வனத்துறைக்கு புது வரவு: துள்ளிக்குதித்து ஓடும் மூன்று மான் குட்டிகள்

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை சுதேசி மில் வளாகத்தில் வனத்துறை இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிபட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளித்து வருகின்றனர். வனவிலங்குகள் குணமடைந்தவுடன் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்து விடுவது வழக்கம். இதேபோல் கடந்த காலங்களில் நரி, முள்ளம்பன்றி, எறும்பு திண்ணி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளித்து காட்டுக்குள் விட்டனர்.  இதற்காக வனவிலங்கு சிகிச்சை மற்றும் பாதுகாப்பகத்தினை செயல்படுத்தி வருகிறது.  கால்நடைத்துறை … Read more

விவசாயிகளுக்கு ரூ.8,000.. வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு..?

நடப்பு 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் அல்வா கிண்டி வழங்கவுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கிறது. இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் … Read more

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உண்டியல் திறப்பை யூ-டியூபில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு

தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை கோயில்களின் உண்டியல் திறப்பு நிகழ்வை, கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். எல்காட் நிறுவனம் மூலம் உண்டியல் திறப்பு நிகழ்வை, நேரடி ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மாற்றி, 48 கோயில்களுக்கென பிரத்யேகமாக உள்ள யூ டியூப் சேனல்கள் மூலம் அதனை ஒளிபரப்பு செய்யவும், மண்டல இயக்குனர்கள் அதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  Source … Read more

மத்திய அரசு இணையதளத்தில் எழுத்துப் பிழையுடன் தமிழ்நாட்டின் பெயர்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: மத்திய அரசு இணையதளத்தில் பிழையாக தமிழ்நாட்டின் பெயரை பிழையுடன் பதிவு செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,” தில்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் பெயர் பிழையாக … Read more

வாகன போக்குவரத்து அதிகமுள்ள ஆனைமலை ரோட்டில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆனைமலை: பொள்ளாச்சி  வழியாக வாகன போக்குவரத்து அதிகமுள்ள அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து  ஆனைலை செல்லும் ரோட்டில் விபத்தை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுடும்  என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை,  ஒடையக்குளம், சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  செல்லும் முக்கிய வழித்தடமாக அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து செல்லும்  சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் பகல், இரவு என தொடர்ந்து வாகன  போக்குவரத்து உள்ளது. ஆனைமலை பகுதிக்கு வெளியிடங்களில் இருந்து வரும்  சுற்றுலா பயணிகள் இந்த வழித்தடைத்தையே … Read more

மதுரை: புலம்பெயர்ந்தவர்களின் நிலங்கள் போலி ஆதார் மூலம் அபகரிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக்கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து அவர்களுக்கு உரிய சொந்தமான நிலங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.  மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை முற்றிலும் குறைக்கும் நோக்கிலும், ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காகவுமே ஆதார் எண் திட்டதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில் ஆதார் திட்டமானது நடைமுறைக்கு வந்த ஆரம்பத்திலிருந்தே … Read more

சென்னை பல்கலைக்கழக நிதி நெருக்கடி: துணைவேந்தர் கேள்விக்கு அமைச்சர் பி.டி.ஆர் அதிரடி பதில்

சென்னை பல்கலைக்கழக நிதி நெருக்கடி: துணைவேந்தர் கேள்விக்கு அமைச்சர் பி.டி.ஆர் அதிரடி பதில் Source link

ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்றபோது நேர்ந்த பரிதாபம்.! இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி.!

கரூர் மாவட்டத்தில் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தாரப்புரத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் ராஜா (23). இந்நிலையில் ராஜா இப்பகுதிக்கு அருகில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதைப் பார்த்த ராஜா கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயன்றார். ஆனால் ராஜா கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் … Read more

ஐஐடியில் படித்தவர்களுக்கு 10, 12ம் வகுப்பு சான்றிதழ்.. விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்..!

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்குமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், ‘தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி / என்ஏசி (NTC/ NAC) பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் … Read more