கூடங்குளம் அணு உலையால் புகுசிமா போல் தென் இந்தியாவும் பாதிக்கப்படும் – பூவுலகின் நண்பர்கள்

கூடங்குளம் அணு உலையில் பாதிப்பு ஏற்படுமேயானால் புகுசிமா போல் தென் இந்தியாவும் பாதிக்கப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர்ராஜன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும் அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கழிவுகள் கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே உரிய … Read more

“மாணவி தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது… நீட் தோல்வியால் துவண்டுவிடக் கூடாது” – அன்புமணி

சென்னை: “நீட் தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது; மாணவச் செல்வங்கள் மன உறுதியுடன் செயல்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ”நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு முடிவு … Read more

NEET Exam Result 2022: தமிழில் தேர்வெழுதியவர்கள் அதிகம் ஆனாலும் ரிசல்ட்டில் இப்படியொரு ஷாக்!

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ( Results 2022) இன்று மாலை வெளியாகிறது. நீட் தேர்வு எழுதிய சுமார் 17.78 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட உள்ளது. 30 ஆவது இடம்: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ராஜஸ்தான மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த … Read more

சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடிபில் ( ரெட்பிக்ஸ்) சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக, சவுக்கு சங்கர் … Read more

திருவண்ணாமலை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி மயக்கம்

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கத்துடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 மாணவர்கள், 7 மாணவிகள், 6 ஊழியர்கள் என மொத்தம் 43 பேருக்கு வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேய்ச்சல் கிடைமாட்டு சாண மதிப்பு கூட்டு பொருட்கள்: மதுரை ஏற்றுமதி நிறுவனம் சாதனை

மதுரை: பாரம்பரிய மேய்ச்சலில் வளர்க்கப்படும் கிடை மாடுகளின் சாணத்தை மதுரையில் இயங்கிவரும் தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மாதந்தோறும் 50 டன் மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது. மேய்ச்சல் தொழிலில் இருந்துதான் நாகரிகம் தொடங்குகிறது. வேளாண்மை உள்பட பல்வேறு தேவைகளுக்காக மனிதர்கள் வளர்ப்பு விலங்காக ஆடு, மாடுகள் வளர்த்தனர். மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தற்போது 90,000-க்கும் அதிகமான கிடை மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை பராமரிப்போர் 90,000 பேரை … Read more

பாமகவில் பற்றிய தீ… அன்புமணியால் புலம்பும் நிர்வாகிகள்… கூடாரத்தை கலைக்க முடிவு?

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவதாக மே மாதம் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பல இடங்களில் கூட்டம் கூட்டி பிரச்சாரமும் செய்து வருகிறார். பாமகவின் கீழ் கட்சி மட்டுமில்லாமல் சங்கமும் இயங்கி வருகிறது. அதற்கதற்கு நிர்வாகிகளும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் அன்புமணி ராமதாஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக வன்னியர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த வன்னியர் சங்க … Read more

விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது -மதுரை உயர்நீதிமன்றம்

கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது. அரசியல் மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் இருக்க கூடாது. அதேபோல போட்டியில் பங்கேற்பவர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது. விதிகளை மீறினால் போட்டியை நிறுத்தலாம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருநெல்வேலியைச் … Read more

நெல்லையில் கலைஞர் பெயரில் நூலகம்: அரசு விழாவில் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை: நெல்லையில் அமைய உள்ள பொதியை அரசு அருங்காட்சியகம் அருகே முத்தமிழறிஞர் அறிஞர் கலைஞர் பெயரில் நூலகம் கட்டித் தர வேண்டும் என நெல்லையில் நடந்த சபாநாயகர் அப்பாவு பேசினார். நெல்லையில் இன்று நடந்த அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தி முதல்வர் ஸ்டாலின். இன்று அவர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக உள்ளார். இந்தியாவிலேயே … Read more

கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தீப்பெட்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். திருநெல்வேலியில் இன்று காலை தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். … Read more