கழிவு நீர் தொட்டியில் மேலும் ஒரு பிணம்.. அதிர்ச்சியில் ஸ்தம்பிக்கும் கரூர் நகரம்.! 

கரூர் மாவட்ட பகுதியில் உள்ள காந்தி நகரில் குணசேகரன் என்பவரின் புதிய வீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னர் கழிவுநீர் தொட்டியானது கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் உள்ள சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக அந்த தொட்டியில் மோகன்ராஜ் மற்றும் ராஜேஷ் என்ற தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தொட்டியில் இருந்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகுமார் என்கிற மற்றொரு … Read more

பிரியா மரணம் எதிரொலி: அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசித்து தணிக்கைக் குழு அமைக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சுகாதாரத் துறையினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடியல் பெற்றுள்ளனர். விருப்பத்திற்கேற்ப வெளிப்படைத்தன்மையுடன் பணி … Read more

அரசுப் பேருந்தில் பயணித்த பிடிஆர்… அசந்து பார்த்த பொதுமக்கள்!

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மற்றும் தத்தனேரி பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டு புதிய பேருந்து வழிதடத்தை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அரசு பேருந்தில் ஏறி சிறிது தூரம் பொதுமக்களுடன் அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பேருந்தில் பயணித்து வந்த 50க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், தனக்கும் சேர்த்து 510 … Read more

தமிழகத்தில் அனுமதியின்றி எங்கும் சிலை வைக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் எங்கும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த மனுவில், ‘‘தியாகி இமானுவேல் சேகரன் சிலை வைக்க அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சிலை வைக்க முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். சிறந்த நபர்களின் சிலையை முறையான அனுமதியின்றி வைப்பது ஏற்புடையதல்ல. மனுதாரரின் கோரிக்கை மனு கலெக்டரிடம் நிலுவையில் … Read more

”எங்கள் வாதங்களை முழுசா கேட்கல” – 6 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளன் சிறை நன்னடத்தை, சிறையில் இருந்தபடி கல்வி கற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டியும், ஆளுநர் அவரது விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை முடிவின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்ததையும் சுட்டிக்காட்டியும், உச்ச நீதிமன்றத்தால் அதன் சிறப்பு அதிகாரத்தை … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 6 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு Source link

கருப்பு உருவம் துரத்தியதால் மடியில் இருந்து குதித்த மாணவி.. பகீர் வாக்குமூலம்.! 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் பகுதியில் இருக்கின்ற தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகின்ற ஒரு மாணவி நேற்று விளையாடுகின்ற நேரத்தில் திடீரென பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென கீழே குதித்து இருக்கின்றார். இதில், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்த நிலையில் அவர் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி சாயர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் நேரில் வந்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த நிலையில், … Read more

சேலம் மாநகராட்சியில் சொத்து, தொழில் வரி ரூ.145 கோடி நிலுவை – வருவாயை மீட்டெடுக்க மேயர் நடவடிக்கை

சேலம்: சேலம் மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி மூலம் மட்டும் மொத்தம் ரூ.145 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரம் நிலுவை உள்ளதை, விரைந்து வசூலிக்க ‘பில் கலெக்டர்களுக்கு’ இலக்கு நிர்ணயித்து, மேயர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகராட்சியில் 2.04 லட்சம் கட்டிடங்கள்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் 2.04 லட்சம் வீடு, கடை, வணிக நிறுவனம், அரசு துறை அலுவலகங்கள், கோயில், மசூதி, சர்ச், … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்க கூடாது; பாஜகவிற்கு நோஸ் கட்.!

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவர் கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் … Read more

சவுக்கு சங்கருக்கு கிடைத்தது ஜாமீன்… போடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் என்னென்ன?

சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் … Read more