“நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்” – அமைச்சர் மா.சு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும் அவர் அறிவுறுத்தினார். Source link

அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை … Read more

கலாஷேத்ராவில் என்ன நடக்கிறது? பாலியல் புகார் உண்மையா? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவிகள் போராட்டம், மகளிர் ஆணையம் விசாரணை என பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். முதல்வர் ஸ்டாலின் பதில் அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் , மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் … Read more

அதிகரிக்கும் கொரோனா… தமிழ்நாட்டில் இனி இது கட்டாயம் – அறிவித்தார் அமைச்சர்!

Tamil Nadu Covid Update: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக்கூட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கிவைத்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” மாநில சுகாதார பேரவையை கடந்தாண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக … Read more

விகேபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் மீண்டும் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

விகேபுரம்: விகேபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் கூட்டம் புகுந்து கரும்புகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியிருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் விகேபுரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டு எருமை, காட்டுப்பன்றி, கரடி, மான், மிளா உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக யானைகள் கூட்டம் சமீபகாலமாக அனவன் … Read more

ரூ.45,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: ஹால்மார்க் முத்திரை காரணமாக விலை உயர்வா?

ரூ.45,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: ஹால்மார்க் முத்திரை காரணமாக விலை உயர்வா? Source link

#BREAKING: குறிப்பிட்ட தேதியில் டாஸ்மாக் விடுமுறை.! குடிமகன்கள் அதிர்ச்சி.! 

திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டு வருகின்றது. இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், வரும் ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் … Read more

அம்பத்தூர் ஆவின் பால் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட்..!!

சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் 14.50 லட்சம் லிட்டர் பால் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நேற்று (மார்ச் 30) பால் விநியோகம் செய்யக்கூடிய அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய ஆவின் நிர்வாகம், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக … Read more

சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் | தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் … Read more

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்; பாலியல் புகார்… தொடரும் போராட்டம்- சிக்கப் போவது யார்?

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி அமைந்துள்ளது. இங்கு நடனம் உள்ளிட்ட கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம், தமிழக போலீசார் ஆகியோர் களமிறங்கினர். கலாஷேத்ராவில் சர்ச்சை இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மாணவி என தவறாக சித்தரிக்கப்பட்டதாக புதிய சர்ச்சை வெடித்தது. இதையொட்டி அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் பாலியல் பிரச்சினை … Read more