திருடியதாக 6 பேருக்கு தர்மஅடி: சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு..!

கோவில்களில் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதியில், சாலையோர கோவில்களில் உள்ள பொருட்களை ஒரு கும்பல் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் விரட்டிச்சென்றனர். புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் அந்த ஆட்டோவை வழிமறித்து அதில் இருந்தவர்களை கைகள், கட்டைகளால் சரமாரியாகத் தாக்கினர். … Read more

வீராங்கனை பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படும் – அண்ணாமலை

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த உள்ளதாகவும், 10 வீராங்கனைகள் கால்பந்தாட்ட பயிற்சி பெற பா.ஜ.க. முழு செலவையும் ஏற்கும் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, பிரியாவுக்கு பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என ஆசை இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்ததாகவும், பிரியாவின் பெயர் நிலைத்திருக்கும் வகையில் பா.ஜ.க. … Read more

கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் போற்றும் நிகழ்ச்சி: காசி – தமிழ் சங்கமம் குறித்து எல்.முருகன் கருத்து

சென்னை: காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும் போற்றும் வகையில் நடைபெறுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். உத்திரப் பிரதேசம் மாநிலம் காசியில் நடைபெறும் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் முதல் குழுவின் ரயிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் … Read more

பச்சையப்பன் அறக்கட்டளையில் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது – கோர்ட் அதிரடி

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் தமிழ்நாட்டில் 6 கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் பேராசியர் பணிக்கு தகுதி இல்லாமல் உரிய சான்றிதழ் இல்லாமல் பணம் பெற்றுக்கொண்டு 254 பேருக்கு பேராசிரியர் பணிகள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், அந்த அறிக்கையில் மோசடிகள் இருப்பது … Read more

சாக்லேட் சாப்பிட்ட 4ம் வகுப்பு மாணவர்கள் 23 பேருக்கு மயக்கம்: அரக்கோணம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் பரபரப்பு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சாக்லேட் சாப்பிட்ட 4ம் வகுப்பு மாணவர்கள் 23 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நெமிலி ஒன்றியம் சைனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லோகேஷ் என்ற 4ம் வகுப்பு மாணவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். வகுப்பில் உள்ள சக மாணவர்களுக்கு அந்த மாணவர் சாக்லேட் பகிருத்துள்ளார். இந்நிலையில் சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் 23 பேரும் மயக்கம், வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் … Read more

தென்காசி || இருசக்கர வாகனம் மோதியதில் வாலிபர் பலி.!

தென்காசிக்கு அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாரி. இவர் மகன் சக்திமாரி. இவர் நேற்று இரவு குத்துக்கல்வலசைக்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.  அப்போது, அய்யாபுரம் விளக்கு அருகே சாலையில், இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த சக்திமாரி சம்பவ இடத்திலேயே … Read more

எந்த சிலையும் வைக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில், அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக் கூடாது. அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க உத்தரவிட் வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த … Read more

அரசு பேருந்து நடத்துனரின் கறார் செயலை மன்னித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி..! இருந்தாலும் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே இரு கண்களும் பார்வையிழந்த கல்லூரி மாணவனை டிக்கெட் எடுக்கக்கூறி கட்டாயப்படுத்தியதாக அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை டிக்கெட் எடுக்க கட்டாயப்படுத்திய நடத்துனரை மன்னித்த மாணவனின் மனித நேயம் குறித்து புதுக்கோட்டை அன்னவாசலை சேர்ந்தவர் முகமது பாசில் . இரு கண்களும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரான இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்துவரும் நிலையில், தினசரி கல்லூரிக்கு அரசு பேருந்தில் சென்று வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் கல்லூரிக்கு சென்று … Read more

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மாற்றுத்திறனாளி தாய், மகன்கள் பரிதவிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் கோரையாறு காலனியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளி தாய், மகன்கள் பரிதவித்து வருகின்றனர். ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேவதானம் சாஸ்தா கோயில் அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. … Read more