seeman: 'தமிழ் நாய்டு' வா..? இது வேறயா… சீமான் கடும் ஆவேசம்..!

தமிழ்நாட்டின் பெயரை வேண்டுமென்றே மத்திய பாஜக அரசு திரித்து வெளியிட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளில் சிறப்பானதைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் ‘TAMIL NADU’ என்ற பெயர் ‘TAMIL NAIDU’ என்று வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் பதவிக்கான தமது பொறுப்பையும், கடமையையும் காற்றில் பறக்கவிட்டு, இந்துத்துவ சித்தாந்தத்துடன் … Read more

வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 100 சேவல், 150 கிடாய் வெட்டி 2500 கிலோ அரிசியில் பிரியாணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருமங்கலம்: புகழ்பெற்ற வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பொங்கல் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 100 சேவல்கள் மற்றும் 150 கிடாய்கள் வெட்டப்பட்டு கமகம பிரியாணி பிரசாதமாக  வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ளது வடக்கம்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் ஊரணி கரையில் அமைந்துள்ளது முனியாண்டி சுவாமி கோயில். முழு உருவத்துடன் நின்ற கோலத்தில் இந்த கோயிலில் முனியாண்டி சுவாமி காட்சியளிக்கிறார். இந்த சுவாமியின் பெயரில் நடைபெறும் … Read more

அமைச்சர் உதயநிதியின் அரசு விழாவிற்கு மின் கம்பத்திலிருந்து நேரடியாக திருடப்பட்ட மின்சாரம்?

நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற அரசு விழாவிற்கு எவ்வித அனுமதியும் பெறாமல் மின்சாரம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் அடுத்த பொம்மகுட்டை மேட்டில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு 678 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதனையொட்டி பொம்மகுட்டை மேடு அருகே … Read more

மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை – தொல்லியல் துறை அறிவிப்பு.!

ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, அர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதன் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை … Read more

பதான் ஷாருக்கானாக மாறிய வார்னர்… வைரல் வீடியோ!!

பதான் படத்தினல் ஷாருக்கான் முகத்தை எடிட் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் வெளிவந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஹிந்தி திரைத்துறைக்கு சுவாசம் கொடுத்துள்ளது ஷாருக்கானின் பதான். படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல்கள் … Read more

வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் 200 ஆடுகள், 300 சேவல்கள், 2,500 கிலோ அரிசியில் தயாரான பிரியாணி திருவிழா..!

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் நடைபெற்ற 88வது பிரியாணி திருவிழாவில் 200 ஆடுகள், 300 சேவல்கள் பலியிடப்பட்டு 2 ஆயிரத்து ஐநூறு கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட பிரியாணி, கிராமமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பிரியாணி திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 25க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவின் நிறைவாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் … Read more

“உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பேன்” – நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்: “உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாகவும், சகோதரன் ஆகவும் என்றும் இருப்பேன்” என்று நாமகக்கல் நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.351.12 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் … Read more

மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் உதயநிதி அதிரடி!

நாமக்கல் அடுத்துள்ள பொம்மைகுட்டை மேட்டில் 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குதல், 351.11 கோடி ரூபாய் மதிப்பிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, ரூ.23.70 கோடி மதிப்பிலான 60 முடிவற்ற பணிகளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் சுமார் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார். … Read more

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை

கோவை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில்: எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 … Read more