கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: 3700 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது வயது 45 இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இது பற்றி கல்லாவி போலீசாருக்கும், ஊத்தங்கரை … Read more