ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்: ஜெயக்குமார்

சென்னை: “ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி பாஜக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழச்சியில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அதிமுக முன்னாள் … Read more

தொழிலதிபரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் – 6 மணிநேரத்தில் மடக்கிய போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை புதுக்கோட்டை போலீசார் 6 மணி நேரத்தில் கைது செய்து கடத்தப்பட்ட தொழிலதிபரையும் மீட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(67). இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்ததாரராகவும் அப்பகுதியில் தொழிலதிபராகவும் உள்ளார். இன்று காலை 5 மணிக்கு இவர் வழக்கம்போல் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை சாலையில் நடை பயிற்சி … Read more

தட்ட கீழ போட்டு எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம்…. இன்றைய கலாய் மீம்ஸ்

சின்த்தரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் கூட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். இதனால் சேனல்களில் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது தொடர்ந்து வருகிறது. என்னதான் சின்னத்திரை நிகழ்ச்சிகள் அதிகமான ஒளிபரப்பானாலும் ஒரு சில நாட்களில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவதுண்டு. அப்போது ரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பை பெறுவது மீம்ஸ்கள். … Read more

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி.!

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேரை விடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன்.  இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! … Read more

அருந்ததியர் குடியிருப்புக்கு சென்று மாணவர்களுடன் டீ குடித்துக்கொண்டே கலந்துரையாடிய முதலமைச்சர்

உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி நாமக்கல் சென்றுள்ள முதலமைச்சர், மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது கொங்கு நாட்டின் பாரம்பரிய நடனமான பெருச் சலங்கை, வள்ளிக்கும்மி ஆட்டத்தை பார்த்து ரசித்தார். அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்புக்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் முதலமைச்சர் தேநீர் அருந்தினார். அரசின் திட்டங்கள் குறித்து அப்பகுதி … Read more

தமிழகத்தில் புதிதாக 2,533 பேருக்கு கரோனா; சென்னையில் 1050+ பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,400, பெண்கள் 1,133 என மொத்தம் 2,533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1059 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 80,103 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 28,758 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,372 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் … Read more

கோவை: 3 வயது மகளுக்கு "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் பெற்ற பெற்றோர்!

கோவையில் முதன்முறையாக தனது மூன்றரை வயது மகளுக்கு எந்தவித சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழை ஒரு தம்பதியர் பெற்றுள்ளனர். கோவை கே.கே.புதூரை சேர்ந்த நரேஷ் கார்த்திக் – காயத்ரி தமபதியினருக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தனது 3½ வயது மகளுக்கு மதம், ஜாதி சாராதவர் என்ற சான்றிதழை வருவாய்துறை மூலம் பெற்று உள்ளனர். குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலை வாய்ப்பு என அனைத்திற்கும் சாதி சான்றிதழ் அவசியமானது என்பதால் வருவாய் … Read more

என் மூச்சு உள்ளவரை நடித்துக்கொண்டே இருப்பேன் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நாசர்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாசர். 1985ம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நாசர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்ளுடன் இணைந்து வில்லன், குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாது ஒரு சில திரைப்படங்களையும் இயக்கியுள்ள நாசர் தற்போது  நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும், அவர் தற்போது நடித்து வரும் படமே அவரது கடைசி படம் என்று வலைதளங்ளில் … Read more

செங்கல்பட்டு || வேலை இல்லாத விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

வேலை இல்லாத விரக்த்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்  ஜெனிபர்.  இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த மே மாதம் முதல் அவர் வேலையை விட்டதாக தெரிகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று அவர் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் … Read more

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க இன்று சென்னை வருகை.!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க இன்று சென்னை வருகிறார். கடந்த மாதம் 25 ஆம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் அவர் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆதரவை நாடி அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சென்னையிலும் அதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அவர் ஆதரவைத் திரட்டுவார். சென்னையில் அதிமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தும் தமது ஆதரவைக் … Read more