‘படிப்பை தொடர முடியாதவர்களை கருத்தில் கொண்டே புதிய கல்வி கொள்கை உருவாக்கம்’ – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை: ‘குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வஹிதா பேகம். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் தொலைதூர கல்வி திட்ட மையத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதால், பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வஹிதா பேகம் உயர் … Read more

தனுஷ்கோடி வந்த 6 பேர் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேஸ்வரம்:  இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் படகில் வந்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 இலங்கை தமிழர்கள்  ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் மணல் திட்டு பகுதியில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்டதாகவும், மணல் திட்டில் இவர்கள் தவிப்பதாகவும் நேற்று அதிகாலை தகவல் பரவியது. தொடர்ந்து மரைன் போலீசார், தனுஷ்கோடி பகுதியில் சென்ற போது அங்கு யாரும் இல்லை. இதற்கிடையில் இலங்கை கடல் எல்லைக்குள் உள்ள மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த 6 பேரையும், அந்நாட்டு கடற்படையினர் … Read more

குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்கினார்!!

காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி அடைந்த 23 கட்சி பிரமுகர்கள் தலைமைக்கு கடிதம் எழுதினார்கள். அதில் முக்கியமானவர் குலாம்நபி ஆசாத். அந்த கடிதத்தில், “பெயரளவுக்கு மட்டுமே நீங்கள் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள். முடிவுகள் அனைத்தையும் ராகுல்காந்தியும், அவரது ஆதரவாளர்களே எடுக்கிறார்கள். மூத்த தலைவர்களுக்கு தற்போது கட்சியில் எந்த மரியாதையும் இல்லை. மேலும் மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் முடிவுகள் எடுக்கும் கலாச்சாரத்தை ராகுல்காந்தி சீரழித்துவிட்டார்” என்று தெரிவித்தார். நீண்ட நாட்களாக குலாம்நபி ஆசாத் அதிருப்தியில் இருந்த நிலையில் கடந்த … Read more

மக்களை மிரட்டும் உண்ணிக் காய்ச்சல் உயிருக்கு ஆபத்து..! அரசு மருத்துவமனை டீன் அதிர்ச்சி தகவல்

செல்லப்பிராணி வளர்ப்போருக்கு ஸ்க்ரப் டைபஸ் என்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வினோத உண்ணிக்காய்ச்சல் பரவி வருவதாக எச்சரித்துள்ள திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, செல்லப்பிரணிகள் வளர்ப்போர் அதிகமாக பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை டீன் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஓரியண்டா சுட்டுகாமொஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுவதாகவும் , காய்ச்சல். தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் என்றும் அவர் … Read more

“பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்க” – அண்ணாமலை

கரூர்: “பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேட்டுக்கொண்டார். கரூர் மாவட்ட பாஜக சார்பில், கரூர் மாவட்டத்தில் காசநோய் பாதித்த 100 பேரை தத்தெடுத்து அவர்களுக்கு ஓராண்டுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று (செப். 27) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது: … Read more

கோவை ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் விலக்கு அளிக்கும் பிரிவில் எப்படி கொண்டுவரப்பட்டது? ஒன்றிய அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எப்படி விலக்கு அளிக்கும் பிரிவில் வருகிறது என்று விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த  நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

பிரீ ஃபயர் விளையாட்டு வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது – நீதிபதிகள் கருத்து

பிரீ ஃபையர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை. இது தொடர்பாக விசாரித்தபோது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ ஃபையர் … Read more

புதுச்சேரி | மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியீடு – காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று முதல் துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொறியாளர்கள், தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி … Read more

பெரியாரை வைத்தே திமுக உடன்பிறப்புகளை டோட்டலாக டேமேஜ் செய்த அண்ணாமலை!

பாஜகவில் ஹெச்.ராஜா எப்படியோ… அவரை போன்று திமுகவில் ஆ.ராசா என்று சொல்லும் அளவுக்கு இருவரும் சர்ச்சையின் நாயகர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஹிந்துக்கள் குறித்து மனு தர்மத்தில் மிகவும் கீழ்த்தரமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக ஹிந்துக்கள் உரக்க குரல் கொடுப்பதே சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்றும் அண்மையில் ஆ.ராசா பேசியிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்துத்துவா அமைப்புகளின் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஹிந்துக்களை இழிவுப்படுத்தும்விதமாக பேசிய ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; … Read more

புதுவையில் இந்து முன்னணி பந்த் 6 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு: அரசு பள்ளிகள், அலுவலகங்கள் இயங்கின

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து முன்னணி அமைப்புகள் சார்பில், நேற்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. மேலும் அரசு பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக, புதுவை பஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்புடன் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பாஜ தொழிற்சங்கம் ஆதரவு காரணமாக டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் … Read more