2 பேருமே இன்றைய முன்னணி ஹீரோஸ்: அடையாளம் தெரிகிறதா?

நடிகர் சூர்யா திரைத்துறையில் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது தம்பி கார்த்தி அவர்களின் சிறுவயது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த முன்னனி ஹீரோக்களின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர்களை அடையாளம் கண்டு அக மகிழ்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. பின்னர் நந்தா, காக்கா காக்கா, கஜினி மற்றும் சிங்கம், சிங்கம் 2 போன்ற வெற்றிகரமான படங்களில் … Read more

அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு அலுவலகத்தில் புகை பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் BDO-வாக பணியாற்றி வருபவர் சௌந்தரராஜன். இவர் மக்கள் அதிகம் வந்துசெல்லும் அலுவலக வளாகத்தில் புகை பிடித்ததாக புகைப்பட ஆதாரத்துடன் ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார்     Source link

சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியில் அமைச்சரின் உறவினர் தலையீட்டை தடுக்கக் கோரி வழக்கு: போலீஸ் பதிலளிக்க உத்தரவு

சென்னை: நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணியில் வேளாண் துறை அமைச்சரின் மைத்துனர் தலையீட்டை தடுக்கக் கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் உள்ள வாக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், இந்த ஆண்டுக்கான கொள்முதல் பணிகள் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது.தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வத்தின் மைத்துனரான ஆர்.கனகசபை என்பவர் … Read more

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலையை ஆக்கிரமிப்பு விவகாரம்..!- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா? எனஅறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்படும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாகஅனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தையே தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இடத்தை காலி … Read more

பெரும்பாறை அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பயணிகள் காயமின்றி தப்பினர்

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே, சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 2 பஸ்களில் இருந்த 70 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவிலிருந்து, தாண்டிக்குடிக்கு நேற்று அரசு பஸ் ஒன்று கிளம்பியது. பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் தாண்டிக்குடியிலிருந்து வத்தலக்குண்டுவுக்கு மற்றொரு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பெரும்பாறை அருகே, சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் கோழிஊத்து பகுதியில் உள்ள வனத்துறை தீ … Read more

ரூ.2க்கு இட்லி, ரூ.3க்கு தோசை! போட்டி போட்டு விற்கும் ஹோட்டல்கள்.. இப்படியொரு கிராமம்!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் தற்போதைய கடும் விலைவாசி உயர்விலும் ரூ 2க்கு இட்லியும், ரூ3க்கு தோசையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதிலும் யார் குறைந்த விலைக்கு விற்பது என தோசை கடையினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்தளவுக்கு பல கடைகள் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றன. கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம் ரூ.5-க்கு பெரிய அளவிற்கு தோசையை சாம்பார், தக்காளி, தேங்காய் இரண்டு சட்னிகளுடன் விற்கபடுகிறது. … Read more

ஈரோடு.! மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் கணவர் தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நவீன்குமார்(30). இவரது தாமரைசெல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நவீன் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தாமரைச்செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நவீன்குமார் தாமரை செல்வியை … Read more

மதுரையில் வெள்ள அபாயம்: வைகை அணையில் நீர் திறப்பு தற்காலிக நிறுத்தம்

ஆண்டிபட்டி: மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 70 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து … Read more

பெண்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்கள்… ஆண் வர்க்கத்தை புறக்கணிக்கிறதா திராவிட மாடல் அரசு?

முதல் கையெழுத்து: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் முக்கியமானது. கிராமங்களில் இருந்து அருகில் உள்ள சிறுநகரங்கள், மாநகரங்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்துக்கு தினந்தோறும் பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பெண்கள், அரசுப் கல்லூரிகளில் பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் என மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்துக்காக மாதாந்தோறும் … Read more

கொரோனாவால் இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

ராமநாதபுரம்: கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக பஸ், ரயில், விமானம் உள்பட அனைத்து வகை போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கை வழிகாட்டல் நெறிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. முன்பதிவு ரயில் இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி தொலைதூர ரயில்கள் முதற்கட்டமாக இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்கள் என இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் … Read more