சென்னை: திருமண கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவரொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரைச் சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி. இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தோழி பூனம் என்பவரது சகோதரியின் திருமண வரவேற்பு … Read more

விழுப்புரம் : பெற்றத் தந்தையை சரமாரியாக குத்தி கொன்ற மகன்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே ஈயக்குனம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மகன் சுப்ரமணி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார். இதையறிந்த அவரது தந்தை சுப்ரமணியை கண்டித்து வந்ததனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுப்ரமணி நேற்று இரவு போதை தலைக்கு ஏறிய நிலையில் வீட்டுக்கு வந்து, தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் போதையில் படுத்து தூங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலையில் எழுந்த … Read more

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் : அமைச்சர் விளக்கம்..!!

தமிழக சட்டபேரவையில் கடந்த 20-ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (21-ந்தேதி) வேளாண் பட்ஜெடை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்கள். பின்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டபேரவையில் இன்று பட்ஜெட் மீதான … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம் | புதுவை சட்டப்பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங்., வெளிநடப்பு

புதுச்சேரி: ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதம் முழுவதும் பேரவை குறிப்பிலிருந்து இறுதியில் நீக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் அவர் எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் இன்று பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் … Read more

மகளிர் உரிமைத் தொகை: ஒரு கோடி பேருக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். பரிசோதனை முயற்சியில் சில நாடுகளில் குறிப்பிட்ட சில பிரிவினர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பும் பலனும் கிடைத்துள்ளது. வறுமையை ஒழிக்க உதவி செய்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த திட்டத்தால் தமிழ்நாடு எவ்வளவு பலன் அடையும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். யார் யாருக்கு வழங்குவார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் குடும்ப செலவில் … Read more

நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் கைது: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு முத்துகிருஷ்ணன் முத்து மணிகண்டன் செண்பகநாதன் செந்தில் முருகன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். சுந்தரம் தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரம் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007 இன் கீழ் தனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை … Read more

கார் விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.!

செங்கல்பட்டு: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

“அதிமுகவில் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள்; தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி இது”-இபிஎஸ்

“அதிமுகவில் என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். இந்த பழனிசாமி இல்லை என்றால் இன்னொருவர் ஆள்வார். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியாது” என தஞ்சையில் நடைபெற்ற  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தஞ்சை மகாராஜா திருமண மகாலில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இளைய மகனுக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, … Read more

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தரவுகள் திருட்டு: ஆடியோ ஆதாரத்துடன் பள்ளி கல்வித் துறை புகார்

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தரவுகள் திருட்டு: ஆடியோ ஆதாரத்துடன் பள்ளி கல்வித் துறை புகார் Source link