தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை : ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ENTகூட்டமைப்பின் சார்பில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் முதன்முறையாக நடைபெற்றது. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு … Read more

காவல்துறை குறித்த அவதூறு பேச்சு | கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

சென்னை: காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும். ஓரிரு … Read more

தமிழ்நாட்டிவ் மதுவிலக்குன்னு திமுக சொன்னதா? கனிமொழி விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் தர்மதுரை திரைப்பட புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கருணாநிதி எம்.பி கூறும்போது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more

அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

வேதாரண்யம்: அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதையில் விரைவில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி- திருத்துறைபூண்டி வரை சுமார் 37 கி.மீ தூரம் அகல ரயில் பாதை அமைக்கபட்டுள்ளது. வேதாரண்யம் தோப்புத்துறை, நெய்விளக்கு குரவப்புலம் கரியாபட்டினம் திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேசன்கள் அமைக்கபட்டுள்ளது. பலமுறை சோதனை ஓட்டமும் நடைபெற்று, முடிந்த நிலையில் இந்த மாதம் இரண்டு முறை இந்த வழிதடத்தில் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு ஒத்திவைக்கபட்டுள்ளது வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட … Read more

மின்சார வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை.. டாடா கார்கள் பிப்.1 முதல் எவ்வளவு உயரும்?

மின்சார வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை.. டாடா கார்கள் பிப்.1 முதல் எவ்வளவு உயரும்? Source link

நடுவானில் உயிரிழந்த விமான பயணி.! போலீசார் தீவிர விசாரணை.!

நேற்று முன்தினம் இரவு அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இருந்து நூற்று முப்பத்து நான்கு பயணிகளுடன் விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து இறங்க தயாராக இருந்தது.  இந்த விமானத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஜித் அலி என்பவர் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக பயணம் செய்து வந்தார். இந்நிலையில், விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்த போது, சஜித் அலிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.  இது தொடர்பாக அவரது சகோதரர் விமான … Read more

3 பேரை கொன்று புதைத்த கொடூர கொலையாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

சென்னை திருவல்லிக்கேணி, அண்ணா நகர், போரூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டாகத்தி ரவுடி கும்பலின் தலைவனை பெங்களூருவில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர்.  மூவரை கொன்று புதைத்த கொடூர கொலையாளி போலீசில் சிக்கிய பின்னணனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கடந்த டிசம்பர் மாதம் திருவல்லிக்கேணி, அண்ணா நகர் மற்றும் போரூர் பகுதிகளில் பட்டாக்கத்தியுடன் திரிந்த 8 பேர் கும்பல் மக்களை அச்சுருத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் … Read more

பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: குஜராத் வன்முறை குறித்த ‘பிபிசி’ -யின் ஆவணப் படம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் நடைபெற்றது. இதில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் உரை குறித்தும் … Read more

''ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு''.. தேசிய அளவில் ட்ரெண்டாகும் சீமானின் முழக்கம்

திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. … Read more

கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் கோடியக்கரை, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், தொண்டியக்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதியில் தீவிர பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கானக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் … Read more