9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. நடப்பு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு … Read more

கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு

கீழடி: தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வு பணிகளில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் முதல் முறையாக நெல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட தளங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரை … Read more

கொந்தகை ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் நெல்மணிகள் படையல் கண்டெடுப்பு

சிவகங்கை: கொந்தகை புதைவிட தள ஆய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் முதல் முறையாக நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், கொந்தகை புதைவிட தளத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்த போது 74 சூது பவள மணிகள் கிடைத்தன. புதைவிட தள ஆய்வில் முதன் முதலாக இவை கிடைத்துள்ளன என தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் … Read more

ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் – ஹெச்.ராஜா காட்டம்

ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும், இல்லை என்றால் அவர் பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தையை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு ஆதாரங்கள் இல்லை. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக கட்சி அல்லது பிரதமரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை விமர்சனம் செய்யுங்கள். அதற்காக தேசத்தை எதிர்ப்பேன் இந்து மதத்தை எதிர்ப்பேன் என்பது ஏற்றுக்கொள்ள … Read more

ராமசாமி படையாச்சியாரின் 105 -வது பிறந்தநாள்விழா – வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்..!

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் ராமசாமி படையாட்சியார். இவர் தென்ஆற்காடு மாவட்டமான தற்போதைய கடலூரில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். அவர் கடலூர் தொகுதியில்  சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ராமசாமி படையாட்சியார், பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மக்கள்நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார் ராமசாமி படையாட்சியார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி … Read more

புதுச்சேரி | தலைவர்கள் படங்களை முகக்கவசமாக அணிந்து சங்கு ஊதி போராட்டம் நடத்திய பாப்ஸ்கோ ஊழியர்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர், அமைச்சர் என தலைவர்கள் படங்களை முகக்கவசமாக அணிந்து, நிலுவை ஊதியம் தரக் கோரி சங்கு ஊதி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி சட்டப்பேரவை அருகே மூன்றாம் நாள் போராட்டம் ஏஐடியூசி பொதுச்செயலர் சேது செல்வம் தலைமையில் இன்று நடந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சாய் சரவணக்குமார் புகைப்படங்களை முகக்வசங்களாக அணிந்து, கோரிக்கைகளை தீர்க்குமாறு சங்கு ஊதி போராட்டம் நடத்தினர். போராட்டம் தொடர்பாக சேது செல்வம் கூறுகையில், … Read more

மதுரைக்கு வண்டிய திருப்பும் ஐடி பாய்ஸ்… விஸ்வரூபம் எடுக்குப் போகும் தெற்கு!

ஐடி கம்பெனிகளில் வேலைக்கு போக வேண்டும் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு சென்னையும், பெங்களூருவும் தான் முதலில் நினைவில் தோன்றும். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் பெரு நகரங்களில் ஐடி கம்பெனிகளை நிறுவி புதிய புரட்சியை தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த ”டைடல் பார்க்” திட்டத்தை சொல்லலாம். சென்னை தரமணியில் கடந்த 2000ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம்பிடித்தன. … Read more

சவுக்கு சங்கருக்கான தண்டனை அதிகப்படியானது – வேதனைப்படும் சீமான்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். ‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற அவரது வாதம் ஏற்கப்படவேண்டிய ஒன்றுதான். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம் மிகச்சரியானது. … Read more

மழையால் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க குச்சிகள் நடும் பணி தீவிரம்

ஊட்டி: மலர் செடிகள் காற்று மற்றும் மழையில் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு குச்சிகள் நடும் பணி பூங்காவில் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். முதல் சீசனை காண வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பல்லாயிரம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. பூங்கா முழுவதிலும் … Read more

தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவ ஊற்று… எழுத்துலகின் பீஷ்மர் கி.ரா பிறந்தநாள் பகிர்வு!

வற்றாத ஜீவ ஊற்றுகள் என்றென்றும் சுரந்துகொண்டே இருப்பது போல் தான் தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவ ஊற்றாய் திகழ்ந்த ஒரு நூற்றாண்டு சாட்சியம் பிறந்ததினம் இன்று. கி.ராஜநாராயணன், தமிழ் இலக்கியத்தின் ஒரு முதுபெரும் எழுத்தாளர், தனித்துவமான கதை சொல்லி, கரிசல் இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்தவர்.  இலக்கியம் என்றாலே ஒரு உயர்வர்க்க விசயமாகவும் மற்றும் வரலாறு என்றாலே அது மன்னர்கள், போர்கள், தலைவர்களின் போராட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்றிருந்து சூழலில் தான் கி.ரா உதயமானார். அதன்பின் இலக்கியத்தையும், வரலாற்றையும் எளியவர்களுக்குமானது … Read more