சென்னையில் பொது மக்களுக்கு பாதுகாப்பான பூங்கா: கருத்து கேட்கும் மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள பூங்காக்களை பொது மக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, பூங்காத் துறையின் சார்பில் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் தனியாரிடமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களை பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது தொடர்பாக … Read more

ஆ.ராசா சர்ச்சை பேச்சு… அண்ணாமலை பகிர்ந்த வீடியோ… கொதிப்படைந்த இந்துக்கள்!

பாஜகவின் ஹெச்.ராஜா எப்படி சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவரோ, அவரை போன்றே திமுக எம்பி ஆ.ராசாவும் தமது பேச்சுகளால் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது அவர், திமுகவின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘தனித் தமிழ்நாடு கேட்ட பெரியாரை ஏற்றுக் கொண்ட திமுக, அவரது இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்…’ என்று … Read more

ராசிபுரம் அருகே அத்தனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் நெடுஞ்சாலையில் புராண கால சிறப்பு கொண்ட அத்தனூர் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கண்ணைக்கவரும் விதமாகவும், மனதை ஈர்க்கும் வகையிலும் புதிய கொடிமரமும், ஒரே கல்லால் கொடிமர கற்பூர பீடமும் அமைக்கப்பட்டு, அம்மன் அருளாட்சி புரிந்து பக்தர் களுக்கு … Read more

மின் கட்டண உயர்வு விவகாரம் – தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்கவேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி … Read more

#சென்னை | கழிவறையில் முக்கால் கிலோ தங்கம் : உள்ளாடையில் தங்கச்சங்கிலி!

துபாய் நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த இன்டிகோ விமானத்தின் கழிவறை தட்டின் பின்புறம், பசை வடிவில் 740 கிராம் தங்கம் கடத்தப்பட்டு வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு ரூ.33.15 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய அஷ்பேக் ஹாசன் என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அவரின் மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம், உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தங்கச்சங்கிலி … Read more

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி செப்.16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் 16-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” விடியும், விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த திமுக அரசு. எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக … Read more

எம்.பி. தொகுதிகளை உயர்த்துவதில் பாரபட்ச நடவடிக்கை..! – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்..!

மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து எம்.பி. தொகுதிகளை உயர்த்துவது பாரபட்ச நடவடிக்கை என தமிழக தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் “ உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், அதைவிடப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் பிரிக்கப்படவில்லை. இதற்கு பா.ஜ.க.வின் சுயநல அரசியலே காரணம். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பொருளாதாரத்தை உயர்த்தி வளர்ச்சிப் … Read more

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது: சீரமைக்க கோரிக்கை

வேலூர்: வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் பக்கவாட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நாட்டில் உள்ள தரைக்கோட்டைகளில் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோட்டையாக வேலூர் கோட்டை விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையில் பல்வேறு கலை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில … Read more

பஸ்ஸில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை தாயென நினைத்து ஓடிய குட்டிக் குதிரை – பார்த்தோர் நெகிழ்ச்சி

கோவையில் பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த குதிரையின் படத்தை பார்த்து நிஜ குதிரை என நினைத்து பின்னாலேயே ஓடிய குட்டிக் குதிரை காண்போரை மனம் உருக வைத்தது. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்குச் சென்றதால் அதனை பிரிந்து குட்டிக் குதிரை தாய்க் குதிரையை தேடி வந்தது. … Read more

“சில மாநிலங்களைப் போல குடிசைகளை மறைக்கும் மாடல் ஆட்சி அல்ல இது” – கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், “கொளத்தூர் தொகுதி என்றால் எனக்கு ஒரு மகிழ்ச்சி வந்துவிடும். மூன்று முறை என்னை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களில் ஒருவனாக நினைத்து, என்னைத் தொடர்ந்து வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களைச் சந்திக்க வரும்போது எனக்கு மகிழ்ச்சி தானாக வந்துவிடும், ஒரு எழுச்சியும் வந்துவிடும். 197ல் குடிசை … Read more