விபத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்

விபத்தால் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் – நந்தினி தம்பதியினரின் இளைய மகன் துர்கா பிரசாந்த் (13). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை (25.09.2022) மாலை பாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவனின் மிதிவண்டி மீது மது போதையில் சென்ற அடையாளம் தெரியாத நபரின் … Read more

’16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’: பொள்ளாச்சி போலீசுக்கு மர்ம கும்பல் கடிதம்

’16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’: பொள்ளாச்சி போலீசுக்கு மர்ம கும்பல் கடிதம் Source link

சிறந்த விவசாயிகளுக்கு பரிசு.. தமிழக அரசு அறிவிப்பு..!

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தை 2021 – 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி அதற்கு நிதியும் ஒப்பளிக்கப்பட்டது. நடப்பாண்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி, மேற்கண்ட 3 இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும் என்றும் கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 இனங்களில் தகுதியான விவசாயிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட அளவில் கலெக்டர் … Read more

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய அக்.9-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது: மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்காக அக்.9-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இதனிடையே, புதிதாக தேர்வு செய்யப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் நேற்று மாலை மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களில் வெளியானது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அடங்கிய அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், திமுகவில் அமைப்பு ரீதியிலான 15- வது … Read more

அக்., 2ல் ஆர்.எஸ்.எஸ், விசிக ஊர்வலம்… ஷாக் கொடுத்த தமிழக போலீஸ்!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்குமாறு மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி கோரப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை … Read more

எடப்பாடி பழனிசாமி விருதுநகர் வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது..!!

விருதுநகர்: எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலீடு செய்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பொதுமக்கள் முற்றுகை

முதலீடு செய்த பணத்தை திருப்பித் தரமால் ஏமாற்றுவதாகக் கூறி கோவில்பட்டி அமுதசுரபி கிளையை பொதுமக்கள் இரவில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் அமுதசுரபி என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இதில் 280-க்கும் மேற்பட்டோர்; வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கு தினம், வாரம், மாதந்தோறும் என வாடிக்கையாளர்களிடம் இந்த நிறுவனம் பணம் வசூல் செய்து வந்ததுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அதற்கான பணத்தினை திருப்பித் தந்த நிலையில் கடந்த 2 … Read more

மாணவர்களே, இன்று மதியம் ஹால் டிக்கெட்.. இணைப்பு உள்ளே இருக்கு..!

8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று (செப். 29-ம் தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவெண், … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019-ம் ஆண்டு நவ.27-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. கணினி வழித் தேர்வு: … Read more

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? தனியார் பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்துகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டாலும், செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று இரவே வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் திட்டமிட்டுள்ளனர். அக்டோபர் 9 ஆம் தேதி வரை விடுமுறைக்கு திட்டமிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். கிட்டதட்ட 9 நாட்கள் விடுமுறை என்பதால், பேருந்துகளில் கூட்டம் அலைமோத இருக்கிறது.  குறிப்பாக சென்னையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்வோர், தனியார் … Read more