ஆதார் மூலம் இனி யுபிஐ கணக்கை ‘ஆக்டிவேட்’ செய்யலாம்..!

டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் ஓடிபி மூலம் யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் முன்னதாக யுபிஐ செயலியில் ஆக்டிவேட் செய்ய டெபிட் கார்டுடன், அதற்குரிய செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணும் தேவை. இது டெபிட் கார்டு கையில் வைத்திருக்காத பல வாடிக்கையாளருக்கு யுபிஐ சேவையை பயன்படுத்த தடையாக இருந்தது. இந்நிலையில், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் … Read more

அண்ணன் – தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்மாமன்.. சொத்துப் பிரச்னை காரணமாக நடந்த விபரீதச் சம்பவம்!

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் மற்றும் தம்பியை சொந்த தாய்மாமன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முனிசிபல் காலனியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன்களான கார்த்தி மற்றும் கௌதம் மற்றும் தாய்மாமா ஆறுமுகசாமி ஆகியோர் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  மீண்டும் இவர்கள்3 பேர் இடையேயும் தகராறு ஏற்பட்டதில் ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக் மற்றும் … Read more

புதிதாக விண்ணப்பிப்போருக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையைப் பொறுத்தவரை, 3 வகையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டள்ளன. அதாவது, க்யூஆர் கோடு, ஹோலோகிராம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. போலி அட்டையை உருவாக்க முடியாதபடி, அதில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே … Read more

பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

பழனி: பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் இருந்து 15 பேர் பழனி கோயிலுக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். உடுமலையில் இருந்து பழனி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நரசிங்கபுரம் மேடு என்ற இடத்தில் நடந்த விபத்தில் நிர்மலா (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.

ஏழையின் கடவுளாக பார்க்கப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் மறைவு! திரளாக வந்து மக்கள் அஞ்சலி!

ஏழைகளின் கடவுள் என்று இரண்டு மாவட்ட மக்களால் போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் உயிரிழந்த சம்பவம், அங்கு சுற்றியுள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக வந்து மௌன அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (58). 1990ஆம் ஆண்டு முதல் கடந்த வாரம் வரை ஏழை எளிய மக்களுக்காகவே மருத்துவச் சேவை செய்து வந்தார். இவர் மேற்கொண்டு வந்த மருத்துவ சேவையால் பல்லாயிரம் … Read more

இன்டெர்மிட்டென்ட்  பாஸ்டிங் உடல் எடை குறைக்க உதவுமா?  புதிய ஆய்வு செல்லும் தகவல்

இன்டெர்மிட்டென்ட்  பாஸ்டிங் உடல் எடை குறைக்க உதவுமா?  புதிய ஆய்வு செல்லும் தகவல் Source link

படிக்க கட்டாயப்படுத்தியதால் 9ஆம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு.!

மதுரை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் வழிவிட்டான். இவரது மகள் மீனாட்சி (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்பதால், பெற்றோர் அவரை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மீனாட்சி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் … Read more

தமிழரை கொடூரமாக தாக்கிய வட மாநில தொழிலாளர்கள்!!

தமிழக இளைஞர் ஒருவரை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கட்டி வைத்து 2 நாட்கள் சித்திரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் காய்கறிகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் தண்ணீர் தொட்டி கட்ட ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் முடிந்து அவர் ஊத்தங்கரை பகுதிக்கு வந்ததாக … Read more

சிவராத்திரியன்று முக்கிய கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்

சிவராத்திரியன்று முக்கிய சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடந்த ஆண்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றதைப் போன்று, கோவை பட்டீஸ்வரர் கோவில், தஞ்சை பெரிய கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாக அவர் தேரிவித்தார். Source link