விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் ரூ.2,000 கோடியில் அமைகிறது பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா- ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா, விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1,052 ஏக்கரில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், உலங்கெங்கும் வாழும் இந்தியர்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு காஞ்சிபுரம் பட்டு ஆடைகளை வாங்குவது நம் பெருமை என கூறினார். பின்னர் பேசிய முதலமைச்சர், 2030-31ஆம் ஆண்டிற்குள் தமிழகம் ஒரு … Read more

தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்- மாசி சடையன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் 6 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட பின்னணி … Read more

அந்தியூரில் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை

ஈரோடு: அந்தியூர் அருகே ஏர் கன் எனும் துப்பாக்கியால் சுடப்பட்டு நாட்டு நாய் கொலை செய்யப்பட்டது. மைக்கேல் பாளையத்தில் தோட்டத்தில் இருந்த நாயை மோகன்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தோட்ட உரிமையாளர் மாணிக்கம் புகாரில் தலைமறைவான மோகன்ராஜ், அண்ணாதுரையை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரியில் ரூ2 கோடி மதிப்பு வீட்டை அபகரித்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி; மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை

புதுச்சேரியில் ரூ2 கோடி மதிப்பு வீட்டை அபகரித்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி; மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை Source link

கோவை : ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மூன்று பேர் கைது.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த செய்தியை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் வீட்டின் அருகே வசித்து வரும் திருநங்கை ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி போலீசார் சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்று அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி … Read more

பெண்களுக்கான வேலை வாய்ப்பு – 2 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்!!

சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் இரண்டு தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய, பல்நோக்கு உதவியாளர் … Read more

“உங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்” – நடிகர் கார்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: “உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம்” என்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை பாராட்டி நடிகர் கார்த்தி எழுதிய கடிதத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பின் கார்த்தி சிவகுமார், உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்.உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி … Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நரேந்திரன் 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகள்.. 7 மணி நேரம் வைக்கப்பட்ட வாதங்கள்!

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பிற்காக வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்காக … Read more

‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான்; மன்னிப்பு கேட்கிறேன்’: யூடியூபர் மாதேஷ் வெளியிட்ட வீடியோ

‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான்; மன்னிப்பு கேட்கிறேன்’: யூடியூபர் மாதேஷ் வெளியிட்ட வீடியோ Source link