2030க்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் இலக்கை அடைய வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊரக உள்ளாட்சித்துறை உத்தரவு

நெல்லை: உலக தண்ணீர் தினமான வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கும் நிலையில், வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் இலக்கை அடைந்திட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை வலியுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினம் வரும் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி இக்கூட்டத்தை நடத்துவதோடு, இக்கூட்டம் நடக்கும் இடத்தை … Read more

செம்ம மாடல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. விலை கம்மி.. போகோ எக்ஸ்5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

செம்ம மாடல்.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. விலை கம்மி.. போகோ எக்ஸ்5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் Source link

பழிக்கு பழி தீர்க்க நீதிமன்ற வளாகத்தில்.. விரட்டி விரட்டி நிகழ்ந்த கொலை.!

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி அருகே  ஜாமீனில் வெளிவந்தவரை பட்டப் பகலில் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே  தேவிப்பட்டினத்தைச் சார்ந்தவர் செல்வகுமார். இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து  ஜாமீனில் வெளிவந்தவர். தன்னுடைய அண்ணன் மகளை கேலி செய்தவரை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் சிவகிரி நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு ஆஜராக சென்று கொண்டிருந்தபோது சிவகிரி மருத்துவமனை அருகே மோட்டார் … Read more

தாயாரை கொலை செய்து விட்டு வீட்டிலேயே அமர்ந்து மது அருந்திய கொடூர மகன்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுகுடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட தாயாரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்கரமல்லூரைச் சேர்ந்த வாணிஸ்வரியின் கணவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட 2 மகன், ஒரு மகளை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். 2 மகன்களும் காவலர் பணியில் சேர்ந்த நிலையில், 2வது மகன் தினேஷ், மதுபழக்கத்திற்கு அடிமையாகி பணிக்குச் செல்லாததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார். தினேசுக்கு 3 குழந்தைகள் … Read more

செல்ஃபி மோகத்தால் ஓடும் ரயில் முன் சென்ற சேலம் இளைஞர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம்

சேலம்: சேலம் அருகே செல்ஃபி மோகத்தால் இளைஞர் ஓடும் ரயில் முன்பு நின்று செல்போனில் படம் பிடித்தபோது, ரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் பொறியியல் பட்டதாரியான காங்கேயத்தான் (22). இவர் நேற்று நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) மூவருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி … Read more

ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி புகார்; சொத்துகள் அபேஸ், பங்குகள் மாற்றம்… என்ன நடக்கிறது?

ஸ்ரீதர் வேம்பு என்ற பெயரை கேட்டாலே ஐடி ஊழியர்களுக்கு சட்டென்று நினைவில் தோன்றுவது ஜோஹோ (Zoho) நிறுவனம் தான். தஞ்சாவூரில் பிறந்து சென்னை ஐஐடியில் படித்து, அமெரிக்காவில் ஆய்வு பட்டம் என தனது அறிவை பட்டை தீட்டிக் கொண்டவர். பின்னர் குவால்காம் நிறுவனத்தில் வேலை, சென்னை திரும்பி ஸ்டார்ட்-அப் நிறுவனம் என தற்போது சாகசக்காரராக மாறியிருக்கிறார். Zoho Corporation நிறுவனர் இவரது Zoho நிறுவனத்தை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்து சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். … Read more

சீசன் துவங்கியது: விருதுநகரில் சூடுபிடிக்கும் கொடிக்காய் விற்பனை

விருதுநகர்: சீசன் துவங்கியதையடுத்து விருதுநகரில் கொடிக்காய் விற்பனை சூடுபிடித்துள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். விருதுநகர் அருகே தாதம்பட்டி மீசலூர், மருளத்தூர், இனாம் ரெட்டியாபட்டி, செந்நெல்குடி ஆகிய பகுதிகளில் கொடிக்காய் விவசாயம் நடைபெறுகிறது. கொடிக்காய் எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது‌. விவசாயிகள் தனி மரமாகவும், 5 முதல் 10 மரம் என தோப்பாகவும் வளர்க்கின்றனர். வறட்சியை தாங்கி வளரக்கூடியது. குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியது என்பதால் விவசாயிகள் இதனை விரும்பி வளர்க்கின்றனர். … Read more

சென்னையில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட முடிவு – காரணம் இதுதான்!

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி மற்றும் செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மெட்ரோ ரயில் நிலையம் … Read more

தன்னை வீடியோ எடுத்த நபரை ஆத்திரத்தில்.." தாக்கி மிதித்தே கொன்ற யானை!

கிருஷ்ணகிரி அருகே செல்போனில் படம் பிடிக்க முயன்ற இளைஞரை காட்டு யானைகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்றையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இந்த யானைகள் ஊருக்குள் வந்து விடும். கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு காட்டு யானைகளை  ராம்குமார் என்ற இளைஞர் செல்போனில் படம் பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காட்டு யானைகள் … Read more