கள்ளக்குறிச்சி கலவர வழக்கு – 4 பேர் மீது குண்டாஸ்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி (34), பெரிய சிறுவத்தூரைச் சேர்ந்த ஷர்புதீன் (38), உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியத்தைச் சேர்ந்த மணி (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லட்சாதிபதி வேலூர் மத்திய சிறையிலும்,  ஷர்புதீன், சரண்ராஜ், மணி ஆகியோர் கடலூர் மத்திய சிறைச்சாலையிலும் அடைப்பு காவலில் உள்ளனர். இவர்கள் வெளியே வந்தால் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் … Read more

வங்கக்கடலில் பேனா சின்னம்: மக்களிடம் கருத்து கேட்க கடற்கரை ஆணையம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு வரையறைகளை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அருகில் ரூ.81 கோடி மதிப்பில் வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கதமிழக அரசு முடிவெடுத்தது. 42 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா வடிவ சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து கடற்கரையில் 290 மீட்டர் … Read more

சசிகலாவை விமர்சிக்கும் திவாகரன் நண்பர்: சூடாகும் டெல்டா பாலிடிக்ஸ்!

அதிமுக உட்கட்சி மோதல் குறித்த செய்திகள் வரிசைகட்டி வந்த நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை ரயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் … Read more

மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. 2001 – 2006 ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் … Read more

மருத்துவப்படிப்பு… பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் இடம் ஒதுக்கீடு செய்ய முடியாது என … Read more

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் இளைஞர் உடல் சொந்த ஊரில் தகனம்: நியாயமான விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியத் தூதர் வைகோவுக்கு கடிதம்

திருச்சி: குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியைச் சேர்ந்த முத்துக்குமரனின் சடலம் நேற்று விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்.முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு செப்டம்பர் 7-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, … Read more

கொடிவேரி அணை: 25 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஈரோடு: கொடிவேரி அணை 25 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் கடந்த 25 நாட்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாககொடிவேரி அணை மூடப்பட்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

சீர்வரிசையுடன் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

குண்டடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 180 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுவாயில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 180 கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்து புடவை, வளையல், மஞ்சள், … Read more

Chennai Power Shutdown: கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, திருவான்மியூர், பூந்தமல்லி பகுதிகளில் இன்று மின்தடை

Chennai Power Shutdown: சென்னையில் 17.09.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, திருவான்மியூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதி : பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பகுதி, சாஸ்திரி நகர், ஓசன்குளம், தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் … Read more