திருத்தணியில் 100 ஜோடிகளுக்கு திருமணம்: உறவினர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்!

திருத்தணி முருகன் கோவில் புதுமண ஜோடிகளும், அவர்களது உறவினர்களும் ஒரே நேரத்தில் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் முருகன் கோவிலில் முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்வார்கள். இதனால், முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் … Read more

வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

சென்னை: “தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரானாரின் வழிநடப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம். தற்சார்பு – தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக சென்னை துறைமுக வளாகத்தில் வ.உ.சியின் சிலைக்கு … Read more

21 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (05.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, … Read more

ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்: புதுமைப்பெண் திட்டத்தை துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18- ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ‘அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களது … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்

கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் tஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள், தங்களது ஆதார் … Read more

உலக முதுகுத் தண்டுவட காயமடைந்தோர் தினம் – தன்னம்பிகையோடு வலம்வரும் கருணாகரன்

முதுகுத் தண்டுவடம் காயமடைந்தோர் நாளாக செப்டம்பர் 5-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் வித்தியாசமானவர்கள். இவர்கள் மற்ற மாற்றுத் திறனாளிகளைபோல் அல்லாமல் சக்கர நாற்காலியில் மட்டுமே பயணிக்க முடிந்தவர்கள். சக்கர நாற்காலி இல்லாமல் இவர்கள் எங்கும் செல்ல முடியாது. மற்றவர்கள் துணை இல்லாமலும் இவர்கள் பயணிப்பது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு … Read more

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 35-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ த.வேலு, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா … Read more

ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் நம்பிக்கை: டெல்லி போடும் கணக்கு இதுதான்!

அதிமுக உட்கட்சி மோதல் தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. ஜூலை 11 பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஓ.பன்னிர் செல்வம் தரப்புக்கு சாதகமாக இருந்தது. இதனால் தரப்பு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இதனால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சிக்கல் இல்லை என்ற நிலை உருவானது. நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்த நிலையில் … Read more

காற்று மாசு: டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம்!

சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட சி.எம்.எஸ்.ஆர் எனும் ஆலோசனைக் குழு அண்மையில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இக்கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என்கின்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் … Read more

கம்பத்தில் நாட்டுவெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் வெடிபொருள்கள் விற்பனையை கண்காணிக்க வேண்டும்-சமூகஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம் : கம்பத்தில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் வெடிமருந்து மற்றும் வெடிபொருட்கள் விற்பனைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் மணல்,மண்,நீர் என அனைத்து இயற்கை வளங்களும் அள்ள அள்ள குறையாமல் மாவட்டத்தில் கொட்டிகிடக்கிறது. மேலும் தேனி மாவட்டத்தில் மட்டும் 150 குவாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கேரள பதிவெண் கொண்ட லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. கேரளாவில் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை … Read more