கட்சி மாறப்போகிறாரா மாவட்ட தலைவர்? தூத்துக்குடி காங்கிரஸில் மல்லுகட்டு!

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட தலைவருக்கு எதிராக கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். கட்சி மாறபோவதால் தலைமையை விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த காமராஜ் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசனை செய்வது கிடையாது, பணம் வாங்கி கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். … Read more

எடப்பாடியால் ஒன்னும் செய்ய முடியாது – டிடிவி தினகரன் தடாலடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது. அவரது சொந்த ஊரில்கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததுபோல் எடப்பாடி பழனிசாமியால் சந்திக்க முடியுமா. இவர் கட்சியின் … Read more

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினார். இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சியில் 11 பேருக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சியில் 11 பேருக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு Source link

மதுபோதையில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்த நபரை கீழே தள்ளிவிட்ட நடத்துனர்..

திருவண்ணாமலை வந்தவாசியில், மதுபோதையில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்த நபரை, வேறு வழியின்றி நடத்துனர் கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 17ம் தேதி பெங்களூருவில் இருந்து வந்தவாசிக்கு திரும்பிய அரசு விரைவு பேருந்தில் பயணித்த நபர், மதுபோதையில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு 11 மணியளவில் வந்தவாசி பேருந்து நிலையம் வந்தடைந்ததும், அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், அந்த நபர் மட்டும் இறங்காமல் அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது. பேருந்து பணிமனைக்கு … Read more

“மக்களின் இன்றைய தேவை இந்துத்துவ – திராவிட மோதல்கள் அல்ல” – பாமக நிர்வாகி கே.பாலு நேர்காணல்

“ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினியை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அப்படி இருக்கும்போது, அவர் தனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது” என தெரிவித்திருக்கிறார் பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்… பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தச் சட்டம், அரசியல் ரீதியில் பாஜகவுக்கு எத்தகைய … Read more

பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் நடத்துவோம் – டாக்டர்கள் சங்கம்

சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய தீவிர போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; “சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் … Read more

ஒரே நாளில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.700 விலை உயர்வு: பனிக்காலம் துவங்கியதால் பூக்களின் வரத்து குறைந்தது

ஈரோடு : சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை ஒரே நாளில் 700 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ரூ.1575-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாப்பாளையம், பவானிசாகர் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், கேரளா, கர்நாடகா மாநிலம் முக்கிய நகரங்களுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு … Read more

’’பிணத்தைக் காணோம்’’ – போலீசாரை அழைத்து களேபரத்தை ஏற்படுத்திய பிரபல விடுதி நிர்வாகம்

காரைக்காலில் உள்ள பிரபலமான தங்கும் விடுதியில் ஓருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு அதன் நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரைக்கால் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இருந்து வந்த சுற்றுலாப்பயணி தங்கியுள்ளார். அப்போதே அறையிலுள்ள கழிவறை கதவு சரியாக இயங்காதது குறித்து விடுதி … Read more