இன்று புரட்டாசி அமாவாசை, மகாளய பட்சம்… வழிபட வேண்டிய முறைகளும் கிடைக்கும் பலன்களும்..!!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. இன்று புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், … Read more

என்ஐஏ சோதனை விவகாரத்தில் திமுக தவறான ஓட்டு அரசியல் செய்யக்கூடாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்

திருச்சி: என்ஐஏ சோதனை விவகாரத்தை வைத்து திமுக தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக் கூடாது என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தினார். திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கோயம்புத்தூர், திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் மீது ஒரு கும்பல் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: ரெய்டு பின்னணி என்ன?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளும், அதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் நிகழ்த்தப்படும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் … Read more

விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி 10 நாள் விழா நாளை துவக்கம்

விராலிமலை: விராலிமலை முருகன் கோயிலில் நவராத்திரி 10நாள் விழா நாளை தொடங்குகிறது. விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் 207 படிகள் கொண்ட இம்மலை கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்றளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன. ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் காட்சியளிப்பது இம்மலைக் கோயிலின் தனி சிறப்பாகும். தேசிய பறவையான மயில்கள் இந்த மழைக்குள் தோகையை விரித்தாடி சுற்றி திரிவது இக்கோயிலுக்கு வரும் … Read more

ராகுல் காந்தியே காங்கிரஸை இயக்கும் சக்தி – எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து

புதுக்கோட்டை: காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சியை இயக்கும் சக்தியாக ராகுல் காந்தி திகழ்வார் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால்தான் வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று பாஜக தேசியத் தலைவர் நட்டா கூறியிருக்கிறார். அதேசமயம், கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, மனிதவள மேம்பாடு, தொழில் உள்ளிட்டவற்றில் தமிழகம் மேம்பட்டிருப்பதாக தமிழக ஆளுநர் ரவி புகழாரம் … Read more

ஆ.ராசா விவகாரத்தில் உள்ளடி: ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்!

சென்னை பெரியார் திடலில், ‘60 ஆண்டுகால விடுதலை ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் விடுதலை சந்தா வழங்கும் விழா’ என்கிற தலைப்பில் திராவிடர் கழகத்தால் கூட்டம் ஒன்று கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, யாரெல்லாம் இந்துக்கள் என அவர் தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையானது. அதாவது, மனுஸ்மிருதியில் சூத்திரர்களும் பஞ்சமர்களும் எவ்வாறு வகைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கிப் பேசினார். … Read more

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி: கோவை விரைகிறார் டிஜிபி சைலேந்திர பாபு

கோவை: தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களை தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைகிறார். கோவையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதா என்று டிஜிபி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். என்.ஐ. ஏ. சோதனைகளுக்கு பிறகு கோவை மதுரை உள்ளிட்ட இடஙக்ளில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

சென்னையில் இன்று ‘யாதும் தமிழே’ விழா: 5 தமிழ் ஆளுமைகளுக்கு ‘தமிழ்திரு’ விருதுகள்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 10-ம்ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, ‘யாதும் தமிழே – 2022’ விழா சென்னையில் இன்று (செப்.25, ஞாயிறு) நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய 5 தமிழ் ஆளுமைகளுக்கு ‘தமிழ்திரு’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவை ராம்ராஜ் காட்டன், பொன்வண்டு டிடர்ஜெண்ட் Source link

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஐகோர்ட் சூப்பர் உத்தரவு!

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பின் நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட போதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப … Read more

மாணவர்கள் செய்யும் அட்டகாசம்! பேருந்தை இயக்க அஞ்சும் ஊழியர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றி பாப்பாங்குளம், திருப்புலிவனம், மானாமதி, ரெட்டமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.  அதேபோல திருப்புலிவனத்திலும், செங்கல்பட்டு சாலையில் உள்ள பருத்திக்கொள்ளை என்னும் இடத்தில் உள்ள தனியார் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மற்றும் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்வதற்கு உத்திரமேரூரில் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பேருந்து … Read more