அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகிறது தெலங்கானா அரசு: தமிழிசை காட்டம்

புதுச்சேரி: தெலங்கானா அரசு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஆளுநரை எதிர்க்கிறது. இது எனக்கு புளித்துவிட்டது. மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலத்தில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றினார். … Read more

புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம் தமிழ்நாட்டை போதைக் காடாக்கி விடும் – அன்புமணி

புகையிலை தடையை நீக்கிய நீக்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு … Read more

ஓசூர்: 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை

தமிழத்தில் குடியரசு தினமான இன்று புதிய சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்துள்ளனர். இந்த சாதனையை வெற்றிகரமாக செய்த மாணவர்களுக்கும், இதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.   ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் … Read more

பழனியில் நாளை அனைத்து இறைச்சி கடைகளும் மூடல்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படுகிறது. பழனி நகராட்சி மூலம் செயல்பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடமும் நாளை செயல்படாது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாற்று சமுகத்தவரை திருமணம் செய்த பெண்ணை கணவர் முன்னே தரதரவென தூக்கிச் சென்ற கொடூரம்!

தென்காசி அருகே மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் பெண் வீட்டார் மணமகன் கண் முன்னே மணமகளை தூக்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்த வினித் என்பவர், அதே பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருமே, ஒரே பள்ளியில் பயின்ற நிலையில் பள்ளியிலிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி இருவரும் … Read more

காஞ்சிபுரம் : கோவிலில் பெண் ஊழியரிடம் அத்துமீறிய அலுவலர் பணியிடம் மாற்றம்.!

கோவில் நகரங்களில் ஒன்று காஞ்சிபுரம். இங்கு உலக புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.  இந்தக் கோவில் வளாகத்தில் செயல் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அலுவலராக வேதமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8 ஆம் தேதி கோவிலில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இதற்கிடையே தன்னிடம் தவறான முறையில் … Read more

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்.. காஞ்சிபுரம் கோவில் அலுவலர் பணியிட மாற்றம்..!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இத்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது வழக்கம். கோவில் வளாகத்தில் செயல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. திருக்கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி, செயல் அலுவலகத்தில் கடந்த எட்டாம் தேதி திருக்கோவில் பெண் ஊழியரிடம் முறைகேடாக நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமாக செயல்பட்டதாகவும் அவர் … Read more

குடியரசு தின கொண்டாட்டம்: எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. உலகின் பழமையான ரயில் இன்ஜின் ‘இஐஆர்-21’. இங்கிலாந்தில் 1855-ல் தயாரிக்கப்பட்ட இது 167 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1909-ம் ஆண்டு வரை இந்தியாவில் இது பயன்பாட்டில் இருந்தது. பின்னர், ஜமால்பூர், ஹவுரா ரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிக பழமையான ரயில் இன்ஜினான … Read more

தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தவர்கள்: அதிமுகவை விளாசிய அமைச்சர்!

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக, மாணவரணி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் அமைச்சர் மஸ்தான் பேசினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக, மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரமணன் துவக்க உரையாற்றினார். இலக்கிய பகுத்தறிவு … Read more