பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!

ஒடிஷாவில் அமைச்சர் மீது ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், நபா தாஸ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார் அவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்: செங்கோட்டையன் நம்பிக்கை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான செங்கோட்டையன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த தேர்தல் என்பது செங்கோட்டையில் வைக்கத்தக்க … Read more

ஈரோடு கிழக்கு தேர்தல்… முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் எப்போ?

தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு , பொதுபனித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை அமைச்சர் உதகை ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் … Read more

கடந்த ஆட்சியில் தரமற்ற சீரமைப்பு பணிகள் பொலிவிழந்த விழுப்புரம் நகராட்சி பூங்கா: மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சிறுவர்கள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பொலிவிழந்து காணப்படும் நகராட்சிப்பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள், சிறுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் நகராட்சியின் அடையாளமாக விளங்குவது நகராட்சி பூங்கா. 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பூங்கா நாளடைவில் முறையான பராமரிப்பில்லாமல் இருந்து வந்தது. நகரிலுள்ள 42 வார்டு பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வந்தது. சிறுவர்கள் விளையாட்டு திடல், நடை பயிற்சி கட்டைகள், நீரூற்று என அனைத்து சிறப்பம்சங்களும் இருந்துவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்கியது. … Read more

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக … Read more

காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் : கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!

ஈரோடு அருகே காரை வழிமறித்து உரிமையாளரை தாக்கி 2 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 21ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த விகாஷ் கோவை நோக்கி, பவானி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த மர்ம கும்பல் விகாஷை தாக்கி இறக்கிவிட்டு, காரில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தை காருடன் எடுத்துச் சென்றதாக விகாஷ் போலீசில் புகாரளித்தார். அடுத்த சில … Read more

சென்னை| திடக்கழிவு மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் ஆய்வு 

சென்னை: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் உர்பேசர் ஸ்மித் நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இந்தப் பணிகளை கண்காணிக்க ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு … Read more

மேட்டூர் அணை: கேட்டை மூடிய அதிகாரிகள்… தண்ணீர் இனிமே அவ்வளவு தான்!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை மிகவும் புகழ் வாய்ந்தது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு எப்படி? அதேசமயம் மழையின் அளவை பொறுத்து நீர் திறப்பில் மாற்றம் ஏற்படும். … Read more

இடைத்தேர்தலே வேணாம்… நோ யூஸ் – மீண்டும் மீண்டும் சொல்லும் அன்புமணி ராமதாஸ்

Erode East Bypolls, Anbumani: தர்மபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சனையாக இருப்பது குடிநீர் பிரச்சனை, வேளாண் பிரச்சனை. ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட மக்களிடம் பத்து லட்சம் கையெழுத்து பெற்று அப்போதயை முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்தோம்.  குடிநீருக்காக போராட்டம் செய்ய … Read more

புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,200 காளைகள் ஆக்ரோஷம்: அடக்கப் பாய்ந்த 600 வீரர்கள்

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்கே திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடை மருத்துவ குழுவினர், காளைகளுக்கு பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு … Read more