காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி, விவசாயி படுகாயம்.! அச்சத்தில் கிராம மக்கள்.!

கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார். கோவை மாவட்டம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள திருமாலூரை சேர்ந்தவர் விவசாயி சவுந்தர்ராஜன்(58). இவர் நேற்று காலை சங்கிரி கருப்பட்டராயன் கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக காட்டு யானை ஒன்று குட்டியுடன் குறுக்கே வந்துள்ளது. இதைப் பார்த்து அச்சமடைந்த சவுந்தர்ராஜன், யானைகளிடமிருந்து தப்பிக்க மொபட்டை வந்த வழியாக திருப்பியுள்ளார். ஆனால் காட்டு யானை சவுந்தர்ராஜனை துதிக்கையால் தாக்கியுள்ளது. … Read more

இம்மாத இறுதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்! அமைச்சர் கெடு!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். முதலில் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால … Read more

மேட்டுப்பாளையம் தனியார் பள்ளியில் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடிய ரஷ்ய கலைஞர்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்திய -ரஷ்ய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ரஷ்ய நாட்டின் கலாச்சாரம், நடனம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக இந்திய -ரஷ்ய கலாச்சார குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரஷ்யாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலாச்சார நடனங்களை ஆடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு ரஷ்ய கலைஞர்கள் தமிழ் பாரம்பரிய உடை … Read more

இடைத்தேர்தல் வெற்றியில் வாக்கு வித்தியாசத்தைப் பொறுத்திருந்து பாருங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சட்ட மசோதாவை முதல்வர் … Read more

இனிமேலும் அந்த கொடுமை நடக்க கூடாது: கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட இறையன்பு

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். பட்டியலின சமூகத்தவர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதாலே சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள், உள்ளாட்சி இடங்கள் உள்ளிட்டவற்றில் தனித் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த இடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதேபோல் பெண்களுக்கென்றும் சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும். உள்ளாட்சிப் … Read more

புகைப்பட கலைஞர்களுக்கும், திரைத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும் தமிழக அரசின் சூப்பர் ஆஃபர்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் “நான் முதல்வன்” திட்டம்.  இந்த திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, அவர்களது திறமையை வெளிப்படுத்த “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாநில அளவிலான போட்டியில் 14 வயது … Read more

காதலியை சந்திக்க பர்தாவுடன் சென்ற இளைஞர்: எச்சரிக்கை கொடுத்து அனுப்பிய போலீசார்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காதலியை சந்தித்து பேச, பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வருவதை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் … Read more

காதலியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற இளைஞர்.. எச்சரித்து அனுப்பிய போலீசார்..!

கன்னியாகுமரியில், காதலியை சந்தித்து பேச பெண் போல பர்தா அணிந்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வருவதை கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் … Read more

கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் தமிழக மாநில செயற்குழு மற்றும் மையக்குழு கூட்டம் கடலூரில் இன்று (ஜன.20) நடைபெற்று வருகிறது. பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர் கலந்து கொண்டுள்ளனர். செயற்குழுவை தொடர்ந்து, மாலையில் மையக்குழு கூட்டம் நடக்கிறது. ஈரோடு … Read more