டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? – அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது  கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

என்எல்சி சேதப்படுத்திய பயிர்களுக்காக ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு: ஆக.6-க்குள் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிர்வாகத்தால், விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி … Read more

இந்த மாதிரி தக்காளி விற்பனை செய்யுங்க… தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ ஐடியா!

தக்காளி விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது. தமிழகத்தில் சில்லறை விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழையால் தமிழகத்திற்கான வரத்து குறைந்ததே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் … Read more

செந்தில் பாலாஜி ஆதாரவாளர் வீட்டில் சோதனை… அமலாக்கத்துறை அதிரடி – பின்னணி என்ன?

Dindigul ED Raid: திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய நிறுவனங்களின் மனு தள்ளுபடி

சென்னை:முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், டெண்டர் முறைகேடு … Read more

விடாமல் தடுத்த செந்தில் பாலாஜி… டெல்லியில் சீறிய ED… டார்கெட் 2க்கு அடி போட்டாச்சு!

புழல் சிறையில் அடைக்கப்பட்டாலும் செந்தில் பாலாஜி மீதான ED-ன் டார்கெட் முடிவுக்கு வராது போல. எப்படி முடியும். இன்னும் விசாரிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள முடிஞ்சிருமா? இப்படி தான் கேட்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இன்று கூட உச்ச நீதிமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாதத்தை அமலாக்கத்துறை எடுத்து வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் சிக்கல் என்ன உடைத்து பேசிய முத்தலீஃஅமலாக்கத்துறை கைது இதன்மூலம் கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு நடந்த முறைகேடு … Read more

எம்.ஜி.ஆரின் சிலையை பார்த்தே நடுங்குபவர்கள் திமுகவினர்-ஜெயகுமார்

எம்.ஜி.ஆரின் சிலை மீது வர்ணம் பூசிய விவகாரம்: திமுகவினர் மீது குற்றம் சாட்டும் அமைச்சர் ஜெயகுமார். 

ஊரக வளர்ச்சித் துறைக்காக ரூ.23.84 கோடியில் 253 வாகனங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ரூ.23.84 கோடி மதிப்பிலான 253 வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-24ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்கவும் ஏதுவாக புதிய வாகனங்கள் … Read more

தெற்கில் திரும்பிய தமிழக அரசியல்… அலர்ட் அதிமுக, பலே பாஜக, திருப்புமுனை திமுக!

தமிழகத்தில் அரசியல் ரீதியாக நான்காக பிரிக்கலாம். வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் தெற்கு தமிழகம். இதில் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவிற்கு ஆதரவு அலை நீடிக்கிறது. குறிப்பிடத்தக்க அளவிற்கு வாக்கு வங்கியும் உண்டு. மேற்கில் அதிமுகவின் கொடி தான். தெற்கை பொறுத்தவரை , அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் சமமான போட்டி நிலவுவதை பார்க்கலாம். மதுரை மாநாட்டின் கூட்டத்தை தடுக்கவே முடியாது – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ! தென் தமிழக அரசியல் அதேசமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை … Read more

தானே கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த இரு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் ஷாஹாபூரில் சம்ருத்தி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் கிரேன் ஒன்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு … Read more