அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தவறுதலாக வேன் மீது மோதல் – முதலிடம் வகித்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காயம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்து வந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் காளையை அடக்கும்போது, போலீஸாரின் பாதுகாப்பு வேனில் தவறுதலாக மோதியதில் காயமடைந்தார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து முடிந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.17) தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

இந்த பக்கம் மூக்கை நீட்டாதீங்க ப்ளீஸ்: சசிகலாவுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் போக்கு முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்பது தெரியாமல் உள்ள நிலையில் இரு தரப்புமே நகத்தைக் கடித்துக் கொண்டு தீர்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளனர். இது ஒருபுறமிருக்க சசிகலாவோ அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என்ற பழைய பாடலை ராகம் மாறாமல் பாடி வருகிறார். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை … Read more

செவ்வாய் பொங்கல் விழா ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில்  கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான விழா நேற்று மாலை தொடங்கியது. நகரத்தார் சார்பில் 914 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். இதையொட்டி சுற்றுலாத்துறை மற்றும் … Read more

இணையத்தில் டாப் வைரலாகும் உதயநிதி, ஸ்டாலின் உருவம் பொறித்த மோதிரம்.! 

விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க இன்று மதுரை வந்தடைந்தார். அப்போது, மதுரையில் இருக்கும் தனது பெரியப்பா மு.க அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வருகையில் வரவேற்க வீட்டு வாசலிலேயே அழகிரி காத்திருந்தார். தம்பி மகனை கண்டதும் இருவரும் கட்டி தழுவி அன்பை பரிமாறிக் கொண்ட புகைப்படம் திமுகவினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இதன் பின் அலங்காநல்லூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் … Read more

சாலை விபத்து, உயிரிழப்புகளில் முன்னிலை வகிக்கும் தமிழகம் – காரணங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 11 முதல் 17-ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. சாலை விதிகளை மதிக்காமல் வாகனகத்தை இயக்குதல், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்டவை காரணமாக அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்தியாவில் … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அன்னலட்சுமிகளின் காளைகள் அட்டகாசம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை தொடங்கி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதிகளவில் பெண்கள் வளர்த்த காளைகள் பங்கேற்று வெற்றிபெற்றன. காணும் … Read more

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி நிறைவு: விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசி பராமரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் கடந்த 2000 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு, ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த 2022 ஜூன் … Read more

கொரோனா பணியில் செவிலியர் உயிரிழப்பு.. அரசிடம் நிவாரணம் பெற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு

கொரோனா பணியில் செவிலியர் உயிரிழப்பு.. அரசிடம் நிவாரணம் பெற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு Source link

குடியரசுதின விழா கொண்டாட்டம் | சென்னை போக்குவரத்தில் அதிரடி மற்றம்!

சென்னையில் குடியரசுதின விழாவை முன்னிட்டு வரும் 20, 22, 24 மற்றும் 26 ஆகிய 4 நாட்களுக்கு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில், “வருகிற 26.01.2023 ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் “குடியரசு தினவிழா” கொண்டாட்டம் கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய மேற்கண்ட … Read more