கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மளிகை கடை உரிமையாளர் நடராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளி சிறுமிகளின் புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்' – இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவு தினம் இன்று

சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை – ஆதிஅம்மாள் தம்பதியின் மகனாக 1859ஆம் ஆண்டு பிறந்த சீனிவாசன், தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி ஆவார். அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்தவர். ‘கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்’ என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக … Read more

திருடிச் சென்ற செல்போனை நீங்களே பயன்படுத்துங்கள் என திருடியவருக்கு அறிவுறுத்திய உரிமையாளர்!

திருடிச் சென்ற செல்போனை நீங்களே பயன்படுத்துங்கள் என்று திருடியவருக்கு அறிவுறுத்தியுள்ளார் செல்போன் உரிமையாளர். ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் லஸ்ஸி குடிக்க வந்த நபர் ஒருவர் டிஷ்யூ பேப்பரை எடுப்பது போல் டேபிள் மீது இருந்த செல்போனை திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெகுநேரத்திற்குபின் செல்போன் காணாமல் போனதை அறிந்த கடை உரிமையாளர், திருடியவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சிசிடிவி புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்க … Read more

புதுச்சேரியில் முறைப்படி உத்தரவு இல்லாமல் "சர்வீஸ் பிளேஸ்மென்ட்" அடிப்படையில்  பணிபுரியும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள்: ஆளுநரிடம் புகார்

புதுச்சேரி: முறைப்படி உத்தரவு இல்லாமலும் அலுவலக ஆணைப்படியும் “சர்வீஸ் பிளேஸ்மென்ட்” அடிப்படையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பணிபுரியும் பல நூற்றுக்கணக்கான ஊழியர்களை திரும்ப அவரவர் பணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர், தலைமைச் செயலரிடம் மனு தரப்பட்டுள்ளது. துறை செயலரின் உத்தரவின்றி ஆணை பிறப்பித்து அனுப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 43 பேர் அங்கு பணியில் … Read more

எங்கள் ஆட்சியிலேயே 1000 கோடிக்கு ஊழல்… எம்.ஆர். விஜயபாஸ்கரால் அதிமுக அப்செட்

கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு சாலையில் அறிஞர் அண்ணா 114வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு அதிமுக கரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய எம்.ஆர். விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி … Read more

ஆ.ராசா மீது மதவாதிகள் தாக்குதல் நடத்தினால் பொறுக்கமாட்டோம் – சீமான் கொந்தளிப்பு

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. … Read more

புதுச்சேரியில் 16 வயது பெண்னை பாலியல் தொழிலில் ஈடுபத்தியவர்கள் கைது: போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜி மற்றும் அங்கு இருந்த … Read more

"ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால்.." – சீமான் கடும் எச்சரிக்கை

மனுதர்மத்தைச் சாடியதற்காக ஆ.ராசாவை குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என எச்சரித்துள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ”மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. … Read more

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்: சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தமிழகத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனைக் கருவிகளுடன் கூடிய காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (செப்.18) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு போதிய படுக்கை இல்லை. பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி … Read more

10.5% இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்: மருத்துவர் ராமதாஸ் உறுதி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் வன்னியர் இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீர வணக்க நாள் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே .முரளி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, மாநில நிர்வாகிகள் இசக்கிபடையாச்சி, தீரன், பு.தா.அருள்மொழி, என்.டி,சண்முகம், சக்கரவர்த்தி, சரவணன், இளவழகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய … Read more