தனியார் அருங்காட்சியகத்தில் 2 சோழர் கால சிலைகள் பறிமுதல்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல், பழங்கால சிலைகள் இருப்பதாக தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில், டிஎஸ்பி-க்கள் முத்துராஜா, மோகன் தலைமையிலான தனிப்படை போலீஸார், அந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கிருந்த பழங்கால வீணாதாரர் மற்றும் ரிஷபதாரர் ஆகிய 2 வெண்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. … Read more

விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து

மதுரை: விராலிமலை – மதுரை நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் மோதி அரசுப்பேருந்து விபத்திற்குள்ளானது. மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்றிக்கொண்டிருந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது. அரசு பேருந்துக்கு முன்பு சென்ற லாரியும் காரும் மோதிக்கொண்டபோது அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மீண்டும் ஊருக்குள் உலாவரும் காட்டுயானை பாகுபலி

மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரத் துவங்கியுள்ள பாகுபலி காட்டு யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் பாகுபலி யானை நடமாட துவங்கியுள்ளதால் அதனை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுமாக இருந்த பாகுபலி என்ற ஒற்றை ஆண் காட்டு யானையை பிடிக்க வனத் துறையினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் … Read more

மயிலாப்பூரில் தெருவோர கடையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்; வீடியோ

மயிலாப்பூரில் தெருவோர கடையில் காய்கறி வாங்கிய நிர்மலா சீதாராமன்; வீடியோ Source link

#நாகை | சிறைச்சாலை கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கொலை குற்றவாளி!

நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பாலூரான் படுகையைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 30). இவர் கடந்த 22 ம் தேதி தனது கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கொலை விசாரணை கைதி செந்தில் இன்று சிறை ஜன்னல் … Read more

செல்போன் வாங்கித் தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சரஸ்வதி (26). இருவருக்கும் 5 வயது ஒரு மகன் உள்ளார். சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே … Read more

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் 2 தீட்சிதர்கள் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் தந்தை, மகன் என 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் வடக்கு சன்னதியைச் சேர்ந்த தில்லை நாகரத்தினம் மற்றும் அவரது மகன் பத்ரிசன் ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பத்ரிசனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது தொடர்பாக கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண ஏற்பாடுகளை செய்த தந்தை தில்லை … Read more

பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன்: ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை பெரும்பாக்கம், கலைஞர் நகர் முத்துமாரியம்மன் கோயில் 2-வது தெருவை சேர்ந்த சிறுவன் ஆர்யா (14). மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லும் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த … Read more

`ரொம்ப திருப்தியா இருக்கு’- வடசென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். சென்னையில் 608 கோடி ரூபாய் மதிப்பில் 179.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகளின் சார்பிலும் பன்னாட்டு நிதியுதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், சென்னை துறைமுகம், திரு.வி.க.நகர், கொளத்தூர் தொகுதிகளில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். சென்ட்ரல் … Read more