சென்னையில் ஜூலை 8-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் வரும் 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் வரும் 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து … Read more

’தனித்தமிழ்நாடு கேட்போம்’,’தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம்’.. திமுக Vs பாஜக கருத்து மோதல்

பெரியார் காலத்திலேயே திமுகவால் கைவிடப்பட்ட “தனித்தமிழ்நாடு” என்ற கருத்தியலை மீண்டும் பொது வெளிக்கு கொண்டு வந்திருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. தொடர்ச்சியாக இன்னும் பல எதிர்வினைகளையும் போராட்டங்களையும் கூட பாஜக முன்னெடுக்க கூடும் என்பதால் திமுக எவ்வளவு உறுதியாக தனது கருத்தில் இருக்கப் போகிறது என்பது அக்கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரும். திமுக – பாஜக இடையே மட்டுமல்லாது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கிறது “தனித் தமிழ்நாடு” பற்றிய திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு. பாஜக தலைவர்கள் … Read more

மெக்காவில் தமிழில் உரை; சிகாகோவில் துப்பாக்கிச்சூடு… உலகச் செய்திகள் சில!

Mecca arafat sermon discourse in Tamil, Chicago shooting today world news: இன்று உலக நாடுகளில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். ஃபீல்ட்ஸ் விருது வென்றார் உக்ரைன் கணிதவியலாளர் உக்ரேனிய கணிதவியலாளரான மரினா வியாசோவ்ஸ்கா செவ்வாயன்று மதிப்புமிக்க ஃபீல்ட்ஸ் மெடலின் நான்கு பெறுநர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார், இந்த விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என்று விவரிக்கப்படுகிறது. சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி லொசானில் எண் கோட்பாடு பிரிவின் தலைவராக இருக்கும் … Read more

"பொதுச்செயலாளர் தேர்தல்" உள்ளிட்ட அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் என்னென்ன? வெளியான பரபரப்பு தகவல்.!

வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  * ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்  * தி.மு.க. ஆட்சி தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் * ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான தீர்மானங்கள்  * மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி நடைமுறைப்படுத்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்  * அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் முழுமையாக அனைத்து வகைகளிலும் … Read more

திமுக அரசு 505 வாக்குறுதிகளை டிச.31-க்குள் நிறைவேற்றாவிட்டால் ‘பாதயாத்திரை’ – அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: “தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளையும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார். தேர்தல் சமயத்தில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டிப்பதாகக் கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது அண்ணாமலை பேசியது: “பெட்ரோல், டீசல் வரியை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி … Read more

பக்கெட்டில் விழுந்து இறந்த ஒரு வயது குழந்தை.. விளாத்திகுளம் அருகே பரிதாபம்!

குளியல் அறை வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்த பரிதாப நிகழ்வு விளாத்திகுளம் அருகே நடந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வாதலக்கரை கிராமத்தில் குளியல் அறை வாளியில் விழுந்து மாரிப்பாண்டியன் என்பவரது ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் வாதலக்கரை கிராமத்தை சேர்ந்த மாரிப்பாண்டியன் மாரித்தாய் என்ற தம்பதியின் ஒரு வயது குழந்தை மகாலட்சுமி. நேற்று வீட்டில் மாரித்தாய் வீட்டு … Read more

மீனா கணவர் மரணத்தில் வியாபாரம் செய்வதா? பயில்வானை போட்டுத் தாக்கிய கே.ராஜன்

நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சந்தேகம் கிளப்பிய பயில்வான் ரங்கநாதனை தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக எச்சரித்துள்ளார். 90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்தியாசாகர் என்பரை திருமணம் செய்தகொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். இவர் தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மீனாவின் … Read more

கன்னியாகுமாரி.! பைக் மீது கம்பு தட்டியதால் தடுமாறி கீழே விழுந்த இருவர் மீது கார் மோதி விபத்து.!

கன்னியாகுமாரியில் பைக் மீது கம்பு தட்டியதால் தடுமாறி கீழே விழுந்த இருவர் மீது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் பட்டகசாலியின்விளை என்ற பகுதியில் சுடலை மாடசுவாமி கோவில் திருவிழாவிற்காக பந்தக்கால் அமைப்பதற்கு இருவர், தோளில் வைத்து கம்பு ஒன்று எடுத்து சென்று கொண்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக வந்த பைக் மீது கம்பு தட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் எலும்பு முறிவு … Read more

70 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப கோரி தகராறு.. பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்ற போதை ஆசாமிகள்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெட்ரோல் நிரப்ப மதுபோதையில் வந்த மூன்று பேர், பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர். வர்க்கலா பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்கிற்கு ஆட்டோவில் வந்த 3 பேர், 70 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப கோரியுள்ளனர். அப்போது ஊழியருக்கும், மதுபோதையில் இருந்த நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. CTஇதில், பங்க் ஊழியரை தலையில் அடித்து, நாற்காலியை கொண்டும் தாக்கிய மூன்று பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்றனர். Source link

2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.இந்த சட்டப்படி, “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் … Read more