'இதை செய்தால் நகைக்கடனை உடனே தள்ளுபடி பன்னிடலாம்' மக்களுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர்.! 

இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்பொழுது, “ரூ.3969 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லட்சம் பேருக்கு 5 சவரனுக்கு உட்பட்டு நகை கடன் ரத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரத்தை கொடுக்காத காரணத்தால் கடனை தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் நிலுவையில் இருக்கிறது. அந்த நபர்களும் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு உடனடியாக … Read more

7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி..!

ரஷ்யாவில், பள்ளிக்கூடத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்; 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இசேவ்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளிக்கூடத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கூடிய கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கிக்கிச் சூடு … Read more

குலசேகரபட்டினம் தசரா விழாவில் நடிகர்கள் பங்கேற்கலாம்; ஆபாச நடனம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: குலசேகரபட்டினத்தில் இன்று தொடங்கி 10 நாள் நடைபெறும் தசரா கலை நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம், ஆனால் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பத்து நாட்களும் குலசேகரபட்டினம் முழுவதும் பல்வேறு குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் சினிமா, சின்னத்திரை, நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்பது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சிகளில் ஆபாசம் அதிகமாக … Read more

கோர்ட்டுக்கு போன திருமாவளவன்… நடக்குமா ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த பல்வேறு நிபந்தனைகளை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக் … Read more

சாதி ரீதியாக கொடுமை! கலெக்டர் ஆபீசுக்கு பெட்ரோல் பாட்டிலுடன் சென்ற முதியவர்!

Tamil Nadu News: உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் இன்று வழக்கம் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது எராளமான பொதுமக்கள் மனுக்களுடன் வந்தனர். அதில் 75 வயதுடைய முதியவர் ஒருவர் பையில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். சந்தேகமடைந்த போலிசார் அவரது பையை சோதனை செய்த போது பெட்ரோல் பாட்டில் இருப்பதை கண்டு பிடித்ததுடன் அதனை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்பொழுது அவர், கோத்தகிரி அருகே உள்ள … Read more

நெல்லை மாவட்ட காவல்துறைக்கு மண்டல ஜிஎஸ்டி உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து

மதுரை: நெல்லை மாவட்ட காவல்துறைக்கு மண்டல ஜிஎஸ்டி உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 2013-17 வரை வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசுக்கு ரூ.18.65 லட்சம் ஜிஎஸ்டி வரி விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கிகளுக்கு எடுத்துச் சென்ற பணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு சேவை கட்டணம் செலுத்தும் படி அனுப்பிய நோட்டீசுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

’பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்’ – சமூக ஊடகங்களில் புகார் பதிவிட்ட ஜர்னலிசம் மாணவி!

ஜர்னலிசம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் தனியார் கல்லூரியில் ஜர்னலிசம் படித்து வரும் மாணவியை உபர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். தோழியுடன் நேற்று இரவு உபர் ஆட்டோவில் வந்தபோது தவறாக நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் விசாரிக்க பெண் போலீஸ் இல்லாமல் தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் வந்து … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், … Read more

மாதம் ரூ.50,000 சம்பளம்.. கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் வேலை..!

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Marketing Manager காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள் தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 15-9-2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம்: … Read more

மதுரை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: மேலும் ஒருவர் கைது

மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் அக்குபஞ்சர் மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டார். மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ஏற்கெனவே மதுரை சம்பட்டி புரத்தை சேர்ந்த உசேன், நெல்பேட்டை சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வடக்கு வாசல் மாப்பாளையத்தை … Read more