இந்த படத்துல வரிக்குதிரை இருக்கு… குதிரை எங்கே இருக்கு 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க சூப்பர் பாஸ்!

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தில் காட்டு மாடுகள் இருக்கு, வரிக்குதிரைகள் இருக்கு… அவைகளுக்கு இடையே ஒரு குதிரை மறைந்திருக்கிறது. அதை 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாக தேடும்போது உங்கள் மூளையைக் குழப்பும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது உங்களை தலைமுடியை பிச்சிக்கொள்ளச் … Read more

அதிமுக அலுவலக மோதல் வழக்கு: மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: வேல்முருகன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 92 டாலராக உள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த … Read more

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை தகவல்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.09.2022 மற்றும் 15.09.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  16.09.2022 மற்றும் 17.09.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  18.09.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் 15 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பின்றி திண்டாடும் ரஹ்மத்நகர் மக்கள்-மேலப்பாளையத்திற்கு அடிப்படை வசதிகள் கேட்டு மனு

நெல்லை : பாளை ரஹ்மத்நகர் மக்கள் குடிநீர் இணைப்பு கேட்டும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மேலப்பாளையம் பகுதி மக்களும் மனு அளித்தனர்.நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்சா, மண்டல தலைவர்கள் ரேவதிபிரபு, பிரான்சிஸ், உதவி செயற்பொறியாளர்கள் ராமசாமி, பைஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 5வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகந்நாதன் … Read more

”கேரளாவிலும் கரண்ட் பில் அதிகமாகியிருக்குதானே” – சிபிஎம் அறிக்கைக்கு முரசொலி விமர்சனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அறிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று முரசொலையில் வெளிவந்துள்ள கட்டுரையில் ”மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடுதான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது இதனை கே. பாலகிருஷ்ணன் நன்கு உணர்வார். … Read more

ஆன்லைன் ரம்மிக்கு வருகிறது தடை

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதலளித்த அவர், “இதுதொடர்பாக இரண்டு முறை அதற்கான கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன. இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும், … Read more

ரேஷன் அரிசி கடத்தல்: ஒரே வாரத்தில் இவ்வளவா?

ஒரு வார காலத்தில் 924 குவிண்டால் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. … Read more

பொன்னியின் செல்வனில் சிம்பு நடிக்காததற்கு இவர்கள் தான் காரணம்

மணிரத்னம் இயக்கத்தில் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவிடமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தொடக்கத்தில் … Read more

குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் ஐகோர்ட் கிளை இடைக்கால தடை..!!

மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை என்பதை தூத்துக்குடி எஸ்.பி., ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.