#சென்னை || மகள் கணவனை பிரிந்து வாழ்வதால் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்.. !

மகள் கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன உளைச்சலில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம், நடேசன்நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் தூத்துக்குடியை சேர்ந்த மதுசூதனரெட்டி (வயது 69) என்பவர் தனது மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more

ஆக. 28-ல் திருச்சியில் ஈஷா சார்பில் நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி

சென்னை: ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (ஆக 25) நடைபெற்றது. இதில் ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: “நமது வாழ்வில் அன்றாடம் நாம் … Read more

மெரினாவில் பேனா நினைவு சின்னம்…! – அனுமதி அளிக்குமா மத்திய வல்லுநர் குழு..?

மறைந்த முன்னாள் முதல்வர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது . இது மாநிலம் முழும் பேசு பொருள் ஆகி பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய வல்லுநர் குழு சென்னை மெரினாவில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க ஆய்வு நடத்தி உள்ளது. சென்னை மெரினாவில் சுமார் 137 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் … Read more

தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள். இவருக்கு வயது 74 ஆகும். இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் எனது கணவர் குப்புசாமி கடந்த மாதம் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார். மூத்த மகன் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இளைய மகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இவர் தனது தந்தை இறப்புக்கு கூட வரவில்லை. ஆனால் … Read more

மூன்று வாரங்களாக சுருளி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியருக்கு தடை நீடிப்பு

கம்பம்: சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மூன்று வாரங்களாக நீடிப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். சுருளி அருவிக்கு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு ஊர்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில் கேரளா மற்றும் கேரளாவையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதிகளான தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், பாளையம் மற்றும் சின்னமனுரில் தென்மேற்கு பருவமழை … Read more

அவலம்! பயன்பாட்டில் இருந்த அடிபம்பை மூடி சிமெண்ட் சாலை போட்ட கிருஷ்ணகிரி ஒப்பந்ததாரர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முல்லை நகர் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த அடிபம்பை மூடிவிட்டு சிமெண்ட் சாலை போடப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியுற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகர் கிராமத்தில் சின்ன திருப்பதி கோவில் முதல் குருசாமி கொட்டாய் வரையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் சுமார் 6 லட்சம் மதிப்பில் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. என்.ஆர்.ஜி.எஸ் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின்போது சாலையோரத்தில் பயன்பாட்டில் … Read more

BHEL Jobs; பெல் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

BHEL recruitment 2022 for 25 Diploma, Engineering Graduate Apprentices apply soon: தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசி தேதியாகும். இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருமயம் பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள … Read more

கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலணிகளை உற்பத்தி செய்திடும் தொழிற்சாலையிலிருந்து நேற்று மாலை, வேலை முடிந்தபின் 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேணும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர. இதில் படுகாயமடைந்த 6 … Read more

“அரசு மருத்துவர்கள் இடமாற்றம், பதவி உயர்வில் முறைகேடு” – புகார்களை அடுக்கும் சட்டப் போராட்டக் குழு

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கான இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி கேட்டும், அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்பட வலியுறுத்தியும், வரும் செப்.28-ம் தேதி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிச்சை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு … Read more

வைகோ 56: துரை வைகோ எடுக்கும் முக்கிய முன்னெடுப்பு!

வைகோ பொதுவாழ்வில் அடியெடுத்து 56 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் குறித்த ஆவணப்படம் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் முக்கியமானவர் வைகோ. மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்க அரசியலில் ஈர்க்கப்பட்டு களத்துக்கு வந்தவர். திமுகவில் இருந்தபோதும் மதிமுகவை தொடங்கிய பின்னரும் தமிழ்நாட்டு நலனுக்காக, தமிழ் ஈழ மக்கள் நலனுக்காக தொடர்ந்து பேசி வருகிறார். மேடைகளில் கருப்பு துண்டை சரி செய்துகொண்டே அவர் பேசும் பேச்சுக்கு கட்சி தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர். வயது முதிர்ச்சி காரணமாக … Read more