கூட்டுறவு சங்க பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்வு வாரியம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணி நியமனங்களுக்காக 3 மாதங்களில் ஒருங்கினைந்த தேர்வு வாரியம் அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மாவட்ட ஆவினில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 60 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எம்.தண்டாபணி பிறப்பித்த உத்தரவு: ஆவின் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. பணியாளர் நியமனம் மற்றும் … Read more

ஆவின் தயிரில் இந்தி.?.. ‘தொலச்சிடுவேன்’ – முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு.!

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என இந்தியில் அச்சிடவேண்டும் என்று ஒன்றிய அரசின் உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார். FSSAI FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் FSSAI-இடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆவினில் இந்தி.? இந்தநிலையில் ஆவின் … Read more

புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

கோவை: பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கி.மீ விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28). கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆன இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். … Read more

என் கல்லறையில் ‘கோபாலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என எழுத வேண்டும்: சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்

என் கல்லறையில் ‘கோபாலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என எழுத வேண்டும்: சட்டசபையில் துரைமுருகன் உருக்கம் Source link

10ம் வகுப்பு செய்முறை தேர்வு 1 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே 10-ம் வகுப்பு பொதுத் … Read more

உதவித் தொகையை உயர்த்தியது தமிழ்நாடு அரசு!!

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். இன்று பேரவையில் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையை விருதுநகர் மாவட்டத்தில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை ரூபாய் 95.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும், இம்மருத்துவமனை செப்டம்பர் மாதம் துவங்கப்படும் … Read more

வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு: மேலும் 6 மயில்கள் உயிரிழப்பு..!

கரூர் மாவட்டத்தில் பீர்க்கங்காய் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை மேய்ந்த மேலும் 6 மயில்கள் இறந்தன. குளித்தலை அருகிலுள்ள பிள்ளபாளையத்தில் பூச்சிமருந்து அடிக்கப்பட்ட தோட்டத்தில் இரை தேடிய 8 மயில்கள் நேற்று இறந்தது தொடர்பாக விவசாயி முருகானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்றும் 6 மயில்கள் அதே தோட்டத்தில் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் மயில்களை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியதோடு, தோட்டத்தில் சிதறிக்கிடந்த விஷம் கலந்த நெல்மணிகளை 100 நாள் பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்தினர். மயில்கள் … Read more

ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசிடம் ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப்புக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை, ஒரு மாதத்தில் செலுத்தும்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946ம் ஆண்டு 160 ஏக்கர் 86 செண்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 1970-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி … Read more

பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்

கேடிசி நகர்: பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சிகளை ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர். கணவரின் குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் படும் அவதிகள், ஆண்களின் அலட்சியத்தால் ஏற்படும் சாலை விபத்துகள், சூதாட்டத்தின் விளைவுகள், பஸ் நிலையங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள், குழந்தை திருமணம் என பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் நிலை காட்சிகளாக ‘தத்ரூபமாக’ நடித்துக் காட்டினர். இந்த … Read more