முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு அநீதி இழைப்பதா?- நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவும்: ராமதாஸ்

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமும், பள்ளிக் கல்வித்துறையும் செய்த தவறுகள் தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் எனும் … Read more

அடுத்த டிஜிபி யார்? காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் கடும் போட்டி  

அடுத்த டிஜிபி யார்? காவல்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் கடும் போட்டி   Source link

டார்கெட் இதுதான்! எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார். முதல் படிவத்தை எதிர்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி பெற்று கொண்டார். தொடர்ந்து மூத்த நிர்வாகிகளும் உறுப்பினர் படிவங்களை பெற்றுக்கொண்டனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திருமண உதவித் திட்டம், மடிக்கணினித் திட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம் உட்பட அனைத்தையும் நிறுத்தி விட்டார்கள். இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவமனை வசதியை … Read more

இனி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது., தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். … Read more

இன்ஸ்டாகிராமில் காதல் காமுகனிடம் சீரழிந்த சிறுமி.. பெற்றோர்களே உஷார்….! இந்த வயதில் ஸ்மார்ட் போன் தேவையா..?

இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்த 10ம் வகுப்பு மாணவி விபரீத காதலில் விழுந்ததால், காமுகனால் சீரழிக்கப்பட்டு வெளிமாநிலத்தில் கைக்குழந்தையோடு காப்பகத்தில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பள்ளிச்செல்லும் சிறுமிக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. முகத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் தான் இரு மாநில போலீசாரால் தேடப்படும் இரணியலைச் சேர்ந்த வைகுண்டஅருள்..! ஸ்டைலான செல்பி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை … Read more

டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு தமிழக கட்சிகள் கோரிக்கை

சென்னை: காவிரி டெல்டாவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக தலைவர் அன்புமணி: சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்களை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில், தமிழக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, புதிய … Read more

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Source link

பல் பிடுங்கி பல்வீர் சிங் விவகாரம்.. வெயிட்டிங் லிஸ்டில் 6 காவலர்கள்.. சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. சிறு சிறு பிரச்சனைகளில் சிக்கும் விசாரணை கைதிகளை திரைப்படம் பாணியில் கொடூரமான தண்டனைகளை வழங்கப்படுவதாக என புகார் எழுந்தது.  விசாரணை கைதிகளாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட 10 இளைஞர்களின் பற்களை கட்டிங் பிளேடு கொண்டு பிடங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மாநில மற்றும் … Read more

ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி!!

திருமணத்திற்குப் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்த விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சமரி கிராமத்தைச் சேர்ந்த ஹேமேந்திரா மேராவி என்ற இளைஞருக்கு மார்ச் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது புது தம்பதிகளுக்கு பரிசாக ஹோம் தியேட்டர் வழங்கப்பட்டது. இதையடுத்து ஹோம் தியேட்டரை வீட்டில் கனெக்ட் செய்து பாடல் கேட்டபோது, திடீரென பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்தது. இதனால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. … Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம் : 9.76 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (ஏப்ரல் 6) தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வும் இன்றுடன் (ஏப்.5) நிறைவு பெறுகிறது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (ஏப்.6) தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாளில் … Read more