‘அண்ணாமலைக்கு விளம்பர மேனியா நோய்’: கோவையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேட்டி

‘அண்ணாமலைக்கு விளம்பர மேனியா நோய்’: கோவையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேட்டி Source link

திருப்பத்தூர் || நிலை தடுமாறிய அரசு பேருந்து.! 30 பேர் படுகாயம்.! 

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு ஊராட்சி அருகே நாராயணபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வடுக முத்தம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த மாணவர்கள் திருப்பத்தூரில் இருந்து மயில் பாறை வரை செல்லும் அரசு பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இன்று காலை 8 மணி அளவில் நாராயணபுரத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஏறி சென்றனர்.  இந்த பேருந்து, திருப்பத்தூர்-ஆலங்காயம் மெயின் … Read more

பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

திருப்பத்தூர் நகர பகுதி பாஜக துணைத் தலைவராக இருந்த கலிகண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகர பகுதி பாஜக துணைத் தலைவராக இருந்தவர் கலிகண்ணன். இவர், இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ … Read more

“நேரு குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்வீர். இல்லையெனில்…” – ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: “நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக வரம்புகளை மீறி தொடர்ந்து … Read more

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “நேற்று (23.11.2022) தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது. வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ( 24.11.2022 ) வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் … Read more

செல்போனை பறித்துக் கொண்டு ஓடும் இரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்!

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர்களுக்கு கொடுக்க நேற்று சென்னையில் இருந்து அரக்கோணம் வரை மின்சார ரயிலில் வந்த பிறகு, அரக்கோணத்தில் இருந்து வேலூர் டவுன் ஸ்டேசனுக்கு லிங்க் இரயில் மூலம் நேற்று மாலை வேலூர் வந்து கொண்டிருக்கும் போது மகளிருக்கான பெட்டியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் பொது பெட்டியில் ஏரிய இளைஞர் ஒருவர், மகளிருக்கான பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம் … Read more

ஒரு வயது குழந்தைக்கு தவறான சிகிச்சையா? அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவரது ஒரு வயது ஆண் குழந்தைக்கு, நாக்கு உள்ள இடத்தில் சதை துண்டு போல் தொண்டைக்குள் இருந்தது. இப்பிரச்னை குறித்து தனது மகனுக்கு  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். இதில், தொண்டையில் இருந்த அந்த சதை பகுதியை நரம்பு மூலம் இழுத்து கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு தனது மகனை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கடந்த 21ம் தேதி … Read more

மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட சக மாணவர்கள் – சென்னையில் அதிர்ச்சி!

கே.கே நகரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், கே.கே நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படித்து வந்த சிறுவன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு குடிப்பெயர்ந்து இந்த பள்ளியில் சேர்ந்து … Read more

எம்.எல்.ஏ-வின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!

காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் இருந்து சரளை மண் வெட்டி எடுத்து தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மணல் ஏற்றி சென்ற காங்கிரஸ் எம் எல் ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ் சுரண்டை பிள்ளையார் கோவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த … Read more