பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: ஜாக்கிகள் வரவழைக்கப்பட்டு வீட்டை நகர்த்திய உரிமையாளர்

விருதுநகர்: பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை இடிக்காமல் 14 அடிக்கு நகர்த்தி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் லக்ஷ்மணன் இவரது மனைவி பஞ்சவர்ணம் 2001 முதல் 2006 வரை பிள்ளையார் நத்தம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தார். அப்போது ஏற்பட்ட தேர்தல் பகை தான் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் … Read more

நியாயமான கோரிக்கைங்க, விரைந்து நிறைவேற்றி கொடுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் விடுத்த உருக்கமான கோரிக்கை!

தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இயக்குபவர்களின் வாழ்வியல் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மிக மிக நியாயமானவையாகும். அவர்களது கோரிக்கை முழக்கங்களிலிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் … Read more

பழனி படிக்கட்டு போல கட்டுமஸ்தான உடலுக்கு ஊசி செலுத்திய மாஸ்டர் பலி..! அதிகப்படியான ஸ்டீராய்டால் விபரீதம்

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஆணழகன் போட்டிக்காக ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் கட்டுமஸ்தாக இருக்க அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் இரண்டு கிட்னியும் செயலிழந்ததால்  நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு. உடலில் பழனி படிக்கட்டுக்கள் போல சிக்ஸ் பேக் வைக்கவும்… இரண்டு கைகளையும் உருண்டு திரண்ட ரெக்கையை போல மாற்றுவதற்காகவும்… ஜிம்மில் அதிதீவிர பயிற்சி மேற்கொண்டதால் … Read more

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2022-23-ல் ரூ.4,978 கோடி நஷ்டம் – மாதத்துக்கு ரூ.452 கோடி இழப்பு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் 2022 – 2023-ம் நிதியாண்டில் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துறையின் கீழ் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினசரி 1.70 கோடி பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான … Read more

மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை

மாங்காடு: மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை அன்று பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் காணிக்கையாக ரூபாய் 31,66,363/-  (ரூபாய் முப்பத்து ஒன்று இலட்சத்து அறுபத்து ஆறாயிரத்து 3 முன்னூற்று அறுபத்து மூன்று மட்டும்) கிடைக்கப்பெற்றது. மேலும் பொன் இனங்கள் 320 கிராம் மற்றும் வெள்ளி இனங்கள் 450 கிராம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேற்படி உண்டியல் திறப்பில் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர். சீனிவாசன், திருக்கோயில் துணை … Read more

ஆதார் அட்டை பயன்படுத்தி நேரில் வராமலே ஓட்டுநர் உரிமம்… இணையதளம் மூலம் 24 சேவைகள் – அமைச்சர் சிவசங்கர்

ஆதார் அட்டை பயன்படுத்தி நேரில் வராமலே ஓட்டுநர் உரிமம்… இணையதளம் மூலம் 24 சேவைகள் – அமைச்சர் சிவசங்கர் Source link

மகனை கத்தியால் வெட்டிவிட்டு.. தந்தை செய்த காரியம்.! தர்மபுரியில் சோகம்..!

தர்மபுரி மாவட்டத்தில் மகனை கத்தியால் வெட்டிவிட்டு தந்தையை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் போலரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (65). இவருக்கும், இவரது மகன் ஓட்டுநரான சின்னசாமி(40) என்பவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோவிந்தன், சின்னசாமியை கத்தியால் வெட்டியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த சின்னசாமியை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து … Read more

மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. பல்வேறு வழிகளை பின்பற்றிய மத்திய அரசு தற்போது புதுமாதிரியாக தயிர் பாக்கெட்டை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக … Read more

ஹோட்டலே இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு வழங்கியதாக பில்.. ஓ.பி.எஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சு பதில்..!

கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வழங்கிய உணவகங்களுக்கான கட்டணம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் இன்னும் வழங்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அநியாயமான வகையில் கொடுக்கப்பட்ட பில்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். நியாயமான வகையில் இருந்த பில்கள் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஹோட்டலே இல்லாமல் உணவு வழங்கியதாக கொடுக்கப்பட்டுள்ள பில்கள் தான் செட்டில் செய்யவில்லை எனவும் மா.சுப்பிரமணியன் விளக்கம் … Read more