கடற்படை பேருந்து மோதியதில் கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி மரணம்; டிரைவரிடம் விசாரணை

கடற்படை பேருந்து மோதியதில் கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி மரணம்; டிரைவரிடம் விசாரணை Source link

30,000 கிமீ தூரம் பயணித்து உணவு டெலிவரி செய்த சென்னை பெண்!!

2018ஆம் ஆண்டு சென்னையில் இன்ஜினியரிங் முடித்த மானசா கோபால் என்ற பெண் காலநிலை மாற்றத்தை கண்டித்து உருவான குழுவில் இணைந்து இதற்கு முன்னரே அண்டார்டிகா சென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் மானசா கோபால் காலநிலை மாற்றத்தால் உலகின் முக்கியமான கண்டமான அண்டார்டிகா பாதிக்கப்படுவதை உலகுக்கு உணர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக வித்தியாசமான யோசனையை முன்னெடுத்த இவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது. விழிப்புணர்வுக்காக அண்டார்டிகா செல்ல இவருக்கு உதவ பிரபல உணவு டெலிவரி நிறுவனமான … Read more

விஜய்யின் ‘வாரிசு’ விவகாரம் | தமிழகத்தில் பிற மொழி படங்களை வெளியிட முடியாது: வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: ‘விஜய் நடித்துள்ள வாரிசு பட வெளியீட்டுக்க் எதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாட்டில் தெலுங்கு மட்டுமின்றி, எந்த பிற மொழி திரைப்படமானாலும் வெளியிட முடியாது’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நடிகர் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் … Read more

விசைத்தறியாளர்கள் ஹேப்பி; அமைச்சர் செம சூப்பர்..தகவல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் வழங்கினர். … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் ஆண்டுக்கு ஒருமுறை மூடப்படுவது ஏன்? பின்னணி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.  இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள்  வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமைகோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் … Read more

விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பு: பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

விகேபுரம்: விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் காலனி 3வது தெருவில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் குட்டை போன்று தேங்கியுள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை … Read more

குரூப் 1: அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியில் ஹால் டிக்கெட்டுகளை கிழித்த தேர்வாளர்கள்!

குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை கிழித்தெறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 18துணை ஆட்சியா், 26துணைக் காவல் கண்காணிப்பாளா், 13வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கென 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு … Read more

கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த மேம்பாலம் – 2 பேர் பலி!!

பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பாலத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். கட்டுமானப் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பாலம் அமைக்கும் போதே இரண்டு முறை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் … Read more

ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது – நடிகை சுகாசினி

ஓடி ஓடி தான் ஒருவரால் சாதிக்க முடியும் ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது என்று நடிகை சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார். குழந்தைகளுக்கான புற்று நோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் ஒன் என்ற அமைப்பு சென்னை ரன்ஸ் என்ற மாரத்தான் என்ற நிகழ்ச்சியை டிசம்பர் 11ஆம் தேதி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் … Read more

தமிழக சுகாதாரத் துறையில் 22,000 பணியிடங்கள் காலி – நடவடிக்கை எடுக்குமா அரசு?

சென்னை: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் மொத்தம் 22,000 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறையின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த 3 மருத்துவ துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகள் தொடங்கி … Read more