கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாளை சீமான் பங்கேற்பு

சென்னை: “மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் … Read more

அட ஆமாம்பா..! எம்ஜிஆர், விஜய் பயன்படுத்திய வார்த்தைகளுடன் அண்ணாமலை கடிதம்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது; பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள். சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதிரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன். கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் வலைத்தளங்களில் எதிர்வினையாற்றும் போது கவனமாக இருக்க … Read more

’மதவெறிப் பித்துப் பிடித்த’ அண்ணாமலை: திமுகவின் கடும் சாடல் பின்னணி என்ன?

திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் வீடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மலிவான பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபடுவதாகவும், இத்தகைய அநாகரீக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அந்த அறிக்கையில், “பொதுவாக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திமுக பொருளாளர் டிஆர் பாலு பேசியிருக்கிறார். … Read more

50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்

ஈரோடு: 50 ஆண்டுகள் வாழும் அரிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் வனசரகத்திற்கு உட்பட்ட நீர்நிலை பகுதிகளில் வனத்துறை சார்பில் நேற்று ஒரு நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது 50 நீர்நிலை பறவையினங்களும் 36 பொது பறவை இனங்கள் என மொத்தம் 86 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலசைவரும் பறவை இனங்களில் ஒன்றான … Read more

`10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?’ அமைச்சர் பதில்

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பொதுத் தேர்வு தொடர்பாக இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் … Read more

அறிவியலின் வளர்ச்சியால் உலகில் வறுமை குறைந்துள்ளது – ஜி20 அறிவியல் மாநாட்டிற்கான இந்திய தலைவர்

அறிவியலின் வளர்ச்சியால் உலகில் வறுமை குறைந்துள்ளது – ஜி20 அறிவியல் மாநாட்டிற்கான இந்திய தலைவர் Source link

அரியலூர் அருகே சோகம்.. பேருந்து கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர் பலி..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் நோக்கி இன்று காலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை, அரியலூர், பெரம்பலூர் வழியாக துறையூர் செல்லும் இந்த பேருந்து சுமார் 50 பயணிகளுடன் செந்துறை அடுத்த ராயம்புரம் கிராமத்தின் அருகே காலை 9 மணியளவில் வந்தபோது, சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரம் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்தது. தகவலறிந்து சென்ற அரியலூர் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த … Read more

அதிவேகமாக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

அரியலூர் அருகே, சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கிய தனியார் பேருந்து, பக்கவாட்டில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரியலூர் ராயபுரம் பகுதியில் அதிவேகமாக வந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கி, பக்கவாட்டில் கவிழ்ந்தது. பேருந்தை ஓட்டிக்கொண்டே ஓட்டுநர் செல்போனுக்கு சார்ஜ் போட முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். விபத்து குறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், … Read more

சம்பா சாகுபடி | இரு வாரங்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் கதிர் முற்றியிருக்கும் நிலையில் திடீரென நீர்திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது காவிரி படுகை உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேட்டூர் அணை வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே திறக்கப்பட்டதும், … Read more

எடப்பாடிக்கு மத்திய அரசு கல்தா: டெல்லியில் ஓபிஆருக்கு முக்கியத்துவம்!

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி (NDA)சார்பில் பாராளுமன்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று நடைறும் கூட்டத்திற்கு, அ.தி.மு.க சார்பில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் அதிமுக மக்களவைக் குழு தலைவர் என்று ஓ.பி.ரவீந்திரநாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது தொடர்ந்து … Read more