பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் 28 மற்றும் 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (BT Deployment Counselling) மட்டும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இக்கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். … Read more

திமுகவுக்கு நன்றி சொன்ன பாஜக: மதுரை போஸ்டரில் உள்குத்து!

அரசியல், சினிமா, குடும்ப நிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன. ஆனால் மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மட்டும் எப்போதும் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்து விடுகின்றன. மதுரை மண்ணுக்கே உரிய நக்கலும் நைய்யாண்டியும் போஸ்டர்களில் வெளிப்படும். அந்த வகையில் மதுரையில் இன்று ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர் ஒன்று சமூகவலைதளங்களில் கண்டண்ட் ஆகியுள்ளது. அரசியல் அரங்கிலும் கவனம் ஈர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று அதிமுகவுக்கு டஃப் கொடுத்து … Read more

கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம் : பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி… பரபரப்பு வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து  தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் … Read more

கரூரில் விஷவாயுதாக்கி 4 பேர் இறந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளருக்கு ஜாமீன்: கரூர் நீதிமன்றம் உத்தரவு

கரூர்: கரூரில் விஷவாயுதாக்கி 4 பேர் இறந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளர் குணசேகரனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடு கட்டுமான பனியின் பொது பாதாளசாக்கடை சாரத்தை நீக்கமுயன்ற போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.  

நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் நகை கொள்ளையான வழக்கில் நேபாளர்கள் கைது!

நடிகரின் மனைவியை கட்டிபோட்டு 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் நேபாளத்தில் இருவரை கைது செய்த நிலையில், மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நந்தம்பாக்கம், டிபன்ஸ் ஆபிசர்ஸ் காலனி, 12 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் எல்லாம் அவன் செயல் திரைப்பட கதாநாயகன் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் (60), இவரது மனைவி ராஜீ (51), கடந்த 10 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது புகுந்த மர்ம நபர்கள் இருவர் அவரது … Read more

முடிவுகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு மந்தமாக உள்ளது- திமுக எம்.பி சண்முகம்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதம் ஆகிவிட்டது. அந்த ஒப்பந்தத்தில் முடிவான பல விஷயங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கூட்டுக்குழு சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பொதுச் செயலாளரான சண்முகம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் “போக்குவரத்து துறையில் கொரோனா காலத்தில் பணியாற்றியவருக்கு ரூ.300 ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. … Read more

சென்னை மக்களே… குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்!!

கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதி மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் 28.11.2022 அன்று காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாற்று ஏற்பாடாக பகுதி-1, 2, 3 மற்றும் பகுதி 4-க்கு … Read more

அரசியல் அமைப்பு சட்டத்தை தகர்க்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்: வைகோ 

சென்னை: “நவம்பர் 26 ஆம் நாள் அரசியல் சட்ட நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு யூஜிசி மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் … Read more

வழக்கறிஞர் பண்பற்ற கேள்வி.. மன்னிப்பு கேட்ட நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

‘இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்திருக்கிறது, புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது’ என்ற பிரபலமான திரைப்பட வசனம் மீண்டும் உதாரணமாகியுள்ளது. நீதிமன்றத்தின் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற போதும் சாமனியர்கள் பலரும் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற அச்சப்படுகின்றனர். விசாரணையின் போது கேட்கப்படும் சில கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் காவல்நிலையம், நீதிமன்றம் செல்வதை தவிர்க்கின்றனர். இது குற்றம் புரிபவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. சட்ட விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும் என்பது ஒரு பக்கம் … Read more