கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: துர்கா ஸ்டாலின் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி: மயிலாடுதுறை  மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் பழமைவாய்ந்த அங்காள  பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி  துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து  கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 2ம் தேதி பூர்வாங்க பூஜைகள், முதல்கால  யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து  ராஜகோபுரம், அம்பாள், பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. பின்னர்  … Read more

அமித்ஷாவின் மும்பை பயணம் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணம், ‘மிஷன் மும்பை 150 பிளஸ்’ மீது ஒரு ஒரு கண் வைத்து பாஜகவை ஒரு மோதல் போக்குக்கு மாற்றியுள்ளது. அவருடைய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் முடிவில் கிடைத்த அரசியல் செய்தி – உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை மும்பையில் முடிக்கப் போராடுவது என்பதுதான். பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி) தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்? அமித் ஷா பி.எம்.சி தேர்தலை வழிநடத்துவது ஏன்? இந்த இரண்டு … Read more

காஞ்சிபுரத்தில் அனுமதி பெறாமல் கோயில் புனரமைப்பு பணி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோயிலில் முறையாக அனுமதி பெறாமல், விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் அமைந்துள்ள அருள்மிகு வீரட்டீசுவரர் சுவாமி திருக்கோயிலில் அனுமதி பெறாமல் திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொன்மையான கல்வெட்டுக்கள் … Read more

வைகை அணை இன்று திறப்பு

சென்னை: தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் இன்று (7ம் தேதி) முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்துவிட அரசு … Read more

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்..!

ஒரத்தநாடு அருகே தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக தெரிவித்து பக்தர்களிடம் பல லட்சம் மோசடி செய்த பூசாரி. இந்த மோசடி தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் பூசாரியாக இருந்து வந்தார். பூசாரி ரமேஷ்குமார், இந்த கோவில் வளாகத்திலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில் … Read more

விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது

வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் எடுத்து செல்லப்படும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் சானடோரியத்தில் இயங்கி வரும் கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஜெர்மன் அனுப்புவதற்காக அனுப்பப்பட்ட 24 டன் பேரல்களில் 9 டன் கெமிக்கல் பேரல்கள் காணாமல் போனது. இது தொடர்பாக அந்த நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை தாம்பரம் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை … Read more

திமுக அரசு கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திமுக அரசு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், தங்களது சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த மனுவினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் அறிவித்தார். கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடந்த வாரம் தனது தொகுதி பிரச்சினைகள் … Read more

கடலூரிலிருந்து விருத்தாசலம் வரை 125 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

கடலூர்: கடலூர் முதுநகரிலிருந்து விருத்தாசலம் வரை 125 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையிலிருந்து திருச்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை, காசி, ராமேஸ்வரம் மற்றும் வட மாநிலங்களுக்கும் கடலூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் … Read more

சிவாஜி சிலையை அரசு திறக்கவில்லை என்றால் நானே திறப்பேன் – சீமான்

வரும் அக்டோபர் மாதம் சிவாஜி பிறந்த நாள் அன்று சிவாஜி சிலையை திறக்க மறுப்பின் தானே முன் நின்று சிவாஜி ரசிகர்களுக்காக சிலையை திறந்து வைப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  ”திருச்சி பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையைத் திறப்பதற்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். மேலும் தாமதித்தால் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அவரது ரசிக பெருமக்களின் முன்னிலையில் நான் முன்னின்று சிலையை திறப்பேன்” … Read more

“அமைச்சர்கள், அதிகாரிகளை திமுக அரசு நம்பவில்லை” – இபிஎஸ் முன்வைக்கும் ‘குழு’ விமர்சனம்

கோவை: “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழுக்கள் அமைத்துவிட்டார். இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்துவிடலாம்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியது: “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார். இந்த அரசங்கத்துக்கு … Read more