69 இடங்களில், சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னைப் பெருநகர … Read more