தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள்: பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு கொண்டு வரப்பட்டு, அதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பிலான 12-வது வருடாந்திர நிதிநிலை மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கிவைத்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் முடிந்துள்ளன. கரோனா நோய்த்தொற்று, கனமழை உட்பட பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தை சீராக … Read more

புது ஷவர்.. புது பாத் டப்.. ஆனந்த குளியல் போடும் வண்டலூர் zoo யானைகள்..!

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கான புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ரோகிணி, பிரக்ருதி ஆகிய யானைகள் ஷவர் மற்றும் நீச்சல் டப்பில் ஆனந்த குளியல் போட்ட வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. பிரபல நிறுவனமான ரெனால்ட் நிசான் தொழில்நுட்ப மற்றும் வணிக நிறுவனத்தின் CSR நிதி கொண்டு வண்டலூர் பூங்காவில் உள்ள 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட யானைகளின் இருப்பிடம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, யானைகளுக்கான கிரால் கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும் யானைகள் ஆனந்தமாக குளிப்பதற்கு ஏதுவாக … Read more

பண மதிப்பிழப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!…

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். அதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன. பண மதிப்பிழப்பு … Read more

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.406 கோடியில் 4,644 புதிய குடியிருப்புகள் – முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.406 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் கண்ணன்கரடு, நேதாஜி நகர், நஞ்சை ஊத்துக்குளி, இச்சிப்பாளையம், குமரன் நகர் பகுதிகளில் ரூ.101.04 கோடியில் 1,176 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. … Read more

காரைக்காலில் சாலையோரத்தில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள் வைக்க தடை

காரைக்கால்: காரைக்காலில் சாலையோரத்தில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், போர்டுக்கள், விளம்பரக் கம்பங்கள் போன்றவற்றை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காரைக்காலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உருவானது மாண்டஸ்: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? எப்போது கரையை கடக்கும்?

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருப்பெற்றது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கில் 640 கி.மீ தொலைவில் உள்ளது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. நாளை நள்ளிரவு வாக்கில் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 – … Read more

கலைஞர் பாணி ரயில் பயணம்: பொதிகை எக்ஸ்பிரஸில் தென்காசி செல்லும் ஸ்டாலின்

கலைஞர் பாணி ரயில் பயணம்: பொதிகை எக்ஸ்பிரஸில் தென்காசி செல்லும் ஸ்டாலின் Source link